செவ்வாய், பிப்ரவரி 13

கயா, புண்ணிய பூமி.


கயா, புண்ணிய பூமி. 
மகனாகப் பிறந்தவன் தாய் தந்தைக்கு அவர்கள் மறைவுக்குப் பபிறகு, ஆண்டு தோறும் ச்ரார்த்தம், செய்து கடமையாற்றவேண்டும். அதிலும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது  வடஇந்தியாவில் உள்ள கயா ஷேத்ரத்துக்கு சென்று  தாய், தந்தைக்கு ச்ரார்த்தம் செய்தால் புண்ணியம் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றனவாம்.
இதுக்கு கதை உண்டாம்.
என்ன கதை?
கயன் என்னும் அசுரன், 10 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டவன், எந்த பிரதிபலனையும் எதிரபார்க்காமல் தொடர்ந்து தவம் புரிந்து வந்தான். இதனை மெச்சிய திருமால், அவன் உடல் அனைத்து புண்ணிய நதிகளையும் விட புனிதமானதாக இருக்கும் என்று ஆசிர்வதித்தார். ஆனால் அவன் தவத்தை நிறுத்துவதாக இல்லை. அதனால உலகமே நடுங்கிற்று. விஷ்ணுவின் ஆலோசனைப்படி, ப்ரம்மா கயனிடம் சென்று, தான் யாகம் செய்வதற்கு கயனின் புனிதமான உடலை வேண்டினார்.  உடன்பட்ட கயன் தூங்கும்போது ப்ரம்மா யாகத்தைத் துவங்கினார். யாகம் முடிவடையும் தருவாயில் கயன் எழுந்திருக்க முற்பட, தேவர்கள் தர்மவதி சிலையை அவன் மேல வைத்து அழுத்தினர். அவன் உடல் நடுக்கம் நிற்காததால், விஷ்ணு கதையை கையில் ஏந்திக்கொண்டு, கதாதரன் பெருமாள் வடிவில் தன் ஒரு திருவடியால் அவன் மேல் நிற்க நடுக்கம் அடங்கியது. 
அவன் உடல் கிடக்கும் 10 சதுர மைல் பரப்பு இன்று கயா ஷேத்ரம் என அழைக்கப்படுகிறது. 
தர்மவதி சிலை வரையப்பட்ட விஷ்ணுவின் ஒரு திருவடியைத் தான் நம் இல்லங்களில் பிண்ட தானம் செய்ய விஷ்ணுபாதமா பயன் படுத்தறோம்.
கயா ஷேத்ர மகிமையே இதுதான்.
கயாவில் பல்குனி நதி, விஷ்ணுபாதம், அக்‌ஷ்ய வடம் ஆகியவை முக்கியமானவை. நெல்லிக்கனி அளவு உள்ள பிண்டம், கயாசிரஸ் என்ற இடத்தில தானமா கொடுப்பதால், தகப்பனார், தாயார், மனைவி, சகோதரி, பெண், அத்தைகள், தாயின் சகோதரிகள் ஆகிய இந்த ஏழு குடும்பங்களின் 101 பேர்களை நல்ல கதி அடையச் செய்யுமாம்.
கயா ஷேத்ரம் பல விதங்களில் முக்கியமானது.
தந்தை, தாய், உறவினர், வம்சத்தில் வந்தவர்கள் நற்கதி அடைவாரகளாம்.
பலவித நரகங்களை அடைந்தவர்கள், பறவை, புழு, கிருமி, மரம் ஆகிய பிறவிகள் அடைந்தவர்கள், மனிதப்பிறவிய அடைய காத்திருப்பவர்கள் நம் வம்ஸத்தில் ஸ்ராரத்தம் பிண்டம் ஆகியவற்றை பெறாதவர்கள், இவற்றைச் செய்ய உறவினறே இல்லாதவரகள், மேலும் இவர்கள் இருந்தும் கருமங்கள் செய்யப்படாதவரகள் ஆகியோருக்கு இங்கு பிண்டம் கொடுப்பதால் நற்கதி அடைவார்களாம்.
உறவினர்களில் தாயாருக்கு அதிக முக்கியத்துவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மகன் பிறக்கவில்லை என்று தன் தாய் பட்ட கஷ்டத்தை நினைத்து, கர்ப்பத்தை தரித்ததால் தாய்க்கு உண்டான கஷ்டங்களை நினைத்து, கர்ப்பம் வளர்ச்சியடையும் ஒவ்வொரு மாதத்திலும் உண்டாகும் கஷ்டத்தை நினைத்து, கர்ப்ப காலத்தில் கை கால்களால உதைத்த போது ஏற்பட்ட கஷ்டத்தை நினைத்து, நிறை மாதத்தில் ஏற்பட்ட கஷ்டத்தை நினைத்து, குழந்தை பிறந்தபிறகு தாய்ப்பால் கொடுக்க கஷ்டத்தை நினைத்து,
இப்படி தாய்க்கென மற்றவர்களை விட அதிகமான பிண்டங்கள், ஒவ்வொன்றுக்கும் அர்த்ததை  சொல்லி புரோகிதர், வைக்கச் சொல்லும் போது எவ்வளவு கல் நெஞ்சம் கொண்டவனுக்கும கண்ணில் நீர் வராமல் இருக்காது.
பல்குனி நதியில் ஆறு மாதம் நீர் வராது.  நீர் வராத காலங்களில் ஊற்று நீர் உண்டாக்கி, அதில் பிண்டத்தை கரைப்பார்கள். 
பல்குனி நதிக்கரையில் உள்ள முக்கியமான கோயில் விஷ்ணு பாதம். இங்கு விஷ்ணுவின் திருவடி உள்ளது. இக்கோயிலின் வெளியே கயா மண்டபத்தில் ஸ்ராரத்தம் செய்து, அக்ஷ்ய வடம் என்று சொல்லக்கூடிய ஆலமரத்தின் அடியில் பிண்ட தானம் செய்வார்கள்.
ஆக இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஷேதரத்தில் எங்களுடன் வந்த நிறையபேர் ஸ்ராரத்தம் செய்து தங்கள் முன்னோர்களை கரை சேர்ந்தார்கள். அதற்கு உதவிய ஸ்வாமிகளை என்றும் மறுக்கமுடியாது.
நான் முன்னறே ஒரு தடவை செய்து விட்டதால், இந்த முறை ஸ்ராரத்தம் செய்யவில்லை.
நாங்கள் பல்குனி நதியை நோக்கிச் சென்றோம், முன்னறே சொன்னது போல நீர் குறைவாகத்தான் இருந்தது. ப்ரோக்‌ஷித்து கொண்டோம். கதாதரப் பெருமாளை சேமித்துக் கொண்டோம். 
கதாதர் கோயில்
விஷ்ணுபாதம், அக்‌ஷ்யவட ஆலமரத்தை வலம் வந்தோம். 
ஸ்வாமிஜி ஸ்ராரத்தம் செய்தவர்கள், செய்யாதவர்கள் என இரு பிரிவினருக்கும் ஏற்ப ஆகாரம் தயார் செயதிருந்தார்கள். 
முன்னதாக நாங்கள் தங்கி இருந்தது புத்த கயா, கயாவில் இருந்து ஆட்டோவில் செல்லும் தொலைவில் உள்ளது.
புத்த கயா, என்ன விஷேஷம்???
பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக