திங்கள், மார்ச் 19

ஊர் கூடி தேர் இழுப்போம்!!!!!

ஊர் கூடி தேர் இழுப்போம்!!!!!
முக்திக்கு சுலபமான வழி!!
பிறந்தவர்கள் எல்லோரும் இறக்கத்தான் போகிறார்கள். ஆழ்வார் சொல்கிறார், மனிசரின் வயது நூறு  எனக்கொண்டால், அதில் பாதி வருடம் தூக்கத்திலேயே போய் விடுமாம். மீதி உள்ள  ஆண்டுகளில், பிணி, மூப்பு, பாலகன், அதாகும் போன்று ஆண்டுகள் பதினைந்து போய்  விடுமாம். இதில் பகலில் தூங்குவதையும் சேர்த்துக் கொண்டால் நாம் உயிர் வாழ்வது மிகக்
குறைந்த ஆண்டுகள் தான்.
நாம் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப, இறந்த பின் நரகமோ அல்லது சொர்க்கமோ  கிடைக்கப் போகிறது.
"உன் கடைசி ஆசை என்ன?" ன்னு
வயதானவர்களைக் கேட்டுப் பாருங்கள்,
"எங்கும் சுற்றி ரங்கனைச் சேர்" என்பார்கள். அதுபோல
"கடைசிக் காலத்திலே என்னைக் கொண்டு போய் பாடுவான்துறையிலே
சேத்துடுங்கப்பா" என்பார்கள்.
அதென்ன பாடுவாந்துரைங்கிங்களா? திருமங்கை மன்னன் படித்துறை, கொள்ளிடத்தின் கரையில் உள்ளது.
இது திருமங்கை ஆழ்வார் பற்றியது.
திருமங்கை மன்னன் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்டபின், அவனுக்காக பல இடங்களிலும்  பொன், பொருள் இவற்றைத் திருடி, திருவரங்கத்தின் திருமதிளைக் கட்டினான். இவர்  பெயரில் "ஆலீ நாடன் திருச்சுற்று" ஒரு திருச்சுற்று உள்ளது.  மதில் கட்டுவதற்கு உதவிய கம்மாளர்களுக்கு பாக்கி கொடுக்க முடியாமல், படகில் ஏற்றி  ஆற்றில் தள்ளினார். எப்படி இருக்கு பாருங்கள்!
பெருமானின் அருளால், எதிர்த்து வந்த அவர்களின் பேரன்களை, காவேரி நீராழி மண்டபத்தில் நின்று கொண்டு, இறந்து போனவர்களை அழைக்கச் சொன்னார். பித்ருக்கள் அனைவரும்  பெருமாளோடு அங்கு தோன்றி
"நாங்கள் ஆழ்வார் அருளோடு பெருமாளோடு சுகமாக  இருக்கிறோம் நீங்களும்  ஆழ்வாரையே தஞ்சமாக பற்றி இருங்கள்"
என்று கூறினர்.
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை பார்த்து
 " உம் விருப்பத்தைக் கேளும்" என வினவ
ஆழ்வார்,
      "தங்கள் தசாவதாரங்களை காண்பிக்கவேண்டும்"
என்றார். மேலும் "என்ன விருப்பம்?" என பெருமான் கேட்க,
"நம் பக்தர்களுக்கு உயர் கதி அளிக்கவேண்டும்', என ஆழ்வார் கேட்க,
"உம் வாளை வேகமாக வீசும், அது எங்கு விழுகிறதோ அங்கு இறுதிச் சடங்குகளை  செய்பவர்களுக்கு உயர்கதி அளிப்போம்",
என்றான் அரங்கன்.
ஆழ்வார் தான் வாளை வேகமாக வீச, அது வடதிருக்காவிரியின் கரையில் விழ, அங்கு  "பாடிய வாளன் துறை" என்ற பெயரோடு இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடமாயிற்று.
அதைத் தான் "பாடுவாந்துரை, பாடுவந்துறை" என்று சொல்லுகிறார்கள்.
அப்படி பாடுவாந்துரையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றால் முக்தி நிச்சயம்.
அதற்காகவவாது ஸ்ரீரங்கத்தில் இறக்க வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவார்கள்
பாடுவாந்துறை:
நன்றி: கிஞ்சித்காரம் ட்ரஸ்ட் 2012 நாட்காட்டி
அந்தப் பாடுவாந்துரையில் இறுதிச் சடங்குகள் நடத்த ஏதுவாக, அந்திம ஸம்ஸ்காரங்களையும் வருடாந்திர ஸ்ரார்த்த காரியங்களையும் செய்ய வசதியாக தர்ம சிந்தனை உடைய  சிலரால்

"ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் ட்ரஸ்ட்"
 2008 ஆண்டு பதிவு செய்யப்பட்டு  முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. கொள்ளிடக்கரையில் 11000 சதுர அடி, ஒரு தர்ம சிந்தனை  கொண்ட குடும்பம் மூலமாக தானமாக பெறப்பட்டு, ட்ரஸ்ட் பெயரில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
நித்ய விதிகளுக்கு அறைகள், கிணறு, கரைப்பதற்கு குளம், தீட்டு இல்லாமல் காரியங்கள்  நடத்த தனியான இடம், கழிவறைகள், தடையில்லாத மின்சாரம் போன்றவைகளுக்கு  நன்கொடைகள் எதிர்பார்க்கிறார்கள்.
ராமனுக்கு அணில் செய்தது போல், ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். இதில் அளிக்கப்படும் நன்கொடைகள் 80G பிரிவின் படி வருமான வரி விலக்கு உண்டாம்.
மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
                 ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் டிரஸ்ட்
                 23, ராஜாஜி தெரு, ரெங்கநகர், ஸ்ரீரங்கம்,திருச்சி-620006
                 போன்:0431-2433078,
                E-Mail:stmmtrust@yahoo.com
ஆக ஸ்ரீரங்கத்தில் இருந்தாலும் சொர்க்கம், மறைந்த பின்னும் சொர்க்கம்.
அதனால் தான் ஸ்ரீரங்கத்தை பூலோக சொர்க்கம் என்கிறார்களோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக