புதன், செப்டம்பர் 14

பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் தான் இருக்கிறது !!!




பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் தான் இருக்கிறது !!!!
பாற்கடலில் ஒரு காட்சி.
பரந்தாமன்,மகாலக்ஷ்மி இருவரும் பாம்பணையில் பள்ளி கொண்டு இருக்கின்றனர்.
பரந்தாமன் ஏதோ நினைவில்,
"ஹா,ஹா " என்று சிரிக்கிறார்.
"எதற்கு சிரிக்கிறிர்கள்" மகாலக்ஷ்மி பரந்தாமனைப் பார்த்து வினவினாள்.
"இல்லை, ஒரு விஷயம் நினைத்துப் பார்த்தேன். அதை நினைத்து நினைத்து சிரிப்பு வருகிறது.
நீயும் அதைக் கேட்டால் உனக்கும் சிரிப்பு வரத்தான் செய்யும்", பரந்தாமன் மகாலக்ஷ்மியிடம் கூறுகிறான்.
"அப்படி என்ன பெரிய விஷயம் நடந்து விட்டது, இப்படிச் சிரிப்பதற்கு? எனக்கும் சொல்லுங்களேன்
நானும் தெரிந்து கொள்கிறேன்." மகாலக்ஷ்மி பரந்தாமனைப் பார்த்து வினவினாள்.
"சொர்க்கத்தில் நடந்த விஷயத்தை அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்.அதை நினைத்தேன்.
நீயும் தெரிந்து கொள்" மகாவிஷ்ணு ஒரு பின்னூட்டம் இடப் போகிறார் என்பதைத் மகாலக்ஷ்மி தெரிந்து கொண்டாள்.
சொர்க்கலோகத்தை நோக்கி போவோம்.
"நான் இருப்பது சொர்க்கலோகமா அல்லது நரகலோகமா?"
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் பூவுலத்தில் இறந்தபின் மேல் லோகத்திற்கு
வந்தவுடன்,அங்கிருந்த கிங்கரர்களிடம் மேற்கண்டவாறு
வினவினான். புவியில் அவன் செய்யாத அக்கிரமங்கள் இல்லை. கடவுள இல்லை என்ற கொள்கை உடையவன், கடவுளை இப்படித்தான் தூற்றுவது என்றில்லை, அப்படித் தூற்றுவான்  அவனுக்கு சொர்க்கம் அல்லது நரகம் என்பது உண்டு என்பதில் நம்பிக்கை இல்லை. கடவுளிடம் கொண்ட வெறுப்பு காரணமாக தன்னுடைய மகனுக்கு "கடவுள் இல்லை", என்று
பெயர் சூட்டினான்.அவனைக் கூப்பிடும் சாக்கில் கடவுளைத் திட்டலாம் என்பது அவன் எண்ணம்.
ஆனால் நடந்ததோ வேறு. மகன் பள்ளிக்குச் செல்லும் போது அவன் நண்பர்கள் அவனைக் 
"கடவுள், கடவுள்" என்றுதான் அழைப்பார்கள்,ஏனெனில் உலகில் உள்ளோரின் வழக்கமே  பொதுவாக பெயர்களை குறைப்பதுதான்.
அது போகட்டும், விஷயத்திற்கு வருவோம்.
அவனுக்கும் வயதாகியது, உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையில் வீழ்ந்தான். மகனும் அவனை நன்றாகத் தான் பார்த்துக் கொண்டான். தகப்பனுக்குச் செய்ய வேண்டிய எல்லா  கடமைகளையும் ஒன்று விடாமல் செய்தான்.
சர்க்கரை வியாதியினால் உடலில் புண் உண்டாகி பேசக் கூட முடியாமல்,
"சீயினால் செறிந்தேறிய புண்மேல்
  செற்ற லேறிக் குழம்பிருந்து, எங்கும்
ஈயினாலரிப் பூண்டு மயங்கி
 எல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம்,
வாயினால் நமோ நாரணா வென்று
 மத்த கத்திடைக் கைகளைக் கூப்பிப்
போயினால் பின்னை, இத்திசைக் கென்றும்
பிணைகொ டுக்கிலும் போகவொட் டாரே."
  என்று பெரியாழ்வாரின் பாசுரத்திற்கு ஏற்ப புண்ணில் ஈமொய்க்கும் போது,
தன மகனை "கடவுள் இல்லை" இங்கே வா என்று அழைக்க முடியாமல், "கடவுள்" என்றே  கடைசிக் காலத்தில் அழைத்தான். அத்துடன் அவனின் ஆயுட்காலம் முடிந்தது.

"நமனும்முற் கலனும் பேச
  நரகில்நின் றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்க மாகும்
 நாமங்களுடைய நம்பி"
  என்று திருமாலை  பாசுரத்தில் சொன்னது போல,நரகத்தயே சுவர்க்கமாக்கும் நாம் அவன் கடவுள் என்று கூப்பிட்ட பிறகு அவன் செய்த பாவங்களை மன்னித்து அவனை  சுவர்க்கத்திற்கு அனுப்பாமல் இருக்க முடியுமா?, எனவே அவனை சுவர்க்கத்திற்கு  அனுப்பிவிட்டோம்.அங்கு தான் அவன் மேலே சொன்ன வார்த்தைகளைக் கூறினான். அவன் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. அதை நினைத்துக் கொண்டிருந்தேன்  சிரிப்பு வந்து விட்டது" என்று மகாலக்ஷ்மியிடம் நடந்தவற்றைக் விபரித்தார் பரந்தாமன். மகாலஷ்மிக்கும் கேட்டவுடன் சிரிப்பு வந்தது.
ஆக பெயரில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு  பதில் நாம் கொடுத்த      "பெயரில்தான் இருக்கிறது!!! "
என்று நான் மாற்றிய தலைப்பு  சரிதானே?
பெரியாழ்வார் என்ன என்ன பெயர் இட வேண்டும் என்று ஒரு பட்டியலே தொடுத்துள்ளார்.
அதைப் அடுத்த பகுதியில் காண்போம்.

சனி, செப்டம்பர் 3

விடுபடுதிசைவேகம் அல்லது சுவர்க்கத்துக்கு வழி

விடுபடு திசைவேகம்--அல்லது சுவர்க்கத்துக் வழி

என்ன மோட்சம், விடுபடு திசை வேகம்-ன்னு என்னமோ புதுசு புதுசா
என்னமோ சொல்றேன்னு பார்க்கிரீகளா?
ஆமாம், புதுசாத்தான் ஒன்னு சொல்லலாம்னு பார்க்கிறேன்.
சுவர்க்கத்துக்கு போவதற்கு வழி என்ன?
வழி இருக்கான்னு கேட்கிறிர்களா?
நீண்ட நாட்களாக பலரும் சென்று அடையத் துடிக்கும் ஈசியான வழி என்ன?
இருக்கு அய்யா இருக்கு!!
அதை முதல்ல சொல்லுங்க, அப்படின்னு நீங்க சொல்றது கேட்குது.
அதுக்கு முன்னாலே அண்டத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்
உலக பந்தத்தில் இருந்து விடுபட என்ன செய்யவேண்டும்?

பகவான் கண்ணனைக் கேட்டால் கர்ம யோகம்,பக்தி யோகம்,ஞான யோகம்'
செய் என்பான். நாம் என்ன பாபங்கள் மற்றும் புண்ணியங்கள் செய்துள்ளோமோ
அதற்கு ஏற்ப இந்த உலகத்தில் இருந்து அவற்றை அனுபவித்து விட்டுத்
இந்த உலகத்தை விட்டுச் செல்லமுடியும். அதோடு அல்லாமல் மோட்சத்திற்குச்
செல்ல அதற்கு தனியாக புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
வைகுந்தம், திருபாற்கடல் இவையெல்லாம் எங்கு உள்ளன?
அங்கு ஏன் செல்லவேண்டும்?
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள் தன்னுடைய உபன்யாசத்தில் விளக்கமாக
குறிப்பிடுகிறார்.ரெண்டு விபுதிகள் உண்டாம், ஒன்னு லீலா விபுதி மற்றது நித்ய விபுதி அப்படின்னு அதுக்கு பேராம்.லீலா விபுதிங்கறது நாமல்லாம் இருக்கிற உலகம்.பிரளய காலத்தில் அழிவது லீலா விபுதியாம் எந்த பிரளயம் வந்தாலும் அழியாதது நித்ய விபுதி.ஞானம் குறைவில்லாதது நித்ய விபுதியாம் நித்ய விபுதிங்கறது வைகுந்தமான் பகவான் இருக்கிற இடம்.
நமக்கு கீழே ஏழு உலகங்கள் மேலே ஏழு உலகங்கள் உண்டாம் அதுக்கு மேலே
சப்தாவரனம் அதுக்கு மேலே மூல பிரகிருதி இந்த இரண்டையும் தாண்டி உள்ளது விரஜை நதி இதைத் தாண்டி நித்ய லோகம்.இந்த பதினாலு உலகங்கள் கொண்டது ஒரு அண்டம் முட்டை வடிவத்தில் உள்ளதாம்.
"இமையோர் வாழும் தனிமுட்டை" என்று ஆழ்வார் இதனை சாதிக்கிறார்
இது ஒரு அண்டம் அல்ல. இதுபோல பல் நூறு அண்டங்கள்
ஒவ்வொரு அண்டத்துக்கும் ஒரு பிரம்மா, ஒரு இந்திரன், ஒரு ருத்ரன். இது போல கோடிக் கணக்கான அண்டங்கள் ஆகாசத்தில் மிதந்து கொண்டிருக்காம்.
இதுபோல 10000, 10கோடி அண்டங்கள் உள்ளதாம் இது அத்தனையும் ஒரு கால் பங்குதானாம்.

ஒரு அண்டம் எவ்வளவு தொலைவு தெரியுமோ?

50 கோடி யோசனை விஸ்திர்ணம் ஒரு யோசனை பத்து மைல் அப்படின்னா 500 கோடி மைல்ஒரு அண்டம் சத்ய லோகம் வரை இது போல கோடிக்காக்கான அண்டங்கள். இது அத்தனையும் தாண்டி சப்தாவரணம்
அதை தாண்டி விரஜா நதி. இதுக்கு இந்த பக்கம் கால பங்குதானாம். இதை போல் மூன்று பங்கு பெருத்தது நித்ய விபுதி. இந்த நித்ய விபுதி, லீலா விபுதிக்கு சொந்தக்காரர் பகவான் நம்ம இருக்குமிடம் ரெண்டு அடிக்கு ரெண்டு அடி அளவு தான் இப்படி இருக்கும் போது நாம் பகவானை "நீ யார்" என்று கேட்கிறோம் .
இப்படி இருக்ககூடிய பகவான் எங்கும் இருக்கிறானாம்
ஆழ்வார் இதனை
"பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் ,
பரந்த அண் டமி தென நிலவிசும் பொழிவர,
கரந்தசி லிடன்தொறும் இடந்திகழ் பொருடொறும்,
கரந்தெங்கும் பரந்துள னிவை யுண்டகரனே

ஒவ்வொரு அணுவுக்குள்ளும் பகவான் வியாபித்து இருக்கிறான்
ஒவ்வொரு நீர் திவலைக்குள்ளும் உள்ளானாம்.

இந்த உபன்யாசத்தை தரப்பட்டுள்ள தொடர்பை தொடர்பு கொள்ளவும்.



இதென்ன உண்மை தானா? என்கிறீர்களா? உண்மைதான் அறிவியல் மூலமாக ஹப்பிள் என்ற தொலைநோக்கி மூலம் இதனை நிரூபித்துள்ளார்கள்.
கலிபோர்னியா, வில்சன் மலையில் இருந்து ஹப்பில் தன் நண்பருடன் 100 இன்ச்
தொலைநோக்கி உதவியுடன் சுழன்று கொண்டிருக்கும் நெபுலா என்ற மேகக் கூட்டத்தை ஆராய்ந்து பல் விளக்கங்களை சொல்லிருக்கிறார்.
நெபுலா என்ற அண்டவெளி



அவற்றைப் பார்க்கும் போது அந்த நெபுலா என்ற மேகக் கூட்டங்கள் நம்மை விட்டு
விலகிச் செல்வதைக் கண்டார். இவைகளைப் பார்க்கும் போது இவை எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாகச் சேர்ந்து இருந்து இருக்க வேண்டும் என்று தன்னுடைய ஹப்பில் விதியில் கூறியுள்ளார்.
அதாவது ஏதேனும் ஒரு காலத்தில் அவை எல்லாம் ஒன்றாக இருந்து ஏதேனும் ஒரு காரணத்தால் உடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்க வேண்டும் என்றார். அதனை big bang மிகப் பெரிய உடைப்பு என்று சொல்வார்கள்.
எப்போது இது நடந்து இருக்கும்?


ஹப்பில் தொலைநோக்கி மற்றும் பல சாதனங்கள் உதவியுடன் பார்க்கும் போது 13.7 biilion (1000000000) ஆண்டுகள் முன்னர் இந்த மிக பெரிய உடைப்பு என்ற நிகழ்ச்சி நடந்து இருக்கவேண்டும் என்று சொன்னார்.
அதாவது அதன் ஆரம், ஒளியின் வேகத்தில் சொன்னாள் 13.7 billion (1000000000000000) ஒளி ஆண்டுகள் , அதாவது 1.3 quadrillion கிலோ மீட்டர் தொலைவு ஆகும்,
இதை ஆல்பர்ட் ஈன்ஸ்டின் 1917 ம் ஆண்டிலேயே சொல்லி விட்டார்.
எனவே அண்டம் என்பது ஒரு கட்டுக்குள் வரக கூடியது அல்ல.வேதாந்தத்தில்
சொல்லி இருப்பதை விட அதிகமான தொலைவு கொண்டது என்பது
ஆராய்ச்சியின் மூலமும் நிருபிக்கப்பட்டுள்ளது
இப்ப நம்முடைய ஆரம்பத்துக்கு வருவோம்.
ஒரு பொருளை மேலே எறிந்தால் என்ன ஆகிறது. கொஞ்ச தூரம் மேலே போய்விட்டு கீழே வந்து விடுகிறது.
கொஞ்சம் அதிகமான வேகத்துடன் மேலே செலுத்தினால் இன்னும் கொஞ்சம் மேலே போய் விட்டு கீழே வந்து விடுகிறது.
எனவே எந்த வேகத்தில் செலுத்தினால் பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு திரும்பி வராமல் போய் விடுகிறதோ
அந்த வேகத்தைத் தான் விடுபடு திசைவேகம் என்பார்கள்.
அதாவது E என்ற திசையில் செலுத்தினால் திரும்பி
வராத இடத்துக்கு செல்வோமாம்.
ஆக இந்த பந்தத்தில் இருந்து (அதாவது உலக இன்ப துன்பங்களில் இருந்து விடுபட )
அறிவுப் பூர்வமாக சிந்தித்தால் ஒருவன், ஆன்மிகவாதி, விடுபடு திசை வேகத்தில் பயணித்தால் இந்த உலக பந்தத்தில் இருந்து விடுபடலாம்.
அது சரி, அந்த விடுபடு திசை வேகம் என்னன்னு சொல்லுங்கிரிர்களா? உடனே ஏற்பாடு பண்ணி இங்கிருந்து கிளம்பிடலாம், அப்படின்னு பார்க்கிறிர்களா?
சொல்லிட்டாப் போச்சு.
பூமியில் இருந்து வான வழியில் செல்ல விடுபடு திசைவேகம் ( 11.2 km/sec), அதாவது ஒரு வினாடிக்கு 11.2 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால், பூமியின் இன்ப துன்பங்களில் இருந்து விடுபடலாமாம்.
ஈசியாகத் தானே உள்ளதுன்னு நினைப்போம். அந்த வேகம் என்ன தெரியுமா? மணிக்கு 40000 கிலோ மீட்டர் ஆகும்.
அதுசரி.
இதுவரை மிக அதிகமான வேகத்தைப் பெற்ற விமானம் மணிக்கு 7232 கிலோமீட்டர் வேகம் தான். பிரான்சில் உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய ரயில் மணிக்கு 515..3 கிலோமீட்டர் ஆகும்.
அதுஎன்ன மணிக்கு 40000கிலோமீட்டர் வேகம் என்பது மனிதனால் அடையக்கூடிய வேகமா?
ஹப்பில் மற்றும் ஈன்ஸ்டின் போன்ற ஆராய்ச்சியாளர்கள் சொன்ன அண்டத்தை விட்டு சென்று பகவான் இருக்கும் சுவர்க்கத்தை அடைய, அதாவது நம்முடைய சூரியக் குடும்பத்தை விட்டுச் செல்ல வினாடிக்கு 42.1 கிலோ மீட்டர்
வேகத்தில் சென்றால் சுவர்க்கத்தை அடையலாமாம்.
அம்மாடியோவ் இந்த வேகத்து எங்க போவது?அதற்கான ராக்கெட்டுகள் இதுவரை உருவாக்கப்படவில்லை.
அப்படியானால் எப்படி சுவர்க்கம் போவது? அப்படியானால் சொர்க்கம் போக முடியாதா? ஏன் முடியாது? முடியாதது என உலகினில் எதுவும் கிடையாது
அதற்கும் நம்முடைய ஆன்மிகம் வழி சொல்கிறது.
அதனை அடுத்த தலைப்பில் பார்ப்போம்.