புதன், அக்டோபர் 17

லாரே குகை (luray caverns)


பெரியாழ்வார் பாசுரம்.
       " சித்திரகூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
 அத்திரமே கொண்டெறிய அனைத்துலகம் திரிந்தோடி
         வித்தகனே இராமாவோ நின் அபயம் என்றழைப்ப
 அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஒரடையாளம்.'
                    பெரியாழ்வார் தன்னுடைய பாசுரத்தில், ராமனும், சீதையும்,தம்பி இலக்குவனொடு சித்திரக்கூடத்தில் இருக்கின்ற போது, அந்த சமயத்தில் காக்கை வடிவத்தை எடுத்துக் கொண்டு ஒரு அசுரன், சீதையின்
முலையைத் தீண்ட வரும்போது, அந்த சமயத்தில் பல இடங்களும் ராமன் விட்ட பாணத்தைத் தாங்க மாட்டாத காக்கை சீதையின் காலடியில் வந்து ”அபயம்”,”காப்பாற்று”, என்று விழுந்ததைப்  பற்றி கூறுகிறார்.
குப்த கோதாவரி

அந்த சித்திரக்கூடம் இந்தியாவின் மத்யபிரதேஷ் மற்றும் உத்திரப்பிரதேசம் மானிலஙளுக்கு இடையே உள்ளது. என்ன விஷேஷம்ன்னா, மந்தாகினி ஆறு அங்கு ஒடுகிறது. அங்கு தான் பரதன் இராமனின் பாதரக்‌ஷைகளைப் பெற்றுக் கொண்டு அயோத்திக்குச் சென்றான். அந்த சித்திரக்கூட்த்தில் இராமன், லக்குவணன் மற்றும் சீதை
ஆகியோர் ஒரு குகையில் மிக அதிக நாட்கள் (11 வருஷங்கள்) தங்கி இருந்தார்கள்.  அந்த இடத்திற்கு குப்த கோதாவரி என்று பெயர். மிகப் பெரிய குகை. மிக நன்றாக உள்ளது. விளக்குகள் போட்டு நன்றாக வைத்துள்ளார்கள்.
எதற்காக இதை பற்றிச் சொல்கிறேன் என்றால், அதற்கு சமமாக இந்தியாவில் வேறு எங்கும்  குகையில் மனிதர்கள் வசித்ததாக சரித்திரம் இல்லை.
அதைப்போலவே அமெரிக்காவில் வாஷிங்டன் அருகில், லாறே (luray caverns) குகை உள்ளது.


எவ்வவவு பெரிய அறை பாருங்கள்


அது 4000000 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாகச் சொல்கிறார்கள். இயற்கை அற்புதம் என்றே சொல்லலாம்.
ஏற்கனவே முன்னால் சொன்ன குப்த கோதாவரி குகையைப் போல பல மடங்கு பெரியது. அமெரிக்காவின் அற்புதம் என்றே சொல்லலாம்.
அதைப் பார்க்க நாள்தோறூம் மக்கள் வந்த வ்ண்ணம் இருக்கிறார்கள். ஒரு சர்ச் உயரத்திற்கு மாளிகை போன்ற, தரைக்கு அடியில் 4000 அடி ஆழத்தில்,10 மாடிக் கட்டிடத்திற்கு உயரம் கொண்ட, இயற்கையாக உருவான மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான கால்சியம் படிகங்கள், இன்றைக்கெல்லாம், பார்த்துக்
கொண்டிருக்கும் வ கையில், தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதனைப் பார்க்க ஒரு மணி நேரம் ஆகும்.அதனை நன்கு ரசிக்க எதுவாக
பல இடங்களில் விளக்கு அமைத்து இருக்கிறார்கள். கல்யாண மண்டபம் போன்ற ஒரு இடத்தில், குகைக்குள்ளதான், மிகப் பெரிய வாத்ய கருவி வைத்துள்ளார்கள். அமைதியான அந்த இடத்தில்
அதை வாசித்துக் காட்டும்போது என்ன இனிமையாக உல்லது தெரியுமா?
வாத்ய கருவி

வசூலித்த பணம்

wishing well
உள்ளேயே, (wishing well) ஒரு நீர் நிரம்பிய ஒரு இடத்தில், நம் ஊரில் கிணத்தில் காசு போடுவோமே,
அதே போல, இங்கேயும், நிறைய காசு பொடுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதை எண்ணி அதனை அமெரிக்காவில் உள்ள ஏழை மற்றும் அனாதை இல்லங்களுக்கு அளிக்கிறார்கள்.
அப்படி இதுவரை கொடுத்துள்ள பணம் கோடிக்கணக்கான டாலர்களாம்.
பக்கத்திலேயே வாகங்களின் அணிவகுப்பு ஒன்று உள்ளது. பல வருஷ்ங்களுக்கு முன்னால் உண்டாக்கப்பட்ட வாகனங்களை வைத்துள்ளார்கள். பார்க்க வேண்டிய ஒரு இடம்.
the garden maze

அருகிலேயே தோட்டம் ஒன்று உள்ளது. என்ன விஷேஷம்ன்னா,உள்ளே போனா வெளியே வருவது அவ்வளவு சுலபம் அல்ல். அப்படி குறுக்கு நெடுக்குமாக ஒரு கம்யுட்டர் கேம் போல
உள்ளது. அதன் பரப்பளவு ஒரு ஏக்கராம்.எட்டடி உயரத்துக்கு புல் வளர்த்துள்ளார்கள்.
காலைலே போனா,  எல்லாத்தையும் முடித்து வர மாலை ஆகிவிடும்ன்னா பார்த்துக் கொள்ளுங்கள்.
என்ன ஒரு சங்கடம் தெரியுமா?
நிறைய பணம் வசூல் பண்ணூகிறார்கள்.
அமெரிக்கா போகும் பொது, ஒரு தடவை பார்த்துவிட்டு வாருங்கள்
LOCATION: LURAY CAVERNS, NEXT TO SHENANDOAH NATIONAL PARK,

                       VA 22835 U.S.A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக