ஞாயிறு, நவம்பர் 6

ஸ்ரீமத் பாகவத க்ருஷ்ணானுபவ யாத்ரை

ஸ்ரீமத் பாகவத க்ருஷ்ணானுபவ யாத்ரை.

அக்டோபர் 9 முதல் அக்டோபர் 15ம் தேதி வரை வேளுக்குடி ஸ்ரீ.உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமிகள்  மதுரா, பிருந்தாவனம், கோகுலம், கோவர்த்தனம்,காம்யவனம், பர்சானா மற்றும் நந்த்காவ்
போன்ற கண்ணன் பிறந்து வளர்ந்து,விளையாடிய, சேஷ்டிதங்கள் செய்த இடங்களுக்கு சுமார்  ஏழாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களை அழைத்துக் கொண்டு , பிருந்தாவனத்தில்  ஏழு நாட்கள் ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.அந்த வைபவத்தில்
கலந்து கொள்ளும் பாக்கியம் நாங்களும் பெற்றோம்.
முற்பிறவியில் செய்த புண்ணியமோ என்னவோ,எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் சொன்னமாதிரி,இந்த யாத்திரையின் குறிகோளாக கிருஷ்ண பக்தியை வளர்த்துக்  கொள்ளுதல்,அவன் கதைகளை ஒருவருக்கு ஒருவர் பேசி இன்புறுதல், பக்தர்களோடு கூடி  விட்டுக்கொடுத்து க்ருஷ்ண பக்தியால் ஓர் குடும்பமாக இருத்தல் என்ற ஏதேனும் ஒரு
தன்மையை வளர்த்துக் கொள்ள இந்த யாத்திரை உதவியது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆழ்வார்கள் தங்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பாடியபடி, கண்ணன் செய்த  விளையாட்டுக்களை ஏதோ நாங்களே அந்த சமயத்தில் அவனுடன் கூட இருந்து பார்த்தது  போல எங்களுக்கு சந்தர்ப்பம் அருளுயிய சுவாமிகளுக்கு எங்கள் பாதாரவிந்தங்களை  சமர்ப்பிக்கின்றோம்.
புண்ய நதியான யமுனைக்கு இருகரையிலும் தில்லிக்கு சுமார் 100மைல் தெற்கே விரிந்துள்ளது  வ்ரஜ பூமி ஆகும்.
வடமொழியில் 'வ்ரஜதி' என்றால் 'செல்லுதல்' அல்லது ;திரிதல்' என்று பெயராம். எங்கு மாடு கன்றுகளும் ஆயர்களும் திரிந்தார்களோ அந்த இடத்திற்கு 'வ்ரஜ பூமி' அன்று பெயர் ஏற்பட்டது. உலகத்தை உய்விக்க ஸ்ரீமந்நாராயணன் கண்ணனாக அவதரிக்க வ்ரஜ பூமியைத் தேர்ந்தெடுத்தான்.
சுமார் 168 மைல் சுற்றளவு கொண்ட வ்ரஜ பூமியின் பெரும்பகுதி   உத்திரப்பிரதேசத்திலும் மற்றும்  சிறிதளவு பகுதி ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் உள்ளது. கண்ணன் பிறந்த இடம் மதுரா, வளர்ந்த இடம் கோகுலம், நந்தக்ராமம்,பல சேஷ்டிதங்கள்  செய்த ப்ருந்தாவனம், கோவர்த்தனம்,பர்சானா மற்றும் காம்யவனம் ஆகியவற்றைப் பற்றித் தனித்தனியாக  அதன் சிறப்பையும் பின்வரும் பகுதிகளில் காண்போம்.
இந்த ஷேத்திரங்கள் பற்றிய  வேளுக்குடி ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணன்  சுவாமிகளின்
முகப்புரையின்  ஒலிப்பகுதி தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக