புதன், நவம்பர் 7

எலக்‌க்ஷன் நடததராங்களாம்,எலக்க்ஷன்!!!!!



”தலையைச் சுற்றுதப்பா, இவங்களோட தொல்லை, எங்கப்பா நம்ம செசகரட்டரி?” 
வெள்ளை மாளிகையின் அறையில் இருந்து வெளியே வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டே
ஒபாமா தன்னுடைய செகரட்டரியை சத்தம் போட்டு கூப்பிட்டார்.
அவருடைய மனைவி, இவருடைய சத்தத்தை பார்த்து,
“எதுக்காக இந்த சத்தம் போடூறீங்க, இதுவரை இப்படி உங்களைப் பார்த்ததில்லையே?”
“பின்ன என்ன, நம்ம ஊர்ல எலக்ஷ்ன் நடக்குது, அத பாக்க வாங்கன்னு போனவாரம் இந்தியாவில் உள்ள  முக்கியமான அரசியல் தலைவர்களை கூப்பிட்டிருந்தேன்.”
“அது சரிதானே, அதுக்கு ஏன் இவ்வளவு சத்தம்?”.
“இந்தியப் பிரதமர் அவங்க மாநிலத் தலைவர்களிடம் சொல்லி இருப்பார் போல, அவங்க உடனே தங்கள் முக்கியமான தொண்டர்களை அனுப்பி இருந்தாங்க, சரி இருக்கட்டும்ன்னு பார்த்தா, நம்மள ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போலத் தோணித்து, அதனாலெ தான் நம்ம செகரட்டரியைக் கூப்பிட்டேன், உடனே அவங்களை இந்தியாவுக்கு பேக் பண்ணி அனுப்பச் சொல்லலாம்ன்னு. அவஙகளோட இருந்த பழக்க தோஷம், கத்தித் தொலைச்சுட்டேன், சாரி   டியர், என்னை மன்னிச்சுடு”.
’உலகத்திலேயே பெரிய வல்லரசு நாடுன்னு உங்களச் சொல்லற போது, உஙகளையே ஒரு சிலர் வழி பண்ணிட்டாங்கன்னு சொல்றீங்க, அப்படி என்ன தாங்க நடந்தது, எனக்கும் சொல்லுங்களேன்.”
அழ மாட்டாக் குறையா ஒபாமா மனைவி.
”போன வாரத்தில் இருந்து நடந்தது இதுதான்”, பிளாஷ் பேக்கை விவரிக்கிறார் ஒபாமா.

 ஒபாமாவின் செகரட்டரி, “மிஸ்டர் ப்ரசிடெண்ட், இந்தியாவில் இருந்து நாம கூப்பிட்டு இருந்த
பத்து பேர் வந்து இருக்கிறார்கள், அவர்களை என்ன செய்வது?”
’ஐந்து பேரை நம்மோட போட்டியிடும் மிஸ்டர் ரோம்னியிடம் அனுப்பிவிடுங்கள், அவரிடம் முன்னதாகவே
சொல்லி இருந்தேன். மீதி ஐந்து பேரை நாம் எஙகெல்லாம் பிரசாரத்துக்குப் போவொமோ அங்கெல்லாம் அவரகளையும் அழைத்துச் செல்வோம்.” ஒபாமா தன் செகரட்டரியிடம் சொன்னார்.
“யெஸ் பிரசிடெண்ட்”.
மறுநாள் காலையில்,
“டேய் மாணிக்கம், எலக்‌ஷ்ன் இங்கெல்லாம் ஒருவாரம் நடக்குமாம், நமக்கு நல்ல வேட்டைதான்”.
“என்னடா கண்ணாயிரம் சொல்றே?”
“ஆமாண்டா, நம்மூர்ல செய்வொமே, ஒரு ஊர்லே லாரியிலே நம்மாட்க் களை ஏற்றி, கள்ள வோட்டு போடச் சொல்லிட்டு அவங்களை மற்றொறு ஊருக்குக் கொண்டு போய் ஒட்டுப் போடவைப்போமே, அது போல இஙக
ஒருவாரம் எலக்‌ஷன் நடப்பது ந்ல்லது தான். நம்ம தலைவர் ஒபாமாவிடம் சொல்லி ஆடகளை ரெடி பண்ணச் சொல்லிடுவோம். என்ன நான் சொல்றது சரிதானே மாணிக்கம்?”
”ஆங், சரியாச் சொன்ன கண்ணாயிரம். தலைவர் வர்ராரு, சொல்லிருவோம்”
"என்ன மிஸ்டர் மாணிக்கம், என்ன வேணும்?”
“கள்ள வோட்டு போடறதைப் பற்றி உங்ககிட்ட பேசலாம்ன்னு.......”
“அப்ப்டீன்னா?”
“இங்க ஒருவாரம் எலக்‌ஷன் நடக்குதில்ல, அத நமக்குச் சாதகமா மாத்திக்க கள்ள வோட்டு போட ஏற்பாடு செய்யலாம்ன்னு உங்க கிட்ட பேசலாம்ன்னு....”,விளக்கினான் மாணிக்கம்.
“சாரி, அந்தமாதிரி எல்லாம் இங்க செய்யமுடியாது”.
“பின்ன எதுக்கு ஒரு வாரம் எலக்‌ஷன் நடக்குது”.
“சில இடங்கள்ள குளிர் அதிகமாக இருக்கும்,வேலைக்குப் போகிறவர்கள் அவர்கள் வசதிக்கேற்ப எப்ப வேணும்ன்னாலும் வோட்டு போடட்டும்ன்னு தான் அப்படி ஒரு வசதி. அத இதுக்குப் 
போய் பயன்படுத்தறது சனநாயகத்தை குழி தோண்டறமாதிரி இல்லயா மாணிக்கம்.’
“அட போங்க தலைவா. இப்படி நீங்க இருந்தீங்கன்னா எபபடி ஜெயிப்பீங்க? இதெல்லாம் எங்க ஊர்ல்ல சகஜம் தலைவா”
“நாளைக்கு நியுயார்க்குல நானும் எதிர்கட்சித் தலைவர் ரோம்னியும் ஒரே மேடையிலெ பேசப் போறோம், அதுக்கு நீங்கெல்லாம் வரணும், உங்களோட வந்து இப்ப் ரோம்னியோட இருக்கிறவங்களும்
வராங்க. எப்படி நடக்குதுன்னு பாருங்க”, ஒபாமா மாணிக்கத்திடம்.
“சோடா பாட்டில், அழுகின முட்டை இதெல்லாம் தயார் பண்ண கொஞ்சம் பணம் தந்தா நல்லது”, மாணிக்கம்.
“இதெல்லாம் எதுக்கு”, ஒபாமா.
”எதிர்கட்சித் தலைவர் மேல வீசத்தான், அப்பத்தான் நாம  பலமானவங்கன்னு ராம்னியோ,ரோம்னியொ, யாரொ பேரு சொன்னிங்களெ, அவ்ங்களுக்குத் தெரியப் படுத்தத்தான்”.
“நோ,நோ, அப்படி செய்து விடாதீர்கள். ரெண்டு பேரும் நேருக்கு நேர் பேசி எங்க கொள்கையை மக்களுக்குத் தெரியப்படுத்துவோம். அத வச்சு எங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள். யாரு நல்லா பேசராங்க, அவ்ங்க கொள்கை என்னன்னு மக்களுக்கு தெரியும்.”
“என்ன அரசியலோ ஒண்ணுமே புரியலை இங்க. எங்க ஊர்லே இப்படியெல்லாம் நேருக்கு நேர் பேசவே மாட்டாங்க, கொள்கை, பாலிசி அப்படியெல்லாம் எங்ககிட்ட கிடையாது.
ஒரே கொள்கை எப்படி சுருட்டுறதுங்கறது , எப்படி மற்றவனைத் திட்டறது மட்டும் தான்.”
“குட் நைட், நாளை காலை பார்ப்போம்”, சொல்லிவிட்டு ஒபாமா படுக்கச் சென்றார்.

மறுநாள் மாலை. 
நியுயார்க்கில் தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள் எல்லாரும் தயாராக இருக்க,
மேடையில் ஒபாமாவும், ரோம்னியும் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.
மெதுவாக, சத்தம் யாருக்கும் கேட்காமல்,
”ஹலோ ரோம்னி, எப்படி இருக்கீங்க?” ஒபாமா.
“ஹலோ மிஸ்டர் பிரசிடண்ட், அத ஏன் கேட்கிறிங்க, பெரும் தொல்லைங்க”, ரோம்னி ஒபாமாவிடம்.
“என்ன மிஸ்டர் ரோம்னி, என்ன பிரச்சினை?’.
”எல்லாம் நீங்க அனுப்பின ஆட்களால் தான்’, ரோம்னி.
“அப்படி என்ன பண்ணாங்க அவர்கள்”.
“இந்த மாதிரி நாம ரெண்டு பேரும் பேசப் போறோம், நீங்க வாங்க்ன்னு கூப்பிட்டா,”
“கூப்பிட்டா, என்னாச்சு,”
“பத்து டிரக்கு நிறைய ஆட்கள் கூப்பிட்டுகொண்டு வரணும், பணம் கொடுங்கன்னு ஒரே தொந்தரவாப் போச்சு. அது மாதிரியெல்லாம் கிடையாது. நிறைய பேரெல்லாம் வரமாட்டாங்க,
மொத்தமே 200 பேரதான் இருப்பாங்க, எப்படி நடக்குதுன்னு பாருங்க, உங்க ஊர்லெயும் இதெ மாதிரி செஞ்சா அரசியல் நன்னா இருக்கும் அப்படின்னு சொல்லி கூட்டிண்டு வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆச்சு”.
“இதுமட்டுமா, பணம் கொடுங்க, குடம், குத்துவிளக்கு, ஓட்டுப் போட பணம் கொடுக்கணும் அப்படி இப்படின்னு ஒரே தொந்தரவாப் போச்சு. நம்ம ரெண்டு பேர் பெயரையும் கெடுத்து விடுவாங்கன்னு நினைக்கிறேன், முதல்ல இவஙகளை பேக் பண்ணி இந்தியாவுக்கு
அனுப்ப வழியைப் பாருங்க, அப்புறமா எலக்‌ஷ்னை வச்சுப்போம்”.


போன வாரம் பூரா நடந்ததை பிளாஷ் பேக்காக தன் மனைவியிடம் புலம்பி ஒரு பெருமூச்சு விட்டார் ஒபாமா.
”சரியாத்தான் சொன்னார், ரோம்னி, முதல்ல இவங்களை பேக் பண்ணி அனுப்புற வழியைப் பாருங்க,’ 
ஒபாமா மனைவி.
வெள்ளை மாளிகையின் ஒரு அறையில், மாணிக்கம் தன் நண்பர்களிடம்,
“நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது, என்னய்யா எலக்‌ஷன் நடத்தறாங்க, ஒரு கல் வீச்சு கிடையாது, ஒரு பஸ்ஸை கொளுத்த விடமாட்டேங்கறாங்க, வோட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டேங்கறாங்க, கொடிக் கம்பம், தோரணம் கிடையாது, நாம எப்ப சம்பாதிப்பது,ஹூஹும், நமக்கு சரிப்பட்டு வராது, நாம் கிளம்ப வேண்டியது தான், பேக் பண்ணுங்கய்யா, என்னய்யா எலக்‌ஷன் நடத்தறாங்க”
இதெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த ஒபாமா, கோபமாக,
“செகரட்டரி, இவஙகளொட விசாவை எல்லாம் கேன்சல் செய்யுங்க் முதலில், இவஙகளை பிளேன்லெ ஏத்தி அவங்க நாட்டுக்கு அனுப்புங்க அப்பத்தான் நம்ம நாடு பொழைக்கும்”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக