புதன், பிப்ரவரி 7

இராமானுஜா அனு யாத்திரை: ஆறாம் பகுதி:










இராமானுஜா அனு யாத்திரை: ஆறாம் பகுதி: 
நேரா கோயிலை நோக்கி வண்டிய நகர்த்த சொன்னேன் சென்ற பகுதியில.
ஏன் சார் மீண்டும் கோயில்?
ஆமாம், முன்னாலேயே சொல்லியிருந்தேனே, கொடியேற்றம் முக்கியமானது
ஜகன்னாதர் கோயில் கொடியேற்றம் உலகப்பிரசித்தி பெற்றது  அதைப்பற்றி முன்னறே எழுதியுள்ளேன்.
அவ்வளவு உயரம் உள்ள கோபுரத்தில் எவ்வாறு ஏறுவார்கள் என்று ஆர்வம்.
மணி ஆகிக்கொண்டே இருந்தது. டிரைவர் “போய் விடலாம் சார்” என்று ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார்.
கோயிலுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் காரை நிறுத்தி இறக்கிவிட்டார்.
எதிரே வரும் நபரை விஜாரித்ததில், “முன்னறே கொடியேற்றம் முடிந்துவிட்டது” என்றாறே பாக்கணும். யார் முகத்திலும் ஈயாடவில்லை.

இதுக்கு நடுவில் ஸ்வாமிகள் கோயில் முகப்பில் இருந்து பக்தர்களுடன் வீதிப் பிரதிக்‌ஷிணம் போய்க் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு, நாங்களும் அதில் கலந்துகொண்டு முடிவில் வீதியின் முடிவில் உள்ள குண்டிசா மந்திரை அடைந்தோம். பெரிய மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தது. அதன் முடிவில் ஸ்வாமிகளின் உபன்யாசம் நடந்தது.
இரவு ஆகாரத்தை முடித்துக்கொண்டு அறைக்கு வந்தோம். மறுநாள் விடியற்காலை ஊரைவிட்டு கிளம்பி, இடையில் சாகஷி கோபால் சன்னிதியை தரிசித்துவிட்டு, அன்று இரவோ அல்லது மறுநாள் காலை எங்களின் அடுத்த திவ்ய தேசமான கயா அடைவதாக ப்ளான்.
எல்லாம் சரியாக இருக்க விடியற்காலை எங்கள் சாமான்களை எடுத்துக்கொண்டு பஸ்ஸில் பயணமானோம்.
சாக்ஷி கோபால் சந்நிதி

அருகிலேயே இருந்தது சாகஷி கோபால் சன்னிதி.
பூரிக்கு வருபவர்கள் சாக்‌ஷி கோபால் சன்னதிக்கு வந்து அட்டடண்ஸ் கொடுத்துட்டு போகணுமாம், இல்லைன்னா யாத்திரை பூரத்தியாகாதாம்.
எதுக்கு வம்புன்னு எல்லாரும் ஒரு விஸிட் பண்ணிடுவாங்களாம்.
சின்ன கோயில் தான். வரிசையில் நின்று பெருமாளை சேவித்தோம்.
1400 பேரும் சேவித்து அங்கேயே ஸ்வாமிகள் ஏற்பாடு செய்து இருந்த (அதுவும்  தான் இந்த டூர்ல விஷேஷம்) காலை உணவை முடித்துக்கொண்டோம்.
பஸ்ஸில் ஏறி உட்காந்தோம், அடுத்த. திவ்யதேசம் கயா.
கிட்டத்தட்ட 18மணி நேரப் பயணம்.
கயா, ஆசையை துற என்று உபதேசம் செய்த புத்தரின் போதி மரம், மற்றும் உபதேசம் செயத இடம் மற்றும் இந்துக்களின் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் முக்கியமான இடம் ஆகும்.
எல்லா காலங்களிலும் முக்கியமான இடம்.
எங்கள் வண்டி பல மணி நேரத்துக்கு பிறகு, ஒருவழியா புத்த கயா வந்து சேர்ந்தது  கயாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்த கயா. எங்கள் எல்லா பஸ்களும் கயாவில் நிறுத்தமுடியாது என்பதால் புத்த கயாவை நோக்கி எங்கள் பயணம் முடிந்தது.
கயாவில் என்ன விஷேஷம்?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக