திங்கள், டிசம்பர் 26

திருப்பாவை

திருப்பாவை

தனியன்

நீளா துங்கஸ்தநகிரிதடீ ஸூப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்தமத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து  பூய: 

அன்னவயற்புதுவவையாண்டாளரங்கற்குப்
பண்ணு திருப்பாவைப் பல்பதியம்--- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த  சுடர்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்-----நாடிநீ
வேங்கடவற்கென்னை விதிஎன்றவிம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.













இரண்டாம் பாசுரம்.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் சீரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிப் பாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டேழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையுமாந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணியுகந்தேலோறேம்பாவாய்

மூன்றாம் பாசுரம்
 மூன்றாம்  நாள்  பாசுரத்திற்கு ஏற்றாற்போல் ஆண்டாள உலகலந்த                                                                  அலங்காராம்


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கல்மும்மாறிப் பெய்து
ஒங்குபெருஞ்செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுபடுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக், குடம் நிறைக்கும் வள்ளர்பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரேம்பாவாய்.



இரண்டாம் நாளுக்கான ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசம் மூன்றாம் நாளுக்கான ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசம்.

வெள்ளி, டிசம்பர் 23

பிருந்தாவனம்


பிருந்தாவனம் நெருஞ்சி முள் காடாக இருந்த இந்த இடத்தை மாடு கன்றுகள் மேய்க்கும் மேய்ச்சல் நிலமாக மாற்றியது கண்ணன் என்கிறார்கள். அதனால் "பிருந்தாவனம்",என்று பெயர் "நெருஞ்சி முள்காடு" என்று பெயர் பெற்றது. இதன்படி கண்ணனால் உருவாக்காப்பட்டது, பிருந்தாவனம் ஆகும். பிருந்தாவனம் மதுராவுக்கு அருகாமையில் உள்ளது. நாச்சியார் திருமொழி 14வது பதிகம் முழுமையும் பிருந்தாவனத்தைப் பற்றியே, கண்ணனைத் தேடியும், கண்டும் அனுபவித்துப் பாடியிருக்கிறாள், கோதை நாச்சியார் . பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே? இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே. (14-1) பிருந்தாவனத்தில் பனிரெண்டு காடுகள் உள்ளன அவை.1 மகாவனம்.
2.காம்யவனம்.3.மதுவனம். 4.தாளவனம். 5.குமுத வனம்  6.பாண்டிரவனம்.7.பிருந்தாவனம்.8கதிரவனம்.9.லோஹவனம் 10.பத்ரவனம்.11.பஹுளாவனம். 12.பில்வவனம், ஆகியவையாகும். இவற்றுள் ஏழு வனங்கள் யமுனையின் மேற்குக் கரையிலும் ஐந்து கிழக்குக் கரையிலும் உள்ளன. பிருந்தாவனத்தில் மட்டுமே ஏழுநாட்கள் தங்கி பரிக்ரமா செய்து எல்லா இடங்களையும் சேவிக்கலாம். பிருந்தாவனத்தில் எல்லா இடங்களும் பார்க்க வேண்டிய இடங்கள தான். இங்கு சில முக்கியமான இடங்களை அதன் மகத்துவத்துடன் பார்க்கலாம்.
1.கேசிகாட்:

கம்சன் தன்னுடைய அசுரனான (கண்ணனைக் கொல்வதற்கு எல்லா வழிகளையும் முடித்த பின்), கேசியைக் கூப்பிட்டு "போய்,கண்ணனை கொன்று விட்டு வா" என்று ஆணையிடுகிறான்.வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல குதிரை வடிவில் வருகிறான்.வருகின்ற வேகத்தை நாரதர் "ஜகத்தே அஸ்தமித்து விட்டது" என்று கூறுவதாக ஸ்வாமிகள் கூறுகிறார். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் கேசி வதத்தை "துறந்கம்வாய் கீண்டுகந்தானது தொன்மையூர் அரங்கமே" என்று அருளினார்.
2.நிதுவனம்:
கண்ணன் அந்தி சாய்ந்தபின் கோபிகைகளோடு விளையாடிய பல தோட்டங்களுள் இது முக்கியமானது ஆகும்.மிக அதிகமான சின்ன சின்ன மரங்களை அதிகமாகக் கொண்ட இடம் ஆகும்.
3.இம்லி தலா:
இங்குள்ள புளிய மரம் கண்ணன் காலத்தில் இருந்துஉள்ளது.இம்மரத்தின் அடியில் கண்ணன் அடிக்கடி வந்து கோபியருடன் அமருவான்.சில சமயம் கோபிகைகளைப் பிரிந்த விரஹ தாபத்தால் கருத்த கண்ணனின் திருமேனி வெளுத்துவிடும்.அப்போது இந்த மரத்தின் அடியில் அமர்ந்தவுடன் பழைய நினைவு வந்து கருமை நிறம் வந்து விடுமாம்.
4.புராணா காளிய காட்:
 


"காளிங்கன்" என்னும் கொடிய விஷமுடைய பாம்பு ஒரு மடுவில் இருந்து கொண்டு தன் விஷ மூச்சால் அருகில் உள்ள செடி கொடி மற்றும் பிராணிகளை அழித்து வந்தது.கண்ணன் இப்பாம்பை அடக்கி, கடலுக்குள் விரட்டியடிக்க எண்ணி அருகில் உள்ள கடம்ப மரத்தின் மீது ஏறி காளியன் தலையில் குதித்தான்.கண்ணனைத் தாங்கமாட்டாத காளிங்கன் அவனிடம் சரணடைந்து வேண்ட, கண்ணனும் அவனை மன்னித்து ஒட்டிவிட்டான். அந்த இடம்தான் புராணா காளியகாட் என்று அழைக்கப் படுகிறது.
5.சேவா குஞ்ச்:

கண்ணன் மாலைப்பொழுதில் கோபியர்களோடு ஆடிப்பாடி விளையாடிய இடம்.இன்றும் இரவில் இந்தத் தோட்டத்தில் வாத்தியம் மற்றும் பாட்டொலி கேட்கிறது என்று சொல்கிறார்கள்.மாலை 5.30க்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை.கூட்டம் கூட்டமாக இங்கு இருக்கும் குரங்குகள் கூட மாகி இங்கிருந்து இடம் பெயர்ந்து சென்று விடுகின்றனவாம்.

6.ஸ்ரீரங்கஜி மந்திர்:



காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ.உ.வே.கோவர்த்தனம் ரங்காச்சார்ய ஸ்வாமி என்பவர் 1845ல் தொடங்கி 1851ல் கட்டி முடித்த கோயில் இது.தென்னிந்திய பாணியில் சோழர்கள் சிற்ப கட்டிடக் கலை பாணியில் அமைந்துள்ள புராதனமான கோயில். பிரதான மூர்த்தி கண்ணன் புல்லாங்குழல் சகிதமாக சேவை சாதிக்கிறான்.ஆண்டாளும் சேவை சாதிக்கிறார்கள். மேலும் ஸ்ரீ ரங்கநாதனுக்கும் ஆழ்வார், ஆசார்யர்களுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. பிருந்தாவனமே முழுதும் கோயில்கள் தான். எதை விடுவது எதைச் சேர்ப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. இருந்தாலும் முக்கியமான சில கோயில்கள்------கோவிந்தாஜி மந்திர்,க்ருஷ்ண பலராம் மந்திர்,

 க்ருஷ்ண பாராம் மந்திர்


 ஷாஜி மந்திர்
மது  வனம்

பாங்கே பிஹாரி (கூட்டம் சொல்லி மாளாது) மந்திர், ராதாவல்லபஜி மந்திர், காஞ்ச (கண்ணாடி) மந்திர் (முழுவதும் கண்ணாடியால் பதிக்கப்பட்ட, மற்றும் இயக்கம் கொண்ட கண்ணனின் திருவிளையாடல் காட்சிகள்---பார்க்க வேண்டிய முக்கியமான இடம்),ஷாஜி மந்திர்

வியாழன், டிசம்பர் 22

திருப்பாவை முதல் பாசுரம்





திருப்பாவை

தனியன்

நீளா துங்கஸ்தநகிரிதடீ ஸூப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்தமத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து  பூய: 

அன்னவயற்புதுவவையாண்டாளரங்கற்குப்
பண்ணு திருப்பாவைப் பல்பதியம்--- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த  சுடர்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்-----நாடிநீ
வேங்கடவற்கென்னை விதிஎன்றவிம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.

முதல் பாசுரம்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்குமாய்ப்பாடிச்  செல்வச்சிறுமீர்காள்!
கூர்வேற்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்த கண்ணியசோதையிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரேம்பாவாய்