சனி, ஜனவரி 20

ராமானுஜா அணு யாத்திரை ஸ்ரீகூர்மம்


ஶ்ரீகூர்மம்.
தசாவதாரத்தில கூர்மாவதாரம் முக்கியமானது, இந்திய தேசத்தில் பல ஷேத்ரங்கள் வெவ்வேறு அவதாரங்களுக்கு என கோயில்களைக் கொண்டுள்ளன. வராக அவதாரத்துக்கு என ஒரு ஊர் உள்ளது.  ராமாவதாரத்துக்கு அயோத்தி போன்ற பல ஊர்கள் உள்ளன. 

கிருஷ்ணாவதாரத்துக்கு கேடகவே வேண்டாம். 
ஆனால், கூர்மாவதாரத்துக்கு??
ஆம், எங்களின் இராமானுஜா அனு யாத்திரையின் அடுத்த ஷேதரம்
ஶ்ரீகூர்மம். சிம்மாசனத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவு உள்ள ஶ்ரீகூர்மத்துக்கு இரண்டு மணி பிரயாணத்துக்கு பிறகு வந்து சேர்ந்தோம். கூர்மாவதாரத்துக்கு என அமைந்த ஊர் ஶ்ரீகூர்மம், என்கிற அழகான சிற்றூர். 
ஆமை வடிவில் உள்ள மூலஸ்தானம்












ஆந்திர மாநிலத்தில் உள்ளது. ஊரெல்லாம் ஆமையாக இருக்கும் எனபதால, அவைகளை கூட்டுக்குள் அடைத்து வைத்துள்ளார்கள்.
சின்ன கிராமம் தான் ஶ்ரீகூர்மம்.

கோயில் முகப்பு


கோயில் முகப்பில் மந்திர மலையை கடையும் சிற்பம்
மந்திரமலையை கடையும் போது கடலுக்குள் சென்றுவிடாமல் கூர்மாவதாரம் எடுத்து தாங்கினார் பெருமான். அதனை சிற்ப வடிவமாக உள்ளே நுழையும் போது மேலே ஆரச்சில் வடிவமைத்துள்ளாரகள்.
சிறிது தூரம் சென்றால் கோயில் காணப்படுகின்றது.. சின்ன கோயில் தான். கோயிலின் தல வரலாறு வைத்துள்ளார்கள். கோயிலின் வலப்புறத்திலேயே நிறைய ஆமைகள், வெளியே 
வந்துவிடாமல் இருக்க, அவைகளை கூண்டில் அடைத்து வைத்துள்ளார்கள். கோயிலின் பிரசாரத்தில் நான்கு புறமும், 108 தூண்கள். 

ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளன.
கரப்பகிரஹத்தின் உள்ளேயே சென்று பெருமாளை சேவிக்கலாம். சந்நனக்காப்பு இட்டுள்ளார்கள். திவ்ய தரிசனம் கிடைத்து பாக்யம் பெற்றோம்.
பிரசாரத்தில் தசாவதாரத்துக்கும் சிற்ப வடிவில் வைத்துள்ளார்கள்,
கோவிலில் ஸ்வாமிகள் அந்தக் கோவிலின் மகாத்மியத்தை விளக்கினார்.
33 பஸ்களும் ஊருக்குள் சென்று வருவதில் சிறிது சிரமம் ஏற்பட்டது.
அற்புதமான ஒரு அவதாரத்துக்கான ஒரு ஷேத்ரத்தை சேவித்த மனதோடு அடுத்த முக்கியமான, நீண்ட நாள் கனவு,  ஊருக்கு கிளம்பினோம். 
எந்த ஊர்?

பார்ப்போம், அடுத்த ஊரில்!!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக