வியாழன், அக்டோபர் 1

what is your name?



what is your name?
what is your name of the school? 
"என்ன சார் எங்களுக்கு ஆங்கில ப் பாடம் நடத்திகிறீர்களா?
"அப்படின்னு கேட் பது காதுல விழுது. 
அப்படி இல்லைங்க, நான் நேத்திக்கு ஒரு வகுப் புக்கு என் பேத்தியுடன் சென்று இருந்தேன். அங்க தான் இந்த மாதிரி சின்ன கேள்விகளை கேட்டு மாணவர்களை அதனை தமிழாக்கம் செய்யச் சொல்லி தமிழ் வகு ப் புகளை , மாணவர்கள் விரும் பும் படி கற்றுக்கொடுக்கிறார்கள். 

இதுல என்ன விஷேஷம்ன்னா, பெரியவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை கவனிக்கிறார்கள். 
நமது ஊரில் தமிழில் பேசுவதே கேவலம் என்று நினைச்சு, தங்கள் குழந்தைகளை கான்வெண்ட், ஆங்கில ப் பள்ளி என்று சேர்க்கும் நிலையில், இதைப் பார்த்தவுடன், மிக்க மகிழ்ச்சியாக இருக்கு. 
இதற்காக அந்த ஊரில் உள்ள எல்லா தமிழ் மக்களும் சேர்ந்து குழு அமைத்து தங்களுக்குள் நன்றாகத் தமிழ் தெரிந்தவர்களை ஆசிரியர்களாக நியமித்து, பொதுவான பாடதிட்டம் வகுத்துக் கொண்டு, தங்கள் குழந்தைகலின் தமிழ் வளர்ச்சியில் நல்ல ஈடு பாடு கொண்டுள்ளார்கள். 

வாரத்தின் ஒருநாள், அதாவது வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணிநேரம் தமிழ் வகு ப் புகள் நடத்துகிறார்கள்.
 4 வயது குழந்தைகள் முதல் பள்ளிக்கூடம் படிக்கும் குழந்தைகள் வரை வயதுக்கு ஏற்ப வகுப் புகள், ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே பரிமாற்றம் போன்றவைகள் மூலம் படிப்பு சொல்லிக்கொடுத்தல் போன்றவை இதன் சிறப் புகள் என்றுசொல்லலாம். 
அதெல்லாம் சரிங்க, எங்கே இப்படிநடக்குதுன்னு கேட்கிறீர்களா?
அமெரிக்கா, மெரிலேண்ட் எலிகாட் சிடியில் தாங்க இந்த வகுப்புக்குப் போனேன். 
இவ்ர்கள் அமெரிக்க தமிழ் வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து இத்தனை சிற ப் பாக நடத்துகிறார்கள்.
இதுல இன்னொரு முக்கியமான விஷயம், எப்படா வெள்ளிக்கிழமை வரும்ன்னு குழந்தைகளும் ஆர்வத்துடன் வரதுதாங்க.
வருஷத்து ஒரு நாள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் சுற்றுலா செல்கிறார்கள். 
ஆண்டு விழா நடத்தி குழந்தைகளின் பாட்டு, நடனம், நாடகம் போன்ற திறமைகளையும் வெளிக்கொணர்கிறார்கள் என்றால், இவர்களை ப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை
. "தமிழ் இனி மெல்ல சாகும்" என்ற கூற்றை பொய்யாக்கும் இவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.
 வாழ்க இவர்களின் தமிழ்த் தொண்டு. 
http://tamiltalent.org/

NASA

NASA.
பேரைக் கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு உற்சாகம் பிறக்கும்
அவர்கள் அனு ப் பிய hubble தொலைநோக்கி இன்னமும் மிக அரிய புகைப்படங்கள் மற்றும் வீடீயோக்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.
அவைகளைப் பார்க்க பார்க்க பிரபஞ்சம் எவ்வளவு பெரியது, அதில் நாம் இருக்கும் இடம் எவ்வளவு சிறியது என் பது தெரியவரும்.
அது மட்டுமா, அவகைளை ப் பார்த்தால், ஒண்ணுமில்லாதவைகளுக்கெல்லாம் நாம் 
ப்படி சண்டை போட்டுகொள்கிறோம் என்பது வெட்கப்படவேண்டிய விஷயம். என்னன்னவோ பகரணங்களை வச்சு எல்லாம் தோண்டி தண்ணீர் வருதான்னு பாத்து, கடைசில எங்கல்லாம் தண்ணி கிடைக்காதோ அங்க தோண்டுவோம்.
அவங்க ப்படியா, பாருங்க இங்கிருந்தபடியே செவ்வாய் கிரகத்தில தண்ணி இருக்குன்னு கண்டு பிடிச்சு உலகத்துக்கு நாங்கதான் பெஸ்ட்ன்னு சொல்றாங்க.
ப்படி இருக்கிற, நாசா ஆரம்பிச்சு 75 வருஷத்தை சமீபத்துலெ சிறப்பா கொண்டாடினாங்க. வாஷிங்டன் பக்கத்துலெ இருக்கிற அவங்க இடத்தை சாதாரணமா எல்லோரும் நுழைய முடியாது. ஆனா அன்னிக்கு, அதாங்க, 26-9-2015 , எல்லோரும் வந்து பாருங்கன்னு அழைப்பு விடுத்தாங்க.

கிடைக்கிற சான்ஸ விடலாமா
குடும், நண்பர்கள் சகிதம் கிளம்பிட்டோம்! இதுல என்ன விஷேஷம்ன்னா, வந்து 
பாத்துட்டுப் போறதுக்கு, இலவசமா பஸ் வசதி வேறே செய்து கொடுத்தாங்கன்ன பாருங்க!!!
 'கரும் பு தின்ன கூலியா' , ப்படின்னு நாம சொல்ற மாதிரி, நாங்க கார ஒரு ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு, அவங்க கூட்டிண்டு போன ஸ்கூல் பஸ்ஸில் ஏறி, (எங்க குடும்
நண்பர்களே பாதி பஸ்ஸை அடைத்திட்டோம்லெ) அவங்க இடத்துக்குப் போய் சேர்ந்தோம். 
எந்தந்த இடத்துல என்னன்ன பாக்கணும், ப் படிங்கிறதை, சாப்பாடு எங்க கிடைக்கும், அவங்க வச்சுருக்கிற மாடல் போன்றவற்றை, விலாவாரியா, ஒரு படம் மாதிரி போட்டுக் கொடுத்தாங்க. ( படம்)

, இத்தனை பாக்கணுமா, 
ப்பன்னா, நாங்க எங்க முதல்ல போயிருப் போம்?
சரிதான், நீங்க நினைக்கறது தாங்க, நேரே சாப் பாடு மால் தான்.
அதுல அமெரிக்க மக்களை மிஞ்ச முடியாதுங்க, வரிசையில் நின்னு, சமோசா சாட் வாங்கி எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, மிக நல்லதா இருக்கக்கூடிய ஒரு ஸ்டால், 28ந்னு பாத்து, ஒரு வழியாப் போய் சேர மணி 2 ஆகிடுத்துன்னாப் பாத்துக்கங்க.
நாங்க தான் பட்டாளத்தோட போய்இருக்கோமில்ல,
ப்புறம் ப்படி வேகமா பாக்கிறது, மெதுவா ஒண்ணொன்னா பாத்துட்டு, செல்பி எல்லாம் எடுத்துண்டு, இதுல எங்க மாப்பிள்ளை தன்னோட சந்தேகங்களை அங்க இருக்கிற விஞ்ஞானியுடன் பேசித்தீர்த்துக் கொண்டு,
( போட்டோ பாருங்க),
சரி விஷயத்துக்கு வான்னு சொல்றது கேட்குது, வாங்க அடுத்த அறைக்கு ப் போகலாம்ன்னு சொல்லி எல்லோரையும் சேத்துட்டு மணியைப் பாத்தா, ஷாக்காகி ப் போனோம்
பின்ன என்ன, நாசா மக்கள் கடைய கட்டி, வீட்டுக்கு கிளம் பிட்டாங்க!!
மணி 5 ஆயிடுச்சாம்!!!! ப் புறம் ப்படி மத்த அறைகளைப் பாப்பது?
சரி, நாங்களும் எங்க இலவச பஸ் இருக்குங்கிற இடத்தை நோக்கி நகற ஆரம் பிச்சோம்.
எல்லா சோத்துக்கும் ஒரு சோறு பதம்ன்னு சொல்லுவாங்களே,

அது போல, 28 போலத்தான் எல்லா அறைகளும் சூப்












பராக இருக்கும்ன்னு மனசுல நினைச்சுண்டு எங்க காரை நோக்கி நகர்ந்தோம்!!!

ஞாயிறு, ஆகஸ்ட் 30

ரசகுல்லா யாருக்கு?

படித்ததில் பிடித்தது.

இந்த விசயத்திற்காக இரு மாநிலங்கள் சண்டை போடுகிறது என்பது ஆச்சர்யமாகவே இருக்கும்.


ரசகுல்லா என்பது வட இந்திய இனிப்பு வகையாகவே அறியப்பட்டு இருக்கும். இந்தியில் ரசம் என்றால் ஜூஸ் என்றும், குல்லா என்றால் வட்ட பந்து வடிவ பொருள் என்றும் பொருள்.



ஆனால் அதன் பிறப்பிடம் வட கிழக்கு மாநிலங்களை சார்ந்தது. இதில் துல்லியமாக வங்காளமா? ஒரிசாவா? என்பதில் தான் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ரசகுல்லாவிற்கு புவியியல் சார்ந்த காப்புரிமை பெறுவதற்கு இருமாநிலங்களுமே போட்டியிடுகின்றன.

இதற்கு ஒரிஸ்ஸா சொல்லும் கதை மிகப் பழமையானது.

ஒரிசாவின் பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஜெகந்நாதர் மனைவி லஷ்மியிடம் சொல்லாமல் ரத வலத்திற்கு சென்று விட்டார். அதனால் லட்சுமி கோபப்பட்டு கோவிலின் கதவை அடைத்து படுக்க சென்று விட்டார். அவரை சமாதனப்படுத்துவதற்காகத் தான் ஜெகந்நாதர் அல்வா போல் ரசகுல்லா தயாரித்துக் கொடுத்தார் என்று ஒரிசா மாநிலத்தவர் கூறுகின்றனர்.



அதனால் பணிரெண்டாம் நூற்றாண்டில் இருந்தே ரசகுல்லாவை நாங்கள் சாப்பிட்டு வருகிறோம் என்று ஒரிசா மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் வங்காளத்தவரோ நமது ஊர் இருட்டுக் கடை ஸ்டைலில் ஒரு கதை சொல்கின்றனர். 1868ல் தாஸ் என்பவர் ரசகுல்லாவை கண்டுபிடித்து தமது கடை மூலம் பிரபலமடைய செய்தார் என்று குறிப்பை பகிர்கின்றனர்.

கடவுளுக்கு படைக்கப்படும் 56 வகை வட இந்திய உணவுகளில் ரசகுல்லா இல்லையே என்று வங்காளிகள் எதிர்கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரிசா ரசகுல்லா சிகப்பு நிறத்திலும், வங்காளிகள் ரசகுல்லா வெள்ளை நிறத்திலும் இருக்கிறது.

மம்தா பானர்ஜி இதை சும்மா விடக்கூடாது என்று காப்புரிமை பதிய சென்று விட்டார். ஆனால் ஒரிஸ்ஸாவில் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆக, யார் ரசகுல்லாவைக் கண்டுபித்தார் என்பது பூரி ஜெகந்நாதருக்குத் தான் வெளிச்சம். ஆனால் தமிழில் ரசகுல்லா என்று கூகுளில் எழுதி தேடினால் ஹன்சிகா வருகிறார். அதனால் நாமும் ஹன்சிகாவிற்கு கோவில் கட்டிக் கொண்டால் காப்புரிமை பெற உரிமை கொண்டாடலாம்


நன்றியுடன் :http://www.revmuthal.com/p/finance-investment-index.html

புதன், ஆகஸ்ட் 19

உலகம் அழியப்போறதாம்!!!!!!!

என்னங்க, வாங்க பேங்க்ல இருக்குற பணத்தை எல்லாம் எடுத்து நகை வாங்கிடாலாம்.
என்ன ஆச்சு, உனக்கு?
விஷயம் தெரியாதா? அடுத்தாத்துல வேலை செய்யற வெலைக்காரி மாரியம்மாவுக்குத் தெரிஞசுது, உங்களுக்குத் தெரியலயே? என்ன தான் பேப்பர், டீவீன்னு மாஞ்சு மாஞ்சு பாக்குறிங்கலோ?
என்ன காலையிலே கரிச்சுக் கொட்டாட்டா உனக்கு அந்த நாள் இனிய நாளா இருக்காதே?
ஆமாங்க, எனக்கு வேறே வேலை இல்ல பாருங்கோ? மணி வேறே ஆயிண்டிருக்கு. சன் டீவீயில காலை சீரீயல் வேறே ஆரம்பிச்சுடுவாங்க. சட்டுபுட்டுன்னு பேண்ட மாத்திண்ண்டு வாங்க, பணத்தையெல்லாம் எடுத்துண்டு வந்த்துட்டு, சாயங்காலம் போய் நகைக்கடையில நகை வாங்கிண்டு வந்துடுவோம்.
அதுசரி.அடுத்தாத்து வேலைக்காரி மாரியம்மான்னா பேரு?
ஆமாம், அது ரொம்ப முக்கியம் இப்ப. அவ பேரு என்னவானா உங்களுக்கு என்ன? அவ என்ன சொன்னான்னு கேட்கமாட்டீங்களே?
சரி, சரி, ரொம்ப அலட்டிக்காதே, விஷயத்துக்கு வா. அவ என்ன சொன்னா?
பேப்பரிலெ பாத்தாளாம், அவ வச்சுருக்குற டீவீல கூடச் சொன்னாங்ககளாம். உலகம் கூடீய சீக்கிரத்திலே அழியப் போறதாம்.அதனால தான் சொல்றேன், ஒண்ணுத்துக்கும் உதவாத, குறஞ்ச வட்டி கொடுக்குற சேமிப்பு கணக்குல இருக்கூற பணத்தை எடுத்து,புடவை, நகைன்னு வாங்கி அனுபவிப்போம். யாருக்கும் உபயோகமில்லாத பனத்தை வச்சுடுண்டு என்ன பண்ணப்போறோம்!
என்ன இப்படிச் சொல்ற், நமக்கு என்ன வசாயிடுச்சா, இன்னும் பலகாலம் நானும் நீயும் இப்படியே இருந்துடுவோமா? உடம்புக்குன்னு வந்தா லச்ஷக்கணக்குல டாக்டருக்கு கோடுக்குணும் தெரியுமா?
ஏங்க நான் என்ன சொல்லிண்டு இருக்கேன், நீங்க என்ன சொல்றீங்க, உலகம் அழியப்போறது, எல்லாரும் செத்துப் போப்போறாங்க, அதுல டாக்ட்ரும் போய்ச் சேரமாட்டாரா, சும்மா சொல்லிண்டு இருக்காதீங்கோ. கிளம்பற வழியப் பாருங்க. நான் போய் சீரியல் ஆரம்பிச்சுட்டானான்னு பாக்கிறேன். நேத்திக்கே மாமியார்காரி மாட்டுப்பெண்ணை எப்படியெல்லாம் கொலை செய்யறதுன்னு திட்டம் போட்டுகொண்டு இருந்தாள். எத பயன்படுத்தறான்னு சஸ்பென்னுல நிறுத்திடாங்க.
அது சரி, என்னிக்கு உலகம் அழியப்போறதுன்னு அந்த வேலைக்காரி சொன்னாளா?
அதெல்லாம் பேப்பர்ல போய் பாத்துக்க்ங்க, எனக்கு பதில் சொன்ன நேரம் கிடையாது
சொல்லிக்கொண்டே ஹாலை நோக்கி சென்றாள்.
நான் என்னைக்கு இந்த உலகம் அழியப் போரதுன்னு தெரியாம, தலையப் பிச்சுக்கொண்டு என் அறைக்கு பேப்பரைத் தேடிச் சென்றேண்.
அறையில் இருந்த டீவீயில் அறிவிப்பாளர் ஒரு சன்னியாசியைப் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். பேட்டி உலகம் அழியப் போறது என்பதைப் பற்றி என்பதால்,
கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டேன்.
அறிவிப்பாளர், “ஸ்வாமி, இன்னைக்கு ஒரு சயிண்டீஸ்ட்டு உலகம் அழியப்போறதுன்னு சொல்லி இருக்கார், அதப் பத்தி உங்க அபிப்பிராயம் என்னன்னு சொல்ல முடியுமா?”
ஸ்வாமி,
“நாங்க தான் பலகாலமா இதச் சொல்லிண்டு வரோமே. இந்த உலகத்துலெ எதுவுமே நிலையில்லாதது. இதுக்கு எதுக்கு சயிண்டீச்ட்டுக்கிட்டே வேறே போணும். எப்ப இறைவன் நம்மள, இந்த உலகம், அதில் உள்ள ஜீவராசி இவைகளை எல்லாம் படைச்சானோ அப்பவே அவன் சொல்லிட்டுப் போயிட்டான். கலிகாலத்து முடிவுல  நான் மீண்டும் பொறப்பேன், எப்ப தர்மம் அழிஞ்சு, அதர்மம் அதிகமாறதோ, அப்பலெல்லாம் தர்மத்தை நிலைனாட்ட பிறப்பேன்னு
பர்த்ராணாய சாதூனாம் விநாஷாய ச  துஹ்க்ருதாம்
       தர்ம ஸ்ம் ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே
என்று கீதையிலே கண்னன் சொல்லி இருக்கான். அதனாலே எல்லோரும் எப்பவும் நல்லதே செய்யனும், நல்லதே நினைக்கணும். ஹரி ஓம்”
அறிவிப்பாள்ர், “நன்றி ஸ்வாமி” அப்படின்னு சொல்லி முடித்து விட்டார்கள்.
ச்சே, எப்ப உலகம் அழியப்போறதுன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு பாத்தா முடியலயே, என  மனதுக்குள் நினைத்துகொண்டு, வேறே ஏதாவது சேன்ல்ல இதப் பத்தி சொல்றானான்னு பாக்க டீவீ ரிமோட்டைத்  திருகினேன்.
“உங்க அபிப்பிராயம் என்ன சொல்லுங்க,” மற்றொறு சேனல்ல, விஜயகாந்த்தை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆஹா, இவர் என்ன சொல்றார்ன்னு பாப்போம் என காதத் தீட்டிக்கொண்டு உக்காந்த்தேன்.
“இதெல்லாம் ஒரு கேள்வின்னு நினைச்சுண்டு வந்து கேட்கிறீர்களே. தமிழ் நாட்டுல மதுக்குடிச்ச்ட்டு மக்கள் ரோட்டுலெ உருண்டு கொண்டிருக்கான், அரசாங்கம் அதப் பத்திக் கவலைப்படாம இருக்கு. நீங்களும் அதெ பத்தி அம்மா கிட்ட கேக்காம, உலகம் அழியப் போறதப் பத்தி பேட்டி கேட்டா, நா  உங்களை சும்மா  உடமாட்டேன், அற வாங்காம போய்ச் சேருங்க” என பேட்டிய முடிச்சுக்கிடார்.
என்னடா இது,எப்படா உலகம் அழியப்போறது???????
வேறே எங்க போய் விடையைத் தெரிந்து கொள்வது? தலையப் பிச்சுண்டு இருக்கும் போது, வாசல்ல என்ன சத்தம்ன்னு எட்டிப் பாத்தேன்.
“உலகம் அழியாம என்ன செய்யும், இப்படி காய்கறி விலையெல்லாம் சகட்டுமேனிக்கு ஏறினா”, அடுத்தாத்து மாமி காய்கறிக்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகா, மாமிக்குத் தெரியும் போல இருக்கு, எப்ப உலகம் அழியப்பொறதுன்னு, நினச்சு,
“மாமி, எப்படி உங்களுக்குத் தெரியும் உலகம் அழியப்பொறதுன்னு? எப்ப மாமி அழியப்போறது? சொல்லுங்கோ” ந்னு அவங்களைப் பாத்து கேட்டேன்.
மாமி என்னை மேல கீழ இறங்கப் பாத்துட்டு, “உனக்கு வேறே வேலை இல்லையா, போ, எனக்கு இன்னைக்கு நா சசமைக்கிறதா அல்லது மறுமகளான்னு தெரியல, உலகம் அழியப்போறதப் பத்தி கவலைப் படறான்” சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் போய் விட்டார்கள்.
சே, என்ன பொழப்புடா, ஒரு சின்ன விஷ்யம் தெரிஞ்சுக்க முடியலையே? கன்னத்துக்குள் கையை வைத்துக்கொண்டு சோபாவில் உக்காந்து இனி என்ன செய்யலாம்னு யோசித்துக் கோண்டு இருந்தேன்.
“தாத்தா, என்ன யோசனை பண்ணூறீங்க?” பேரன் தன் கையில் ஐபேடுடன் என் முன்னால் வந்து கேட்டான்.
காலையில் இருந்து நான் படும் அவஸ்த்தையை அவனிடம் சொன்னேன்.
“இவ்வளவு தானா தாத்தா. இன்னைக்கு காலையில் என்னுடைய பேஸ்புக்க்க்ல ஒருத்தர் வீடீயோ போட்டு இருக்கார், வா உனக்கு காண்பிக்கிறேன்”
என்று சொல்லி அந்த வீடீயோவை போட்டுக் காண்பித்தான்.
அப்பத்தான் எனக்கு விஷயம் புரிந்தது,
உலகம் நாளைக்கு அழியப் போறதில்லை, தற்போது ஒவ்வொறு கிரஹங்களும் தன்னுடைய சக்தியை அதன் ஆரம்ப நாளில் எவ்வளவு இருந்ததோ அதில் பாதியைத் தான் வெளியிடுகின்றன. அதானல் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு  தன் முழு சக்தியும் காணமல் போய் விடும். அபோது உலகம் அழிந்து விடும். ஆனால் அது நிகழ மில்லியன் ஆண்டுகள் ஆகலாம், நாளைக்கே அது நிகழ்ப்போவது இல்லை” என்றபடி ஆதாரங்களுடன் விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்பாடா, நாம் பிழைத்தோம், முதலில் என் மனைவியிடம் இதைச் சொல்ல வேண்டும். என்னை எவ்வளவு பயப்பட வைத்து விட்டாள்.
நீங்களும் அந்த வீடீயோவைப் பாருங்கள். மன நிம்மதியுடன் மிச்ச நாட்களை நம்பிக்கையுடன் கழியுங்கள்!!!!!!!!!!!!!

செவ்வாய், மே 26

கொடுக்க கொடுக்க இன்பம்



கொடுக்க கொடுக்க இன் பம் கிடைக்குமாம். எ ப் படின்னு தெரியுணுமா? 
மரத்தை எடுத்துக்குங்க, அது இரு ப் பதால் தான் மழை பெய்கிறது இல்லையா, ஒரு மரம் வெளியிடும் ஆக்ஸிஜன் அளவு இத்தனைன்னு கணக்கிட்டு இருக்காங்க, அதன் அளவை எத்தனை மனுஷனால கூட கொடுக்க முடியாதாம்! 
பழங்கள் கொடுக்கும் மரங்கள், அந்த ப் பழங்கள்  எவ்வளவு ருசியா இருக்குன்னு என்னைக்காவது  சா ப் பிட்டு பாத்து இருக்கா? ஒரு நாளும் இல்லை. 
பசு மாடு என்ன சா ப் பிடறது, புல்லு, வைக்கோல்ன்னு  மனுஷனால   சா ப் பிட முடியாததைத் தான் சா பிடறது, ஆனா அதையே திரு ப் பித் தறதா, இல்லையே, ஆரோக்யமான பாலைத் தானே தருது. 
பணத்தைக் கொண்டு எதையும்  வாங்கிட முடியாது இல்லையா? 
நம்ம குழந்தைகளுக்கு  நாம, அவங்க ஆரோக்யமா இருக்கணும்ன்னு என்ன பண்றோம்,  நம்மிடம் இருக்கும் பணத்தை  வச்சு, நல்ல பானங்களை குடிக்க கொடுக்கிறோம். 
மனுஷனை மூணு விதமா பிரிக்கணுமாம், அதமன்,  மத்யமன், உத்தமன், என்று மூணு விதமனதாம்.  
அதமன் என்ன பண்ணுவான்னா, மத்தவங்கட்டேர்ந்து  வாங்க மட்டும்தான்  செய்வானாம். துளிக் கூட தன்னிடம் உள்ளதை மத்தவங்களுக்கு கொடுக்கமாட்டானாம்.  
மத்யமன் எவ்வளவு வாங்கறானோ அதே அளவு மத்தவங்களுக்கு கொடு ப் பானாம். கொஞ்சம் பரவாயில்லை. 
எத கேட்டாலும் வஞ்சனை  இல்லாமல் கொடுக்கறது உத்தமனுக்கு அழகாம். 
நாம எ ப் படி இருக்கணும், உத்தமனா,  மத்யமனா, அதமனா? 
உத்தமனா இருந்தா,  என்ன கிடைக்கும்?
திருமங்கையாழ்வார் உத்தமனா இருந்தா,  
  குலந்தருஞ்  செல்வந் தந்திடு  மடியார் 
          படுதுய ராயின  வெல்லாம்,
  நிலந்தஞ்  செய்யும் நீள்விசும் பருளும்
         அருளொடு பெருநில மளிக்கும்,
  வலந்தரும்  மற்றுந் தந்திடும் பெற்ற
         தாயினு  மாயின செய்யும், 
  நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
         நாராய ணாவென்னும் நாமம். 
போன்றவை கிடைக்குமாம். 
ஶ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள்  உ பன்யாசம் சனாதன தர்மம் 
நிகழ்ச்சியில் கேட்டது.     
   
 

சனி, மே 9

உங்கப்பா எங்கப்பா த்த்துவம்

உங்க ப் பா எங்க ப் பா தத்துவம்!!! 
"டேய் கண்ணா,  இங்கே வாடா, அ ப் பாவை பாருடா,  என்னவோ மாதிரி இருக்கா. கூ ப் பிடக்  கூ ப் பிட பதிலையே காணோம்." 
அம்மா பதறியடித்துக் கொண்டு பையன் கண்ணனை  அழைக்கிறாள். 
கண்ணன் அவர்களுக்கு ஒரே பையன். செல்லமா வளர்ந்தவன்.   பொறு ப் பானவன். பதவிசானவன். இங்கிதம் தெரிந்சவன்.  
"என்ன ம்மா ஆச்சு அ ப் பாவுக்கு?", அம்மா கூ ப் பிட்ட சத்தம் கேட்டு, படித்துக் கொண்டிருந்த  கண்ணன் ஓடிவருகிறான். 
"அ ப் பா, என்ன ஆச்சு ப் பா, உன் பையன் கண்ணன் வந்திருக்கேன், பாரு ப் பா, என்ன பண்ணுது ப் பா ",  கண்ணன் பதறுகிறான். 
"டேய், அ ப் பா ஏதும் பேசமாட்டேங்கிறாடா, ஆம் புலன்ஸ்க்கு போன் பண்ணுடா," அம்மா. 
"எங்கம்மா போனை வச்சேன், காணோம்",
" பொறுமையாத் தேடுடா, மேஜை மேல தான் வச்சுருந்தே."
"ஆமாம் அம்மா, இங்கே தான் வச்சுருந்தேன், அங்கே காணோம்." 
பொறுமை  இழந்தவனாய்,  என்ன செய்வது என்று புரியாமல் அ ப் பாவின்  நிலைமையை  நினைத்து கவலையுடன் நின்று கொண்டிருக்கிறான்.  
"என்னடா வாசல்ல ஆம் புலன்ஸ் சத்தம்."  அம்மா. 
"தள்ளுங்க,  தள்ளுங்க," கண்ணன் நண் பன் மாதவன்,  ஸ்ரெச்சர் சகிதம்  ஆம் புலன்ஸ் டிரைவர்கூட  உள்ளே நுழைந்தான்.  
"என்னடா மாதவன், எனக்கு கையும் ஓடல , காலும்  ஒடல, நீ எ ப் படி? ",
"அதெல்லாம் அ ப் புறம் பாத்துக்கலாம்,  உன் அ ப் பாவை  
ஆஸ் பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போறேன்,  நீ மெதுவா வா", 
என்று சொல்லிவிட்டு அ ப் பாவை ஆம் புலன்ஸ்ஸில்  ஏத்தி கிளம் பிவிட்டான் மாதவன்.  
ஒரு வாரம் ஆகியிருக்கும், மாதவன் பக்கத்து வீட்டிலிருந்து   பதட்டத்துடன் ஓடிவந்தான்.  
"என்னடா மாதவா, 
என்னாச்சு உனக்கு,ஏன் இ ப் படி ஓடிவரே?"
"அம்மாவுக்கு திடிரென்று மயங்கி  கீழே விழுந்துட்டா, என்ன பண்றதுன்னு தெரியல, அதான் ஒன்னை ப் பாத்து   பேசலாம்ன்னு ", எழுத்தான்   பதட்டத்துடன். 
" பொறுமையா  இரு, ஆம் புலஸ்சுக்கு போன் பண்றேன், எல்லாம் சரியாயிடும்,  கவலை ப் படாதே." இது நான். 
ரெண்டு நாள் கழித்து,  மாதவன் அம்மா, ஆஸ் பத்திரியில் இருந்து  
வந்த   பின், 
"மாதவா, அன்னைக்கு எங்க  அ ப் பாவுக்கு  உடல்நலமில்லைன்னு ஆனவுடன் நான் பதட்ட ப் பட்டேன், நீ சாவகாசமா பொறுமையா எல்லாம் செஞ்சு கா ப் பாத்தினே, இ ப் ப  உன் அம்மாவுக்குன்னு ஆனவுடன் அன்னைக்கு அவ்வளவு வேகமா செஞ்ச நீ, சோர்ந்து   போயிட்டே?  இதுக்கெல்லாம் என்னடா  காரணம்." 
"தெரியலைடா, கொஞ்சம் இரு, அங்க பாரு டீவீயில் ஶ்ரீ.வேளுக்குடி ஸ்வாமிகள் ஏதோ  சொல்றார் பாரு". 
"நம்ம வீட்டுலெ ஏதாவது   பதட்டமான நிகழ்ச்சி நடந்தால்  நமக்கு 
கையும் ஓடாது, காலும் ஓடாது, ஆனா பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு  அ ப் படி ஒண்ணுமே நடக்காதது   போல நமக்கு சமயத்தில் வந்து  உதவுவாங்க. அதே போலத் தான் நாமும் அடுத்த வீட்டுல இந்த  மாதிரி நடக்கும் போது நாம நமக்கு பாதி ப் பு ஏற் படாத  மாதிரி நடந்து  கொள்வோம். 
இதை உங்க ப் பா, எங்க ப் பா தத்துவம் என் பாங்க. அதாவது பிரம்மத்தில் ஈடு பாடு ஏற் பட்டால், அதையே  நினைச்சுக் கொண்டிருந்தால்  நமக்கு  ஏற் படும் கஷ்டம், மற்றவர்களுக்கு  ஏற் படும் கஷ்டம்  எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும். அதனால் 
நாம எ ப் பவும் அவன் மீது பற்றுவைத்து  விட்டால் நம்ம  கஷ்டம், அடுத்தவன் கஷ்டம் எல்லாம் ஒரே மாதிரிதான்  இருக்கும்." 

" பாருடா மாதவா, ஸ்வாமிகள் சொல்வது போல நாம நடந்து  இருந்தால்  இந்த  மாதிரி நமக்கு இனிமே நடக்காது."
ஶ்ரீ.உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் உ பனிஷத் பற்றிய உ பன்யாசத்தில், விஜய் டீவீயில், சனாதன தர்மம் 
நிகழ்ச்சியில் இருந்து  எடுத்து  எழுத ப் பட்டது .