திங்கள், பிப்ரவரி 26

ராமானுஜா அநு யாத்திரை அலகாபாத் திரிவேணி சங்கமம்.


அலகாபாத் திரிவேணி சங்கமம்.









கங்கை, யமுனை, ஸரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கம்மாகும் இடம் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம். ப்ரயாக் என்றும் அழைக்கப்படுகிறது .ஶ்ரீமஹாலக்‌ஷ்மியின் மூன்று பின்னல்கள் தான் திரிவேணி சங்கமம் ஆகும். இதில் கங்கை, யமுனை ஆறுகள் கலப்பது நன்கு தெரியும். ஸரஸ்வதி நதி கலப்பது தெரியாது, அதாவது உள்ளுக்குள் கலப்பாக ஐதீகம். எனவே இவ்வாறு கலக்கும் இடத்தில ஸ்நானம் செய்வது மிக நல்லது என்பதால், எல்லோரும் ஒரு படகை ஏற்பாடு செய்து கொண்டு மூன்று நதிகள் கங்கமம் ஆகும் இடத்திற்கு சென்று படகில் இருந்து இறங்கி குளிப்பார்கள். இது ஒரு ஆனந்த அனுபவம்.
காசியில் இருந்து புறப்பட்டு விடியற்காலை அலகாபாத் வந்து சேர்ந்தோம். நேராக கங்கைக் கரைக்கே சென்று எல்லோரும் குழுக்களாக படகை ஏற்பாடு செய்து கொண்டு, மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்துக்குச் சென்று, முழங்கால் அளவு மட்டுமே இருந்த சங்கமித்த இடத்தில் நீராடினோம்.
போகின்ற வழியில் படகை இலக்காக கொண்டு நீர் காக்கைகள் அதிக அளவில் பறந்து சுற்றி சுற்றி வருகின்றன. அவைகளுக்கு யாத்திரிகரகள் காராஷேவ் வாங்கி தூவுகின்றனர். அவைகள் பறப்பது பார்க்க அழகாக இருக்கிறது.

அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தை தவிர அதன் அருகியே உள்ளது அக்ஷ்ய வடம் என்று சொல்லப்படும் ஆலமரம். இதன் இலையில் தான் ப்ரளயத்தின் போது பால முகுந்தனாக பகவான் சயனித்தாராம். இது ஒரு அழியாத ஆலமரம்.
அடுத்து முக்கியமான சன்னிதி வேணி மாதவன் சன்னிதி.
காட்டுக்கு புறப்பட்ட ராமன், ஸீதை, லக்ஷ்மணன் ஆகியோர் குகனின் இருப்பிடமான சிருங்கிபேரபுரம் வந்தனர். குகனின் ஓடத்தில் ஏறி கங்கைக் கரையைக் கடந்து இன்று பிரயாகை இருக்கும் இடத்துக்கு வந்தனர். இங்குள்ள பரத்வாஜ் ஆஸ்ரமத்துக்கு வந்தனர். அவருடைய வழிகாட்டுதல் பேரில் சித்திரக்கூடத்தை நோக்கி புறப்பட்டனராம்.
அந்த பரத்வாஜ் ஆஸ்ரமம் கங்கைக் கரையில் உள்ளது. அதனையும்  தரிசித்துக்கொண்டோம்.
அலகாபாத்தில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய. நேரம் இல்லாதது ஒரு காரணம். ஆகாரத்தை முடித்துக்கொண்டு அடுத்த திவ்ய தேசத்தை நோக்கி பயணப்பட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக