செவ்வாய், பிப்ரவரி 20

ராமானுஜா அனு யாத்திரை வாரணாசி இரண்டாம் பகுதி.



வாரணாசி இரண்டாம் பகுதி.
பிந்து மாதவன் சன்னதியை நோக்கி பயணமானோம் என்று நிறுத்தியிருந்தேன்.


நாங்கள் செல்லும் போது உபன்யாசம் முடியும் தருவாயில் இருந்தது.
சிறிது நேரத்தில் காசி ஷேத்ரம் பற்றிய அவரது உரை முடிந்தது. நாங்கள் உடனே பிந்து மாதவன் சன்னதியை தரிசித்தோம். அருகிலேயே கால பைரவர் சன்னதியும் இருப்பதாகச் சொல்லவே, அதனை நோக்கி சந்துகளில் நடக்க ஆரம்பித்தோம். போகும் வழியில் லஸ்ஸி என்று சொல்லப்படும் சர்க்கரை கலந்த தயிர், நிறைய கிடைக்கிறது, அதனை ருசிபாரத்தோம். கிராம தேவதை என்று நம்மூரில சொலவோமே அது போல, அங்கு கால பைரவர். அவரை தரிசித்துக்கொண்டு மதிய ஆகாரம் கிடைக்கும் இடமான ஸ்வாமிநாராயண் மந்திர் நோக்கி மீண்டும் சந்துகளில் பயணித்தோம்.
ஆகாரத்தை முடித்துக்கொண்டு, நமக்காகவே காத்துக்கொண்டு இருக்கும் வாகனம், ஆட்டோவில் தங்கும் அறையை நோக்கி பயணப்பட்டோம்.
கங்கைக்கரை ஓரங்களில் மாலை நேரத்தில் ஹாரத்தி விஷேஷம். நம்மைப் போன்றவர்களுக்கு ஹாரத்தி பார்ப்பது, அதனைப் பார்க்க இடம் பிடிப்பது போன்றவைகள் முக்கியமானது.





இதற்காகவே மாலை 4 மணிக்கே கிளம்பி, பேரம் பேசி, ஒரு படகை வாடகைக்கு அமரத்திக்கொண்டோம். கங்கையில் உள்ள அத்தனை ghats கட்டங்களையும காணபித்துவிட்டு ஹாரத்தி நடக்கும் இடத்தில நிறுத்த வேண்டும் என்று எங்களுக்குத் தெரிந்த பாஷை, படகோட்டிக்குத் தெரிந்த பாஷையில் பேசி, கங்கையில் “ஹைலேசா” பாடினோம்.
படகோட்டி ஒரு முனையில் இருந்து கடைசி முனை வரை இருக்கக்கூடியெல்லா படித்துறைகள் மற்றும் அவைகளை கட்டியவர்கள் பற்றிய விவரங்களைச் சொல்லிக்கொண்டே லாகவமாக படகினை ஓட்டினார். நேரம் போனதே தெரியவில்லை.
அது ஒரு சுகமான அனுபவம் தான்!!!
கடைசியா அந்த தருணமும் வந்தது, ஆம், ஹாரத்தி!!!!
கங்கை செல்லும் பாதையில் உள்ள எல்லா கரைகளிலும் மாலை நேரத்தில் ஹாரத்தி எடுத்து, கங்கைக்கு மரியாதை செய்கிறார்கள். அதோடு கங்கையையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறார்கள். பாடலோடு ஹாரத்தி, பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. எள்ளு போட்டால் எள்ளு விழாது எனபாரகளே அது போல அத்தனை கூட்டம். கிட்டத்தட்ட அரைமணி நேரம் நடக்கிறது. சிரத்தையுடன் நடக்கிறது. பார்க்க வேண்டிய ஒரு வைபவம். 
யாரும் தவறவிடாதீரகள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக