புதன், ஜனவரி 3

இராமானுஜ அனு யாத்திரை பத்ராசலம் பகுதி 3











இராமானுஜ அனு யாத்திரை பத்ராசலம் பகுதி 3
சென்ற பகுதியில் பத்ராசலம் பற்றியும், பக்த ராம்தாஸ் எப்படி கோயிலை பராமரித்தார் என்பதையும் பார்த்தோம். ஒரு நாள் முழுக்க அங்கு தான் இருக்கவேண்டும். முன்னரே நான் சொன்னமாதிரி, எங்கள் மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு கோதாவரி நதிக்கரையை நோக்கி ஆட்டோவில் பயணமானோம். நதி அருகில் தான் உள்ளது. நடந்து கூட போய்விடலாம்.
நதிக்கரை பார்க்கவே ரம்மியமாக இருந்தது. சூரியன் அப்போது தான் ஸ்நானம் பண்ண வந்து உள்ளான். அகலமான நதி. படகு சவாரி இருந்தது.
நிறையபேர் இக்கரையில் இருந்து அக்கரை நோக்கி பயணப்பட்டார்கள்.
தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.நாங்களும் ஸ்நானம் செய்தோம்.




உடை மாற்றிக்கொண்டு கரையில் சிறிது நேரம் காலார நடந்தோம். வேடிக்கை என்னவென்றால், கரையிலேயே ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் போயக்கொண்டிருந்தன. அவ்வளவு அகலமான கரை. வெகு அருகாமையில் பத்ராசல ராமர் கோயில் ஒரு குன்றின் மேல அமைந்துள்ளது கரையில் இருந்து தெரிகிறது.நிறைய புகைப்படம் எடுத்துக்கொண்டு பத்ராசல ராமரை தரிசிக்கச் சென்றோம்.
முன்னே  சொன்ன மாதிரி கோயில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. நிறைய படிக்கட்டுக்கள் இல்லை. முதலிலேயே ராமர் பாதம் தரிசித்துக்கொண்டோம். மூலவர் ராமர் சன்னிதி, முன்னாலேயே சொன்னமாதிரி, ராமர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோருடன் ஆசீர்வதிக்கிறார்.
பக்தராமதாஸ் பயன்படுத்திய பொருட்களை காட்சியாக வைத்து, உள்ளே செல்ல கட்டணத்துடன் அனுமதிக்கிறார்கள்.
விசாலமான கூடத்தில் சீதா கல்யாணத்துக்கு ஸ்வாமிஜி ஏற்பாடு செய்து இருந்தபடியால், நாங்கள் எல்லோரும் அங்கேயே அமர்ந்து பங்கெடுத்துக்கொண்டோம். மதியம் அருகில் உள்ள கல்யாணமண்டபத்தில் கல்யாண சாப்பாடு முடித்துக்கொண்டு அறைக்கு வந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டோம். மாலையில் ஸ்வாமிஜி உபந்யாசம் முடிந்து ஆகாரத்தை முடித்துக்கொண்டு மீண்டும் பயணம், சிம்மாசலம் நோக்கி.
சிம்மாசலம்!!!!!!
முக்கியமான ஷேத்ரம், எப்படி என்கிறீர்களா?

பார்ப்போம் சிம்மாசலத்தில் அடுத்த பகுதியில்!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக