வியாழன், மார்ச் 13

ஸ்ரீ கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீவேதநாயகப்பெருமாள் ஸன்னதி ஸ்தல புராணம்.

ஸ்ரீ கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீவேதநாயகப்பெருமாள் ஸன்னதி ஸ்தல புராணம். வளையமாதேவி, ஸ்ரீமுஷ்ணம் அருகில்;

முகப்புத் தோற்றம்

கோயில் வாசல்

துவயஸ்தம்பம்
கோயில் 
கோயில் 







"எயிற்றிடை மண்கொண்ட எந்தை", "ஏனத்துருவாகிய ஈசன் எந்தை", "கோல வராகமொன்றாய் நிலம் கோட்டிடக் கொண்ட எந்தாய்",
என்று ஆழ்வார்கள் பலராலும் கொண்டாடப் பட்ட ஸ்ரீபூவராகப்பெருமாளின் திருக்கல்யாண மண்டபமாகவும், புக்ககமாகவும்  அமைந்த்து இந்த ஊர் "வளையமாதேவி" என்கிற இந்தத் திருத்தலம்..

ஸ்தல புராணம்.

ஸ்ரீமுஷ்ணம் என்ற ஸ்வயம்பு க்ஷேத்திரத்தில் இரணியாக்ஷ்ன மகள் ஜில்லிகை என்ற மணிமாலையும், முத்தமாலையும் பூவராகப் பெருமாளை குறித்து தவம் புரிநது மணிமுத்தா நதி மற்றும் சுவேத நதி என இரு ஆறுகளாக ஓடுகின்றனர்.
குருத்தரோகம் புரிந்த காத்யாயன முனிவர் தன் பாவம் அகல மணிமுத்தா நதியின் வடக்கே ஓரு குளம் அமைத்து, வெகுகாலம் தவம்புரிநது தன் பாவம் நீங்கப் பெற்றான்.
புத்திரப் பேறு வேண்டி, தாயாரை நோக்கி தவம் புரிந்தான். தவத்தை மெச்சி தாயார் தானே அவருக்கு மகளாக அவதரித்தார்.
காதயாயனி என்று பெயரிட்டு வளர்ந்து வந்தாள்.
பருவம் வந்தபின், மானிடர்களையோ அல்லது தேவர்களையோ மணக்கமாட்டேன் என்று உறுதி கொண்டு, பூவராகனையே 
மணமகனாக் கொள்வேன் எனறு உறுதியுடன் தவம் பரிந்து வந்தாள்.
பெருமானும் அம்மை காணும்படி காட்டில் மெதுவாகச் சென்றான். அவரிடம் தோழி போய், ”என் நாயகி உங்களுக்காக  காத்திருக்கிறார்கள். உங்களை அழைத்து வரச் சொன்னார்கள”, என்கிறாள்.
இதற்கு மறுத்து பெருமான் சென்று விடுகிறான்.
பின்னர் காத்யாயன முனிவரும் பெண்ணின தவ வலிமையை பார்த்து, பூவராகப் பெருமானை வேண்டி, தன் புதல்வியின்
நிலையை விளக்கி, தன் புதல்வியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினான்.
பூவராகப் பெருமானும் இசைந்து திருமணம் செய்து கொள்கிறான்.
திருமணத்திற்கு தன் மகளான பெரியபிராட்டிக்கு சீதனமாக ”வளையம்” என்னும் செம்பொன் அணியை காத்யாயன முனிவர் அளிக்கிறார். அதனால் தாயார் ”வளையமாதேவி” என்று அழைக்கப்பட்டார்.
திருமணத்திற்கு வந்திருந்த தேவர் முதலானோர் இறைவனை இறைஞ்சி திருமணக்கோலத்துடன் கமலவல்லித் தாயாரோடு இப்”பாவன தீர்த்தக் கரை”யில், 





பின்னனார் வணங்கும்படி கோயில் கொண்டு எழுந்தருளும் படி பிரார்த்திக்க, அவ்வாறே  இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

இங்கு எழுந்தருளி இருக்கும் மூர்த்திகள.

1.  மூலவர்        வேதநாராயணப் பெருமாள , உபய நாச்சியாரகளுடன்   
                              வீற்றிருந்த திருக்கோலம்.
வேதநாராயணப் பெருமாள , உபய நாச்சியாரகளுடன்  





மூலவர் சன்னிதி









2. உற்சவர்        வேதநாராயனப் பெருமாள், வீற்றிருந்த திருககோலம்,    உபயநாச்சியார்கள் நின்ற திருககோலம்.
3. நித்ய உற்சவர்   வேதநாராயணப் பெருமாள் நின்ற திருககோலம்.













உற்சவர்
சன்னிதி தோற்றம்

4. காளீயமர்த்தனக் கண்ணன்    உற்சவர்.
5. ஆதி நாராயணப் பெருமாள்   வீற்றிருந்த திருக்கோலம்.
6. ஸ்ரீ பூவராகப் பெருமாள்    மூலவர் வீற்றிருந்த திருககோலம்.

பூவராகர்










7. பிராட்டியுடன் சக்கரவர்த்தித்திருமகன், இளையபெருமாள், அனுமார 
                               உற்சவர் மூலவர் நின்ற திருக்கோலம்.

ஆதி காலத்து ராமர் சீதை லக்ஷ்மணன், அனுமார்.










8. ஸ்ரீ  ஆண்டாள்    மூலவர்   
             உற்சவர்  நின்ற திருக்கோலம்.
ஸ்ரீ ஆண்டாள்













9. ஸ்ரீ நம்மாழ்வார்   திருமங்கையாழ்வார மூலவர் உற்சவர்.
10. ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள்  மூலவர்.
11.ஸ்ரீ உடையவர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் மூலவர் உற்சவர்.
12. ஸ்ரீ கமலவல்லித் தாயார் மூலவர் உற்சவர்
ஸ்ரீ கமலவல்லித் தாயார் மூலவர் உற்சவர்














13. காத்யாயனமுனிவர் மூலவர் வீற்றிருந்த திருககோலம்.
காத்யாயன முனிவர்













14. கருடர்,அனுமார்  மூலவர் நின்ற திருககோலம்.

அனுமார்

கருடர்
15. விஷ்வக்சேனர்  வீற்றிருந்த திருக்கோலம்.
16. துவார பாலகர்கள் நின்ற திருககோலம்.

இங்கு நடைபெறும் வருடாந்திர உற்சவங்கள்.

சித்திரை மாதம்     வருஷப்பிறப்பு, எம்பெருமானார் சாற்றுமுறை.
வைகாசி மாதம்     பிரம்ம உற்சவம், நம்மாழ்வார் சாற்றுமுறை.
ஆடி மாதம்         திருவாடிப்பூரம், ஆடி வெள்ளி ஆண்டாள் ஸ்ரீவேதநாராயணப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம்.
ஆவணி மாதம்      ஸ்ரீஜயந்தி உற்சவம்.
புரட்டாசி மாதம்     நவராத்திரி உற்சவம்.
ஐப்பசி மாதம்       தீபாவளி உற்சவம்,
                           ஐப்பசி மூலம் மணவாளமாமுனகள் சாற்றுமுறை.
கார்த்திகை மாதம்  திருமங்கையாழ்வார் சாற்றுமுறை, தீப உற்சவம்.
மாரகழி மாகம்     தனுர் மாதம், வைகுண்ட ஏகாதசி உற்சவம்.
தை மாதம்        தைவெள்ளி தாயார் உற்சவம்.
மாசி மாதம்        மாசி மகம்.
பங்குனி மாதம்     ஸ்ரீராம நவமி உற்சவம், அகண்ட நாம பஜனை.

வளையமாதேவி, ஸ்ரீமுஷ்ணம் அருகே, விருத்தாச்சலத்தில் இருந்து செல்லலாம். சிறிய கோயில். சோழர்கள் காலத்தில்
இருந்து, அவர்களால் பாராமரிக்கப்பட்டு வந்துள்ள கோயில். சிறந்த வரம் அளிக்கக்கூடியவர்.. சமீபத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரனாம
பாராயண சபா அங்கத்தினர்கள் சுமார் 60 பேர், ஒரு பேருந்தில், இங்கு வந்து அகண்ட பாராயணம் செய்தார்கள்.
இந்த ஸ்தல புராணத்தை படிக்கும் அன்பர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து ஸ்ரீ கமலவல்லித்தாயார் சமேத ஸ்ரீ வேத நாராயணப் பெருமானை தரிசித்து, பெருமானின் அனுக்க்கிரஹம் கிடைக்கப் பெற வேண்டுகிறோம்.
மேற்கொண்டு விபரம் வேண்டுவோர், 
கோயில் அர்ச்ச்கர்,
 திருவேங்கட ராமானுஜம், M.Com., M.Ed., Ph.D.,
 வேத நாராயணப் பெருமாள் தேவஸ்தானம்,
 வளையமாதேவி, 608704,
 சிதம்பரம் தாலுக்கா

என்பரிடம் தொடர்பு கொள்ளலாம்.
அவருடைய மின்னஞசல்:   thiruvenkatam2012@gmail.com

தாயார் சன்னிதி
ஸகஸ்ரநாம பாராயணம்.


















செவ்வாய், மார்ச் 11

பாசுரம் சொல்லும் கதை---பகுதி 7.


பாசுரம் சொல்லும் கதை---பகுதி 7.












மொய்த்த வல்வினையுள் நின்று, மூன்று எழுத்துடைய பேரால்
கத்திர பந்தும் அன்றே, பராங்கதி கண்டு கொண்டான்,
இத்தனை அடியரானார்க்கு, இரங்கும் நம் அரங்கனாய,
பித்தனைப் பெற்றும் அந்தோ, பிறவியுள் பிணங்கு மாறே!!

”வாப்பா கண்ணா, என்ன பண்ணிகிகிட்டு இருக்கே?”
“ஸ்லோகம் படிச்சுண்டு இருக்கேன் தாத்தா”
”பள்ளிகூடத்தில் ஏதாவது விஷேஷம் உண்டா கண்ணா?”
“ஆமாம் தாத்தா, இன்னைக்கு ரெண்டு பேர் புதுசா சேர்ந்து இருக்கா தாத்தா.”
“அவா பேர் என்ன கண்ணா?’
“ஒருத்தன் பேர் கிட்டு, இன்னொருத்தன் லட்டு தாத்தா.”
“இப்படியெல்லாம பேர் ரெஜிஸ்டர்ல எழுதுவா?”
“இல்லை தாத்தா, கிருஷ்ணன் அப்ப்டிங்கற பேரைத்தான் நாங்க கிட்டுன்னு கூப்பிடறோம்.
அதே போல லக்ஷ்மணன் என்பதைத் தான் லட்டுன்னு கூப்பிடுவோம் தாத்தா.
"எதுக்கு தாத்தா இதெல்லாம் கேக்கிற?”
”இல்லைப்பா, பேர் வைககிறதுல நிறைய விஷயம் இருக்குப்பா.”
”என்னது பேர் வைக்கிறதுல நிறையவிஷயம் இருக்கா?”
”ஆமாம், அதப்பத்தி ஆழ்வார் ஓரு பாசுரத்துல கத்திரப் பந்துங்கர
ஓத்தரப் பத்தி சொல்லும் போது பேர் வைக்கறதப் பத்தி சொல்றார். அந்தக் கதையை உ. வே. வேளுக்குடி. 
ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சொன்னதை உனக்கு இப்ப சொல்றேன் கேளு.”
”சொல்லு தாத்தா.”
”கத்திர பந்துன்னு ஓருத்தன் உடம்பு முடியாம, வியாதில இறக்கும் தருவாயில இருந்தான். அவனுக்கு மூணு பசங்க. வாழ்க்கை பூராவும் கடவுளை எப்பவும் திட்டிண்டே இருப்பான். கடவுளைக் கண்டால் அவனுக்குப் பிடிக்காது. அதுக்காகவேஓரு பையனுக்கு நாராயணன்னு பேர் வச்சான். அடிக்கடி அவனைக் கூப்பிடற சாக்குல திட்டுவான்.
அன்னைக்கு உடம்பு ரொம்ப முடியாம போய், வலி தாங்கல.”
”நாராயணா ,நாராயணா” னனு கூப்பிட்டு பார்த்தான், அவன் வரல.”
”செத்துப் போயிட்டான்.”
”அப்பறம் என்னாச்சு தாத்தா?”
”மேல் உலகத்தில் இருந்து பெருமாள் நாராயணன் சேவகர்களும்,
எமன் சேவகர்களும் அவனை தஙகள் லோகத்துக்குக் கூட்டிண்டு போக ரெடியா வந்துட்டா.”
”ஏன் தாத்தா நாம செத்துப் போனா எங்க போவோம் தாத்தா?”
”அது நாம நிறைய பண்ணியம் பண்ணி இருக்கோமா
அல்லது பாபம் பணணி இருக்கோமாங்கறதைப் பொறுத்து இருக்கு கண்ணா.”
”நிறையப் புண்ணியம் பண்ணி இருந்தா சொர்க்கம் போவோம், பாபம் பண்ணி இருந்தா நரகம் போவோம்”.
”அப்புறம் என்ன ஆச்சு தாத்தா?”
”நாராயணன் சேவகர்கள் இவன் சாகற போது நாராயணன்னு கூப்பிட்டு இருக்கான், அதனால  இவனை நாங்க சொர்க்கத்துக்கு தான் கூப்பிட்டுக்கொண்டு போவோம், நீங்க இடத்தை காலி பண்ணுங்க”, 
அப்படின்னு சொல்றாங்க.
”அதெல்லாம் முடியாது, அவன் வாழ்நாள் பூரா கடவுளை திட்டிக் கொண்டே இருந்தான், அதனால  அவனுக்கு நரகம் தான் நிச்சயம். நாங்க தான் அவனைக் கூட்டிக் கொண்டு போவோம்.” ”அப்படீன்னு 
எமன் சேவகர்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள்.”
”அப்புறம் என்ன ஆச்சு தாத்தா?
"ரெண்டு பேரும் விட மாட்டேங்கறாங்க.
கடைசியில எமன் சேவகர்கள் எமன் கிட்ட் போய் நடந்த  விஷயத்தைச் சொல்றாங்க.எமன் தன் ஆட்களைக் கூப்பிட்டு நாராயணன் ஆட்கள் அங்க வந்திட்டா நீங்க போகாதீங்க, அவங்க 
சொல்றது தான் சரியா இருக்கும்", அப்படீன்னு சொல்லி அவன் ஆட்களை அங்கிருந்து விலகிப் போகச் சொல்றான்.
கத்திர பந்துவும் சொர்க்கத்துக்கு போயிடறான்."
"சூப்பர் தாத்தா, பேர் வைக்கிறதுலயும், அதைக் கூப்பிடறதுலயும்
இவ்வளவு விஷயம் இருக்கா தாத்தா. இனிமே என் நணபர்களை முழுப் பேரையும் சொல்லி கூப்பிடுறேன் 
தாத்தா".
"இது மட்டும் இல்லை, குழந்தைகளுக்கு என்ன பேர் வச்சா நல்லதுன்னு கூடப் பாசுரங்கள் இருக்கு, அதப் பத்தி 
பின்னால ஒரு நாள் சொல்றேன், இப்ப நீ போய் நாராயணான்னு சொல்லிக் கொண்டே தூங்கு."
"ஒகே தாத்தா"

திங்கள், ஜனவரி 20

மார்கழியில் நான் கோலம்!!!!!


மாதங்களில் நான் மார்கழி!!!!!!!!!
காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம்,
மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை!!!!
என்று வர்ணித்தான் கண்ணதாசன் ஒரு பெண்ணை.
கிருஷ்ணன் தனக்குப் பிடித்த மாதம் மார்கழி என்றான்.
ஆனால் என் மனைவிக்குப் பிடித்தது ’மார்கழி’யில் கோலம் இடுதல்.
அதுவும் வண்ண வண்ணப் பொடிகளில் அந்த இதிகாசத்தில் வரும் காட்சிகளை வரைவது மிக்க இஷ்டம், கஷடமாக இருந்தாலும்!!!!!
அப்படிப்பட்ட சில காட்சிகள் இந்த 2014 மார்கழியில் அரங்கேறின.
அவற்றில் இருந்து சில உங்கள் பார்வைக்கு!!!!!

1. அஹாசுர வதம்:
பகாசுரனின் சகோதரன். பகாசுரனை கண்ணன் கொன்றதால் அதற்குப் பழிவாங்க அஹாசுரன் கண்னனைக் கொல்லப் பெரிய பாம்பு வடிவில், கண்ணன் மேச்சலுக்குச் செல்லும் வழியில் மலை போன்று படுத்து இருக்கிறான். இது தெரியாத கண்ணன் நண்பர்கள் அதன் வாய்க்குள்
சென்று விடுகிறார்கள். இதனை தெரிந்து கொண்ட கண்ணன், அஹாசுரனின் வாய்க்குள் சென்று அவன் வாயைக் கிழித்து அவனைக் கொல்கிறான்.
இதனைத் தான் கோலமாவில் சித்திரமாக வரைந்துள்ளார்கள்.


















2. திருச்சி மலைக்கோட்டை காவிரிப் பாலத்தில் இருந்து:
திருச்சிக்கே முக்கியமானது மலைக்கோட்டை. அதில் இருந்து பார்த்தால் திருச்சியைப் பார்த்து விடலாம். திருச்சிக்கு மற்றும் தன்ஞைக்கு நீர் ஆதாரம் காவிரி. அதிலும் காவிரிப் பாலம் முக்கியமானது.
இது இரண்டையும் இணைக்கும் விதமாக பாலத்தில் இருந்து பார்க்கும் விதமாக மலைக்கோட்டையை வரைந்துள்ளார்.

3. கோதை நாச்சியாரின் கனவு:
”வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்” என்ற ஆண்டாளின் கனவுக்கு ஏற்ப, அவளின் கனவினை விளக்கும் வடிவாக வரைந்துள்ளார்.















4. ஏழுமலையப்பன் தரிசனம்:
புத்தாண்டு பிறப்பு அன்று, ஜனவரி 2014 அன்று, திருப்பதி சென்று அந்தக் கூட்டத்தில் ஏழுமலை அப்பனை தரிசிக்க முடியுமா?
அதனால் அவரை நம் கண்ணுக்கு விருந்தாக்கி விட்டார் புத்திசாலித்தனமாக.















5. பூலோக வைகுந்தம்:
”உன்னுடைய கடைசி ஆசை என்ன?”
”எப்படியாவது வைகுந்தம் அடைவது தான் என்னுடைய கடைசி ஆசை ஐயா!”
”வைகுந்தம் அடைவது மண்ணவர் விதி! ”
”அப்படியானால் அதற்கு முன்னால், பூலோக வைகுந்தத்தில் இருந்து பழகிக் கொள்ளும்”
இபபடியாகச் செல்கிறது நமக்கும் ஆன்டானுக்கும் இடையே நடக்கும் விவாதம்.
அப்படியானால் எப்படி இருக்கும் பூலோக வைகுந்தம்?
வாருங்கள் “பூலோக வைகுந்தம்” என்று நம்மை அங்கேயே அழைத்து செல்கின்றார்.
ஆம், ஸ்ரீரஙகம் ஏழு பிரகாரங்களுடன்,21 கோபுங்களைக் கொண்டது ஸ்ரீரங்கம், என்பதை இந்தப் படத்தின் வழியாக, ‘கருட பார்வை’ மூலமாக நம்க்கு உணர்த்துகிரார்.



6. அமர்னாத் சிவலிங்கம்:
அமர்நாத் சிவலிங்கம் , உருகாத சிவலிங்கத்தை, நம்மால் போய் தரிசிக்க முடியாததால், நம் வீட்டுக்கே கொணர்ந்துள்ளார்.




























7. பரம பதம்”
வைகுந்த ஏகாதசி அன்று அரங்கன், ரதன்கற்கள்  (ரத்னாங்கி) பதித்த ஆபரணங்கள் கூட, சொர்க்க வாசலை கடந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் காட்டுகிறார்.
அதே தினத்தில் எங்கள் குடியிருப்பில் அவரை அதே அலங்காரத்துடன் காட்சி அளிக்கச்செய்து விட்டார் எனது மனைவி!!!


8. ராமர் சீதை:
கல்யாணக்கோலத்தில் ராமனும் சீதையும் எப்படி இருப்பார்களோ அதே மாதிரி வரைந்துள்ளார்.


















9. கணேசன் மற்றும் முருகன்:
எந்த ஒரு சுப காரியத்துக்கும் பிரதானம் கணேசன. அவரைத் தனியாக வரசொன்னால் எங்கே வருத்தப்படுவாரோ என்று, முருகனையும் அழைத்து வரச் சொன்னோம். அப்படியே கணேசனும்
தன் தம்பி முருகனுடன் காட்சி அளிக்கிறார்.




10. பொங்கல் பானைகளின் அணிவகுப்பு:
பொங்கல் அன்று, பொங்கல் பானைகள் விற்பனைக்கு அணிவகுத்து நிற்கின்றன.








11.கன்றுடன் கண்ணன்.
எப்பவுமே படங்கள் போடுவதற்கு வசதியாக உள்ளவன் கண்ணன். இங்கு கண்ணன், தன் கன்றுடன் காட்சி அளிக்கிறான்.












12. குன்றமேந்தி குளிர் மழை காத்தவன்:
அன்று இந்திரன் கோபத்தில் கோகுலத்தில் விடாது மழை பெய்வித்து ஆயர்களுக்கு துன்பம்  


 









விளைவித்த போது, கோவர்த்தனத்தைக் குடையாக பிடித்து, ஆயர்குல மக்களை அதில் இருந்து காத்தான். அந்த்க் காட்சியை படம் பிடித்துள்ளார் இங்கு.