புதன், ஜனவரி 10

இராமானுஜ அனு யாத்திரை சிம்மாசலம்.




















இராமானுஜ அனு யாத்திரை சிம்மாசலம்.
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திவ்யதேசங்களில் இதுவும் முக்கியமானதாகும்.
இங்கு ஶ்ரீமன் நாராயணன் வராக நரசிம்மராக அவதரித்தார்.
ஷேத்திர விஷேஷம்.
ஹிரண்யன் பிரஹலாதனை பல விதங்களில் துன்புறுத்துகிறான். இங்கு இருக்கும் (விசாகப்பட்டினம் அருகில் உள்ளது, அழகிய கடற்கரையை கொண்டது) கடலில் தள்ளிவிடுகிறான். ப்ரஹலாதன் “தராகீ, தராகீ”, என பகவானை சரண் அடையக் கூப்பிடுகிறான். கடலில் அமிழ்ந்து கொண்டிருக்கும் ப்ரஹலாதனை காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில், தன்னுடைய பீதாம்பரம் அவிழந்துவிட்டதைக் கட்டி முடிந்தால் நேரமாகிவிடும் என்பதால், அதனைக்கூட முடியாமல், ஒரு கையில் பீதாம்பரத்தைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் உள்ள கட்டை விரலால், கருடனுக்கு வாயில் அமிர்தத்தை கொடுத்துக் கொண்டு, குதிக்கிறார். குதித்த வேகத்தில் பகவானின் பாதங்கள் பாதாளம் வரை சென்று விடுகின்றன .ஹிரண்யகசிபுடன் 32 ரூபங்கள எடுத்து போர் புரிகிறாராம். அதில் ஒன்று வராகநரசிம்மர் அவதாரம் ஆகும். சிறிது காலம் ப்ரஹலாதன் இவரை ஆராதித்துவிட்டு தன்னுடைய ராஜயத்திறகு திரும்புகிறார். சிறிது காலம் பகவானுக்கு ஆராதனம் இல்லாமல் போலவே, புற்று மூடி அந்த இடம் காடாக மாறிவிடுகிறது.
பின்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற சக்கரவர்த்தி இந்த இடத்தை கடந்து செல்லும் போது, அவரது விமானம் தடைபடுகிறது. என்ன காரணம் என்று திகைக்கிறார். கனவில் வந்து, “நான் இங்குள்ள காங்கதாரா என்ற தீரத்தத்தின் அருகில் உள்ள புற்றில்” இருப்பதாகச் சொல்ல, அவரை எழுந்தருளப்பண்ணி, காங்கதாரா தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்கிறான். அந்த நாள் அக்ஷ்யதிருதியை எனப்படும் நாள். அந்த நாள் மட்டும் பெருமான் நிஜரூப தரிசனத்தில் காட்சியளிக்கிறார்.
மற்ற நாட்களில் சந்தனகாப்பு தரிசனம் தான்.
சந்தனகாப்பு என்றால் எவ்வளவு தெரியுமா?
வைகாச சுக்ல த்ருதீயை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறாரகள். எல்லா நாட்களும் சந்தனகாப்புடன் காட்சியளிக்கிறார் என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.
வேளுக்குடி ஸ்ஸவாமிகளின் இராமானுஜ அனு யாத்திரை இரண்டாம் பகுதியில், அகோபிலம், பத்ராசலம் ஆகியவற்றைப் தரிசித்துவிட்டு,
பத்ராசலத்தில இருந்து இரவு புறப்பட்டோம் என்று முந்தைய பகுதியில் முடித்து இருந்தேன். கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தொலைவு உள்ளது பத்ராசலத்தில் இருந்து. காலை7 மணிவாக்கில் வந்து சேர்ந்தோம். சுற்றி மலையாக உள்ளது ஊர். எங்களுக்கு ஒரு ஹால் மற்றும் சிறிய அறை கொடுத்தார்கள். எல்லோரும் காலைக்கடனகளை முடித்துக்கொண்டு உடனே கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறியதால், எல்லோரும் குளிப்பதற்கு அலைந்தோம். எங்களுக்கு முன்னர் வந்து குளித்து தயாராக இருந்தவர்களிடம் குளியல் அறையை பயன்படுத்த அனுமதிக்க கேட்டோம். என்னவோ அறை தங்களது போன்று சிலர் பயன்படுத்த யோசித்தனர்
எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்கள், இவர்கள் எல்லாம் நாலு பேரோடு செல்ல தகுதியற்றவர்கள்.
ஸ்வாமிகள் அடிக்கடி சொல்வார், “கூடியிருந்து குளிரவேண்டும” என்று. அதனை புரிந்துகொள்ளாதவரகள். இவர்களை என்னவென்று சொல்வது?
எப்படியோ, அடித்துபிடித்து, குளித்துவிட்டு எங்கள் பஸ்ஸிலியே ஏறி சிம்மாசலம நோக்கி பயணமானோம். சிறிய மலையின் மீது கோயில் உள்ளது. எக்காலத்திலும் பக்தர்களின் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது போல.

தங்குவதற்கு தேவஸ்தானம் நிறைய அறைகள் கட்டி உள்ளார்கள். பெருமானை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். வெளியே வந்து காங்கதாரா அருவி, எங்கிருந்து வருதுன்னு தெரியல, ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் புரோஷித்துக்கொண்டோம். ஸ்வாமிகள் கல்யாண உற்ச
சிம்மாசலம் பெருமாள்
வத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள், அதனை தரிசித்துக்கொண்டு, கல்யாண சமையல் ஏற்பாடு செய்து இருந்த அதில் பங்குகொண்டோம். மாலை 3 மணியளவில்,
 உடையாளூர் அவர்களின் நிகழ்ச்சியில் பங்கு கொண்டோம். மாலை 6 மணியளவில் உற்சவர் வராக நரசிம்மர் கருடவாகனத்தில் புறப்பாடு கண்டருளினார். நம்மூரில வாகனத்தில் ஏளப்பண்ணுவது போல அல்லாமல், வாகனம் தனியாக பெருமாள் தனியாக உலா வருகிறார். பின்னர் ஸ்வரண கவசத்தில் மூலவர் சேவை, மின்னுவதை தரிசித்தோம். ஆகாரம் அங்கேயே விநியோகித்தார்கள், அதனை முடித்துக்கொண்டு மலையில் இருந்த அரசு வாகனத்தில் அறைகளுக்கு திரும்பினோம்.
மறுநாள் ஶ்ரீகூர்மம். முக்கியமான ஸ்தலம்.
எப்படின்னு கேட்கிறீரகளா?

பார்ப்போம், அடுத்த பகுதியில்!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக