ராமானுஜ அனுயாத்ரா பகுதி
2
அகோபிலம்
சென்ற பகுதியில் நாங்க பஸ்ல கடப்பாவில் இருந்து அகோபிலம் போறோம்ன்னு நினைச்சுண்டு இருக்கோம்ன்னு முடிச்சேன். ஆனா நாங்க போனது,
வழியிலே இருக்கிற “அல்லகடா”
அப்படீங்கிற ஊர்.
அகோபிலத்தில் இருந்து 25 கிலோமீட்டர் முன்னாலேயே உள்ள ஊர்
எங்க பஸ் வாலண்டியர் (ஒவ்வொரு பஸ்ஸுக்கும் இரண்டு பேர் வருவாங்க, அவங்க சொல்லறதான் நாங்க கேட்கணும்)
“எல்லோரும் கீழே இறங்கி குளிச்சுட்டு காலை உணவு எடுத்துக்கொண்டு மீண்டும் பஸ்ஸில் ஏறிக்கொள்ளுங்கள், அகோபிலம் போய் எல்லா இடங்களையும் பார்ப்போம்” என்றுசொல்லி விட்டு நாங்கள் ஏதும் கேள்வி கேட்பதற்கு முன்னறே கீழே இறங்கிச் சென்று விட்டார்.
கீழே இறங்கிப் பார்த்தால் கல்யாண மண்டபம்.
இதற்கு முன்னறே வாலண்டியர்,”எல்லா பெட்டிகளையும் இறக்கக்கூடாது,
மாற்றுத் துணிகளை மட்டும் தான் எடுத்துக் கொள்ளவேண்டும் “ என்று ஆணையிட்டுவிட்டார்.
உள்ளே குளிக்கப் போனால், ஆச்சர்யம்.ஆம், ஏற்கனவே ஐந்து பஸ்களில் இருந்து இறங்கிய 200 பேர்களுக்குமேல்,
உள்ள நண்பர்கள் பாத்ரூமுக்கும் குளியல் அறைக்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள் என்றால் பாருங்கள்.
கல்யாண மண்டபத்தில் மொத்தமே நாலு பாத்ரூம்தானாம். சரிதான், எப்ப நாங்க ஸ்நாநம் பண்ணி பெருமாளை
சேவிக்கப்போறோமோ தெரியல. ஒருவழியா காலைக்கடன் களை முடித்து விட்டு டிபனையும் முடித்துக்கொண்டு பஸ் ஏறி அகோபிலம் நோக்கிப் பயணமானோம்.
“உங்களுக்கு எங்க தங்க அறைகள் கொடுத்தார்கள்”, நீங்க கேட்கிறது காதுல விழறது. பொறுங்க சொலறேன்.
அங்கு என்ன பார்த்தோம்,
பார்ப்போம் அடுத்த பகுதியில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக