ஞாயிறு, டிசம்பர் 22

ஷாக் டிரிட்மெண்ட்



ஷாக் டிரிட்மெண்ட்
"ஹலோ,ராமநாதனா?"
"ஆமாம், நான்தான் ராமநாதன் தான் பேசறேன்."
"நீங்க யாரு பேசறது, தெரியலயே?"
"நான் கிருஷ்ணஸ்வாமி, மாம்பலத்தில் இருந்து பேசறேன்."
சொல்லுங்க சார்.
"போன மாசம் நீங்க உங்க பையன் ஜாதகத்தை என் பெண்ணுக்கு
பொருத்தமா இருக்குன்னு அனுப்பினுங்க இல்லை, அந்தப் பெண்ணின் அப்பா தான் பேசறேன்."
"ஆமா சார்,  ஞாபகம் வருது, நீங்க தான், நான் நல்லா பொருத்தமா இருக்குன்னு சொல்லியும், 
நீங்க பொருத்தம் இல்லைன்னு சொல்லிட்டீங்களே."
"ஆமாம் சார்,வெரி சாரி சார், அன்னைக்கு நான் பாத்த ஜோசியர அப்படி சொன்னதால 
நான் உங்ககிட்ட அப்படி சொல்லிட்டேன், அப்பறமா எங்க ஆஸ்தான ஜோசியர் உங்க பையனின் ஜாதகம்  என் பொண்ணோட ஜாதகத்தோட நல்லாப் பொருந்தி இருக்குன்னும், இந்தப் பொருத்தத்தை விட்டுடாதீங்கன்னும் 
சொன்னார்,அதனால தான்.........."
போன்ல இழுத்தார். 
அந்த சமயம் பார்த்து,
"என்னங்க போன்ல யாருங்க?”
என் மனைவி.
"சார், என் சகபத்னி ஏதோ சொல்லணுங்கிறாங்க, நானே கூப்பிடுறேன.”
சொல்லி ரிஸீவரைக்கீழே வைத்தேன்.
மீண்டும் போன் சிணுங்கியது.
"ராமநாதன், நான் திருவல்லிக்கேணி கோபாலன் பேசறேன், என் பெண் கவுஸல்யா கல்யாண விஷயமா  உஙகளை நேரில் பாக்க வரணும், எப்ப உங்களுக்கு வசதிப்படும்.”
எனக்கு தூக்கிவாரிப போட்டது!
இந்த  கோபாலன் பெண்ணை என் பையனுக்கு பொருத்தமா இருக்கான்னு  
கேட்டு எத்தனை முறை அவர் வீட்டுக்கு படை எடுத்திருப்பேன்.
இன்னும் ஜாதகம் பாக்கலை, ஜோசியர் ஊரில இல்லை, பெண்ணோட பெரியம்மாகிட்ட கேட்கணும், 
இப்படி என்னன்ன சாக்கெல்லாம் சொன்னார, இப்ப என்ன திடீரென்னு!! ஓண்ணும் புரியலயே!!
"அதுக்கென்ன சார், எப்ப வேணாலும் பாக்கலாம் சார், வறதுக்கு முன்னால போன் பண்ணுங்க,”
என்று சொல்லி போனை வைத்தேன்.
அடுத்த அரைமணி நேரத்துக்குள், நான்கு பேர், இதே மாதிரி, சொல்லி வைத்தார்போல் போன் செய்தார்கள்.
என் பையனுக்காக நான் நாயா அலைந்தத நினைத்துப் பாரத்தேன்
என் மனைவியிடம், "என்ன நம்ம பையனுக்கு இதுவரை நூறு ஜாதகமாவது வாங்கி இருக்கமாட்டோம்”,
என்று மனைவியிடம் என் ஆதங்கத்தைச் சொன்னேன்.
அந்தக் காலத்தில பெண்ணப் பெத்தவன் மாப்பிள்ளைக்காக அலைந்ததாக என்தகப்பனார் சொல்லிக் கேட்டு இருக்கிறேன், 
இப்ப நான் பிள்ளைக்காக அலையவேண்டு இருக்கு. எல்லாம் காலம் தான் செய்யுது.
அன்னிக்கு இப்படித்தான் ஓரு பெண்ணின் அம்மாகிட்ட, எல்லா விவரத்தையும் சொல்லி, என்பையன் ஜாதகம் அனுப்பி 
ஓரு வாரம் ஆகிறது, உங்க பெண்ணோட ஜாதத்தை நீங்க இன்னும் அனுப்பலை, அனுப்பினா நன்னா இருக்கும், 
அப்படீன்னு சொன்னா, 
நாங்க இப்ப எங்க பெண்ணுக்கு கல்யாணம் பண்றதால்லை, அப்படின்னு கூலா பதில் சொல்றாங்கன்னாப் பாருங்க சார்!!
இதுவாவது பரவாயில்லை சார்.
இன்னொருத்தர், என் பெண் நாப்பதாயிரம் சம்பாதிக்கிறா, உங்க பையன் அதவிட கூட வாங்குவானா. இதுக்கு சம்மதம்ன்னா, ஜாதகம் அனுப்புங்க, அப்படிங்கறாங்க சார். இதுல வேடிக்கை என்னன்னா அவரோட 
பெண் பிளஸ் கூட படிக்கல்ல.
இப்பத் தான் கிளைமாக்ஸ்!!!
இன்னொருத்தர் கூசாம,
பையனைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தபிறகு மாப்பிள்ளை அவங்க வீட்டோட வந்துடுவாரான்னு கூலாக, 
என்னிடம் கேட்கிறார் சார்.
எப்படி இருக்கு பாருங்க கல்யாண  மார்க்கெட்!!
இப்படி என்னுடைய  பையன் ஜாதக அனுபவம் இருக்கும் போதுதான் மேலே சொன்னபோன் கால்கள்.
இத்தனை போன் அழைப்புகளையும் கேட்ட பிறகு நானும் என் மனைவியும் மயக்கம் போடாத குறை.
இத்தோடு அது நிக்கல.
அப்புறம் நடந்தது தான் முக்கியம்.

கவுஸல்யா பேசறேன் சார்!

இது என்ன புதுக் குழப்பம்?

”நான் திருவல்லிகேணி மிஸ்டர் கோபாலன் அவர்களின் பெண்.  எஙக வீட்டுக்கு நீங்க அடிக்கடி வரதைப் பார்த்துள்ளேன்.
என் அப்பா உங்களிடம் பொறுமையாகப் பேசாமல் உங்களை அடிக்கடி அலைக்கழித்து இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். அதற்காக உஙகளிடம்  மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் போனபிறகு என் தாயாருக்கும் தந்தைக்கும் இடையே நடந்த விவாதம் தான் இப்போது  என்னை உங்களிடம் பேசத் தூண்டியது.”
”அப்படிஎன்னம்மா அங்கு நடந்தது?” இது நான்.
”அதைச் சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது சார், இருந்தாலும்
சொல்லாமல் இருக்கமுடியவில்லை சார்.”
ஓரு பிளாஷ் பேக!!!

”என்னங்க,உங்க பெண்ணுக்கு இத்தனை ஜாதகம் வந்து இருக்கே,
எந்த பையனைப் பாக்கப்போறீங்க?  அவ நல்ல வேலையில் நல்ல சம்பளத்தோட இருப்பதால், நல்ல பையனாப் பாருங்க,என்ன நான் சொல்லறது சரிதானே?” இது என் அம்மா.
”ஏண்டி, ஓண்ணும் புரியாத மாதிரி இருக்கே?” அப்பா.
”என்னங்க சொல்றீங்க? எனக்கு ஓண்ணும் புரியலயே?”
”எண்டி, நமக்கு இருக்கிறது ஓரே பெண். அவ சம்பளத்தை நம்பித்தான் நம்ம குடும்பம் இருக்குல்லியா? அவ கல்யாணம் ஆகி போயிட்டா நாம சாப்பாட்டுக்கு என்னபண்றது?”
”அதுக்காக, நம்ம பெண்ணுக்கு கல்யாணம் பண்ணப் போறதில்லையா?”
”ஏன் பண்ணப் போறதில்லை? வீட்டோட மாப்பிளையா, அவ சம்பளத்தில கைவைக்காத பையன் கிடைக்கற போது கல்யாணம் பண்ணாப் போச்சு, அது வரைக்கும் உன் திருவாயை மூடிக் கொண்டிருக்கையா?”


”இதைக் கேட்டவுடன் எனக்கு ஷாக்காகிப் போச்சு. இவ்வளவு மோசமானவங்களா என் பெற்றோர்கள்!
எனக்கு ஓரு நிமிஷம் என்ன பண்ணறதுன்னு  தெரியல. எதாவது பண்ணனும். என் கல்யாணத்தை வியாபாரம் ஆக்கிவிட்டார்களே!!”
”இவங்க பேசினதை நான் கேட்காதது மாதிரி அன்று இரவு முழுதும் தூக்கமில்லாமல் கழித்தேன்.
அப்பத் தான், எனக்கு ஓரு ஐடியா தோணித்து. எங்க வீட்டுக்கு வரும், எங்க ஆபீஸ்ல வேலை செய்யும் நண்பர், என்னைவிட வயதில் முத்தவர், ராமகிருஷ்ணன் ஞாபகம் வந்தது. அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. அவரை நான் ஆபீஸில என் உடன் பிறந்தவனைப் போலத்தான் பழகுவேன். ஆனால் இது என பெற்றோர்களுக்குத் தெரியாது.
எனவே இவரை வைத்து ஏதாவது செய்யணும்னு தோணித்து.
காலையில எழுந்தவுடன் முதல் காரியமா ராமகிருஷ்ணனுக்கு போன் பண்ணேன்.”

”என்ன பண்ணீங்க நீங்க? இது நான்.

”இதுக்கு முன்னால, நீங்க எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனபோது உங்க பையை இங்கு வச்சிட்டு போயிட்டீங்க போல. அதத் திறந்து பார்த்தேன். அதுல உங்க போன், அட்ரஸ் மற்றும் நீங்க பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களின் அட்ரஸும் கிடைத்தது. அவங்களுக்கு போன் பண்ணி எங்க வீட்டில நடந்த விஷயத்தைச் சொல்லி, நான் பண்ணப போற  விஷயத்தையும் சொன்னேன்.
அவங்க ளுக்கெல்லாம் ஓரே ஷாக். நான் பண்ணப்போற விஷயத்துக்கு முழு ஓத்துழைப்பு தரதாச் சொன்னாங்க.

சரி, விஷயத்துக்கு வரேன்.”

”ஆமாம்,ஏதோ போன் பண்ணப்போறேன்னு சொன்னீங்களே?” இது நான்

”ஆமாம், நான் போன் பண்ணறது என் பெற்றோர்களுக்குத் தெரியும்படி பார்த்துக் கொண்டேன்.”

                         ”ராமகிருஷ்ணன், டியர், என்ன மறந்துட்டீங்களா?”
இப்படி ஆரம்பித்தேன். ஓவ்வொரு வார்த்தையிலும் எதிராக இருப்பவர் கிட்ட அதிகமான அன்பைப்  பொழிவது மாதிரி பேசினேன். நடுவில என் பெற்றோர்கள் முகம் என்ன மாதிரி இருக்குன்னு பார்த்துக் கொண்டேன்.
அதாவது நாம கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம், அதுக்கு நம்ம பெற்றோரகளை கூப்பிடலாமா அல்லது  வேண்டாமா என்பது போன்ற வசனங்களைப் பயன்படுத்தினேன்.”
”உண்மையிலே என் பெற்றோர்கள் கொஞ்சம் அப்செட் ஆன மாதிரி தான் எனக்குத் தெரிந்தது.
ஷாக் டிரிட்மெண்ட் கொடுத்து இருக்கேன், என்ன நடக்குதுன்னு
பார்ப்போம் சார், உஙகளை ரொம்ப நேரம்  போர் அடிக்க வைத்துட்டேன்னு நினைக்கிறேன்.
சாரி சார், உஙக பையனுக்கு கூடிய சீக்கிரம் மணமாக என்னுடைய வாழ்த்துக்கள்.”

”கொஞ்சம் இரும்மா கவுஸல்யா, நீங்க கொடுத்த ஷாக் டிரீட்மெண்ட் வேலை செய்ய ஆரம்பிடுத்துன்னு நினைக்கிறேன்.”

”என்ன சார சொல்றீங்க?”

”நீங்க இந்த விஷயங்களைப் பத்தியெல்லாம் பேசறதற்கு முன்னால தான் உங்க தகப்பனார் என்னைப் பார்க்கணும்னு சொன்னார்,அது ஓருவேளை நீங்க எடுத்துண்ட முயற்சியாகக் கூட இருக்கும்னு நினைக்கிறேன்.
உங்க முயறசிக்கு நனறி.”



கோல மாவில் என் மணிவியின் கைவண்ணம்.

ஆக நல்லவங்களும் ஊரில் இருக்காங்க போல.
பெண் பாக்க் கிளம்பிட்டேங்க!!!
கீழே பாருங்க, பெண்ணை அழைத்து வரும் காட்சியை!!!!!!!!!!!!!

புதன், டிசம்பர் 4

பாசுரம் சொல்லும் கதை---பகுதி 5 கோவர்த்தன மலையைத் தூக்கின கதை!!!


பாசுரம் சொல்லும் கதை---பகுதி 5
கோவர்த்தன மலையைத் தூக்கின கதை.
"தாத்தா, புதுசா ௭ன்ன ௧தை சொல்லப் போறே?"
"௧ண்ணா, ௧ண்ணன் ஓர் மலையைத் தூக்கின ௧தை பற்றி தான் இன்னைக்கு உனக்குச் சொல்லப் போறேன்."
"என்ன மலையைக் கண்ணன் தூக்கினாரா?"
"ஆமாம் கண்ணா, கண்ணன் மலையைத் தூக்கினார்."
"௭துக்கு தாத்தா?"
கண்ணன் பிறப்பதுக்கு முன்னால் அந்த ஊர் மக்கள் வருஷாவருஷம் இந்திரனுக்கு விழா எடுத்து படையல் செய்வார்கள். எப்போதும் போல அந்த வருஷமும் விழாஎடுக்கலாம்ன்னு   ஊர் மக்கள் தீர்மானம் பண்ணறபோது, கிருஷணன் ,
ஏன் வருஷாவருஷம் இந்தினுக்கே படையல் பண்ணிரீங்க ஓரு மாறுதலுக்கு கோவர்த்தனமலைக்கு படையல்  செய்யலாமே, அந்த மலைதானே உங்களுக்குத் தேவையான பயிர்க ளை வளர்க்க உதவுது,"
என்று சொல்லி மக்களை மனம் திருந்தி கோவர்த்தனமலைக்கு படையல் செய்ய சம்மதம் வாங்கினான்.
"அப்புறம்என்னதாத்தா நடக்கிறது?"
மக்கள் சரின்னு கோவர்த்தனமலைக்கு படையல் செய்யராங்க.
"இந்திரனுக்குகோபம் வரலயா தாத்தா?"
"கோபம் வராம இருக்குமா?"
"அபபறம் என்ன ஆச்சு தாத்தா?"
இந்திரன் பாத்தான், என்னடா வருஷாவருஷம நமக்கு படையல் பண்ணுவாங்களே அது போல இந்த வருஷம் படையல் பண்ணலையேன்னு. நம்மளை ஏன் படையலுக்கு கூப்பிடலைன்னு 
பூமிக்குப் போய் பாக்கலாம்ன்னு பூமிக்கு வரார் இந்திரன்.
"அப்பறம் என்ன ஆறது தாத்தா?"
"மக்கள் கோவர்த்தனமலைக்கு படையல் பண்ணறதைப பாக்கிறார் இந்திரன்."
பயங்கறகோபம் வரது இந்திரனுக்கு!"
பாரு உங்களைஎல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணிறேன்னுன்னு!
"என்ன தாத்தா பண்றார்?"
மழை அரக்கனைக்  கூப்பிட்டு உடனே பயங்கர மழை பெய்ய உத்தரவு போடறார் இந்திரன்.
"மழை அரக்கன் என்ன பண்றார் தாத்தா?"
"இந்திரன் சொன்னா மீறமுடியுமா என்ன?"
மழை பெய்யத் தொடங்கியது. மழைன்னா அப்படிப் பட்ட மழை. ஊரே வெள்ளக்காடா மாறுகிறது. ஒதுங்கறதுக்குஒருஇடம் கூட இல்லை. மக்கள் என்ன பண்றதுன்னு தெரியல.ஓடி கிருஷ்ணன் கிட்ட வராங்க.
கிருஷ்ணா எங்களைக் காப்பாத்து, ஊரே வெள்ளக் காடா இருக்கு, எங்களால எங்க போரதுன்னு தெரியல, 
"நீ சொன்னதாலத் தானே கோவர்த்தன மலைக்கு படையல் செய்தோம், இப்ப நீ தான எங்களைக் காப்பாத்த வேணும்"
அப்படீன்னு மக்கள் கிருஷ்ணன் கிட்ட வந்து கதறாங்க."
கிருஷ்ணன் மக்களைப் பார்த்து, கவலைப் படாதீங்க, உங்களைக் காப்பாத்துவது என்னுடைய கடமைன்னு சொல்றார்.
"அப்பறம் என்ன பண்றார தாத்தா?"
உடனே தன்னோட சுண்டு விரலால கோவர்த்தன மலையை அப்படியே தன் தலைக்கு மேல தூக்கி மக்கள்,ஆடு, மாடு போன்ற எல்லா உயிரினங்களையும் மலைக்குக் கீழே வரச் சொல்றார்.
"மலையைத் தூக்க முடியுமா தாத்தா?"
"நமக்குத் தான் சின்னப் பொருளக்கூட தூக்க முடியாது,ஆனா கண்ணன் பெருமாள் இல்லையா,அவருக்கு மலை கூட கடுகு மாதிரி சிறுத்துப் போயிடும் கண்ணா!"
"அப்புறம் என்ன ஆறது தாத்தா?"
"இந்திரன் வேறு வழில்லாம தோத்துப் போயிடறான்.
சின்னக் குழந்தையா இருக்கிறகிருஷணன் பெருமாள்ன்னு புரிஞ்க்கிறான். அவர்கிட்ட தான்பண்ண தப்புக்கு  மன்னிப்புக் கேட்கிறான்."
"மழையும் நின்னு போயிடறது. இடையர்கள் கண்ணன் யாருனனு புரிஞ்சுக்கிறாங்க."
"இந்த கோவர்த்தன மலையைத் தூக்கினதைப் பற்றி பல ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரப்பந்தத்தில்  பல இடங்களில் பாடியுள்ளார்கள் கண்ணா,அதுல ஓரு பாசுரத்துக்குத் தான் இந்த அர்த்தம் வர மாதிரி 
உள்ளதை கீழே கொடுத்துள்ளேன்."

                                 இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த
                                         எழில்விழ வில்பழ நடைசெய்,
                                 மந்திர விதியில் பூசனை பெறாது
                                         மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்
                                 எந்தமோ டினவா நிரைதள ராமல்
                                         எம்பெரு மானரு ளென்ன,
                                 அந்தமில் வரையால் மழைதடுத் தானைத்
                                         திருவல்லிக் கேணிக்கண் டேனே.

என்று திருவல்லிக்கேணிப் பெருமானைப் பற்றி பாடும் போது திருமங்கையாழ்வார் பாசுரம் விளக்கம் தான் மேலே உள்ள கதை.
"நல்லா இருந்தது தாத்தா."
"இதை ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கு என படமாக எடுத்துள்ளார்கள கண்ணா, பாத்தா அசந்துடுவே."
"அப்படியா, எங்க இருக்கு தாத்தா?"
கீழே கொடுத்துள்ள லின்கை சொடுக்கினா நேரே அங்கேயே கொண்டு போய் விடும், பாரு அசந்துடுவே.
http://www.youtube.com/watch?v=6-UKAJ6dO-U&list=SPB973DBD69DB69061 
ஆங்கிலத்தில் யூ டுயுபில் பாருங்கள்
கோவர்த்தன மலையைத் தூக்குதல்

கண்ணன் மலையை தூக்குதல

பாசுரம் சொல்லும் கதை---பகுதி 6. காளிங்க நர்த்தனம்.



பாசுரம் சொல்லும் கதை---பகுதி 6. காளிங்க நர்த்தனம்.

"என்ன தாத்தா ஓரே பாட்டா இருக்கு?”
"ஆமா கண்ணா, நான் பாடறது பாட்டு இல்லப்பா, பாசுரம்.”
"என்ன பாசுரம் அது தாத்தா?”
            நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
              அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டருள்செய்த
            அஞ்சன வண்ணனைப் பாடிப்பற்
              அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற
"கண்ணன் சின்னக் குழந்தையா இருக்கும் போது பல ஆச்சர்யங்களை நிகழ்த்தி இருக்கார். அதப் பற்றி நான் உனக்கு நிறையச் சொல்றேன். ஆனா இப்ப நான் பாடிய பாசுரம் கண்ணன் ஓரு பாம்பின் மேல டான்ஸ் காளிங்க நர்த்தனம், ஆடியது பற்றியது.”
"என்னது பாம்பு மேல டான்ஸா?”
"ஆமாம், பாம்பு மேல தான் டான்ஸ் தான்!”
"எதுக்கு தாத்தா பாம்பு மேல டான்ஸ் ஆடணும்.”
"அது ஒரு கதை கண்ணா!!!
கிருஷ்ணன் எப்போதும்  தன் நண்பர்களுடன் மாடுகளை மேச்சலுக்குக்காக யமுனை நதிக்கரைக்கு கொண்டு செல்வது வழக்கம். அந்த நதிக்குப் பக்கத்திலே ஒரு மடு இருக்கும்.”
"மடுன்னா என்ன தாத்தா?”
"மடுன்னா குளம் கண்ணா, அதாவது ரொம்ப தண்ணி இருக்காது, கலங்கி இருக்கும், தண்ணி தெளிவா இருக்காது, அதை தான் மடுன்னு சொல்லுவோம்.”
"சரி தாத்தா.”
"இதுக்கு முன்னாலே அந்த மடுவிலெ நிறைய மாடுகள், கன்னுக்குட்டிகள் செத்துப் போயிருக்கு. என்ன காரணம்ன்னு யாருக்கும் தெரியாது. அன்னிக்கு கண்ணன் தன் நண்பர்களோடு அந்த மடுப் பக்கம் தங்கள்
மாடுகளை ஓட்டின்ண்டு வராங்க.”
"ஐயய்யோ, கண்ணனுக்கு இந்த விஷயம் தெரியாதா, தாத்தா?”
"தெரியும் கண்ணா, அது மட்டும் இல்லை, அந்த மடுவில ஒரு பயங்கற விஷ்ம் கொண்ட நாகப்பாம்பு இருக்கும்ன்னும் தெரியும்.
அந்தப் பாம்பு தான் மாடுகள், கன்னுக்குட்டிகள் செத்துப் போகக் காரணம்ன்னும் தெரியும்.”
"தெரிஞ்சுண்டே எதுக்குத் தாத்தா அந்த மடுவுக்கு போகணும்.”
"அந்த பாம்புக்கு “காளியன்”   அப்படின்னு பேர், அவனுக்கு அஞ்சு தலை.”
"அப்பறம் என்ன ஆறது தாத்தா?”
"தன் நண்பர்களை அழைத்து மாடுகளை அந்த மடுவில் தண்ணீர் அருந்தச் அழைத்துச் செல்லும்படி சொல்றான்.
மடுவில் இருந்த காளியனுக்கு குஷி. இன்னிக்கு நமக்கு நல்ல விருந்துன்னு சொல்லிக்கிட்டே வெளியே வரான்."
"அப்புறம் என்ன நடக்குது தாத்தா?”
"நண்பர்கள் மாடுகளை அந்த மடுக்கு அருகாமையில் அழைத்துச் செல்கிறார்கள்.
திடீரென்று ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தா கண்ணனைக் காணோம். நன்ண்பர்களுக்கு பயம்.”
"கண்ணன் எங்க போயிட்டார் தாத்தா?”
”தண்ணிக்குள்ள குதித்தார், நீஞ்சினார், எங்க அந்தக் காளியன்ன்னு தேடினார்.
கண்ணனைக் காணோம்ன்னு நண்பர்கள் உடனே கோகுலத்துக்கு ஒடிப்போய் நந்தகோபனிடம், கண்னன் விஷப்பாம்பு
இருக்கக்கூடிய மடுவுக்குள் குதித்ததை சொல்லப் போறாங்க.
கோகுலத்தில் உள்ள எல்லாரும் பயந்து போய் உடனே ஓடி வராங்க.”
”கண்ணனுக்கு என்ன ஆறது தாத்தா, எனக்கு பயமா இருக்கு.”
”காளியனுக்கு குஷி. மாடுகள் தான் வரும்ன்னு நினைச்சான், மனுஷனே வந்து இருக்கான்னு ரொம்ப மகிழ்ச்சி. தன்னுடைய வாயை ‘ஆ” என்று திறந்து கொண்டு கிருஷ்ணனை முழுங்க ஒடி வரான்.
காளியனுக்குப் பலதடவை போக்குக் காட்டிக் கொண்டே இங்கும் அங்கும் ஒடி ஒடி, அவனுக்கு போக்குக் காட்டறார்.
காளியன் வாலைப் பிடித்து சுழற்றறார். அவனால் ஒண்ணும் பண்ணமுடியல. இந்த மாதிரி பல மணி நேரம் நடந்தபின், அவன் களைப்பாகிற நேரம் பாத்து அவன் தலை மேல ஏறி நின்னு ஆனந்தத்
தாண்டவம் ஆடறார்.
காளியனால் ஒண்ணும் பண்ணமுடியல. கண்ணனை கடவுள்ன்னு காளியன் புரிஞ்சுக்கறான்.”
”என்ன பண்றான், காளியன்.”
”கண்ணனிடம் மன்னிப்புக் கேட்கிறான்.”
”மன்னிப்புக் கொடுக்கிறாரா தாத்தா?”
”மன்னிப்பு கொடுப்பது தான் கடவுளின் செயல். யார் அவன் பாதத்தை அண்டினாலும் அவனுக்கு மன்னிப்புக் கொடுத்து .அவனை தன்னோடு இணத்து கொள்வது தான் கடவுளின் செயல் இல்லையா, அதனால், காளியனிடம் இனிமே யாருக்கும் நீ தொந்த்ரவு கொடுக்கக்கூடாது, அதனால் இந்த மடுவில் இருந்து உடனே கடலை நோக்கிப் போய்விடு, அப்ப்டிங்கறார் கண்ணன்.”
”காளியன் போயிடறானா தாத்தா?”
”ஆமாம் கண்ணா, காளியன் உடனே அந்த மடுவை விட்டு வெளியே போய் கடலுக்குப் போய் விடுகிறான்.”
”அப்பாடா, இப்பத்தான் எனக்கு உயிர் வந்தது தத்தா.”
”இந்தக் கதையை தான் பெரியாழ்வாரும், மற்றவர்களும் பாசுரமாகப் பாடியுள்ளார்கள், அதுலே ஒரு பாசுரத்தை தான் நான்
முன்னாலே பாடினேன், கண்ணா. மற்றவைகளை கீழே கொடுத்துள்ளேன்
                  காளியன் பொய்கைகலங்கப்பாய்ந் திட்டு, அவன்
            நீள்முடி யைந்திலும் நின்று நடஞ்செய்து,
                மீள் அவனுக் கருள்செய்த வித்தகன்
            தோள்வலி வீரமே பாடிப்பற்
                தூமணி வண்ணனைப் பாடிப்பற. 

என்று பெரியாழ்வார் பாடுகிறார். மேலும்,

   படவர வுச்சி தன் மேல் பாய்ந்துபல் நடங்கள் செய்து,
     மடவரல் மங்கை தன்னை மர்வகத் திருத்தி னானே,
   தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,
     கடவுளே! காவ ளந்தண் பாடியாய்! களைகணீயே.

என்று திருக்காவளம்பாடி என்னும் திவ்யதேசத்தைப் பற்றிப் பாடும்போது திருமங்கையாழ்வார் இந்த காளியன் நடனத்தைப் பற்றி பாடுகிறார்.
உன்னுடைய பாட்டி அதனைக் கோலமாகப் போட்டுள்ளார்கள் பார்.
கோலத்தில் காளிங்க நர்த்தனம்


                                                          


இந்தக் காளியின் மேல் நடனம் செய்ததை உன் மாதிரி குழந்தைகளுக்கு புரியும்படி படமாக்க் கொடுத்துள்ளார்கள்.
அதயும் பார். நன்றாக இருக்கும்.”
http://www.youtube.com/watch?v=52iZ3lUv41U தமிழில்
http://www.youtube.com/watch?v=z1p7Lo8nwNI&list=SPB973DBD69DB69061 ஆங்கிலத்தில்