வெள்ளி, ஏப்ரல் 19

ஆய கலைகள் அறுபத்து ஐந்து?

ஆய கலைகள் அறுபத்து ஐந்து?
இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து?
அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம்?
அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்தேகம் வருதா?
அப்படின்னு கேட்கிறீர்களா?
அதாங்க, நடனம்ஆடுவது, பாட்டுப் பாடுவது, ஓவியம வரைவது இப்படி 64 விதமான கலைகள் ஒருவனுக்குத் தெரிந்து இருந்தால் அவன் மிகப் பெரிய அறிவாளியாம். இந்துமதம் சொல்லுகிறது.
கலைகள் பட்டியலைப் பாருங்கள். வாவ்!!!
இத்தனையும் ஒருவன் தெரிந்து கொள்ள எவ்வளவு நாட்கள் ஆகும் பாருங்கள்.
தன் வாழ்நாளைப் பூரா இதுக்கே செலவழிக்க வேணும், இல்லையில்லை பல ஜென்மங்கள் எடுத்து இதையே வேலையாகக் கொண்டிருந்தால் தான் இத்தனையும் கற்றுக் கொள்ள முடியும்.
ஒரு பழமொழி உண்டு "களவும் கற்று மற" அதாவது திருடக் கூடத் தெரிந்து இருக்க வேணுமாம்..
இதுலே ஒண்ணு பார்த்திங்களா? பட்டியலை இன்னொருதடவை படிங்க!!
உலகத்துல முக்கியமான ஒண்ண விட்டுடாங்க? அத அறுபத்து அஞ்சாவது கலையா சேர்த்து இருக்கணும், இல்லையில்லை, அதை முதல் கலையா வச்சு இருக்கணும்!!!!
அது தெரியலைன்னா வேறு எது தெரிஞ்சும் உபயோகம் இல்லைங்க!
வாத்தியார் பையனைப் பார்த்து கேட்கிறார்,
"உலகத்திலே நீக்கமற நிறைஞ்சு இருக்கறது எதுடா?" 'அதாண்டா எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது எது?"
ஒரு பையன் சொல்றான், "ஆகாயம் சார்".
இன்னொருத்தன் சொல்றான், "கடவுள் சார்". மற்றவன் "தண்ணிர்". அப்படிங்கறான். மற்றவன் "காற்று"
இப்படி ஆளாளுக்கு அவங்களுக்குத் தெரிந்ததைக் சொன்னாங்க.
"முட்டாப் பசங்களா, இதெல்லாம் அந்தக்காலத்துக்குப் பொருந்தும், எப்பவும் பொருந்தறுது எது தெரியுமா?"
"எது சார்"
"உலகத்துல நீக்கமற நிறைஞ்சு இருக்கறது லஞ்சம்." அப்படின்னாரே பாக்கணும்.
பசங்கள்ளாம் ஆடிப் போயிட்டாங்க!
என்ன வாத்தியார், இப்படி சொல்லித் தராறேன்னு பாக்கக்கூடாது, உலக
நடைமுறையை சரியா கண்டுபிடித்து விட்டார், வாத்தியார்.
பாருங்க, எங்க இல்ல லஞ்சம்?
ஆசுபத்திரிக்குப் போங்க, பியுனுக்கு ஏதாவது வெட்டினாத்தான் டாக்டரைப் பார்க்க சீட்டு கொடுப்பான்.
மின்சார ஆபீசுக்குப் போங்க, கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை கொடுத்தால் தான் உங்க வீட்டுலே மின்சாரத்தை "வரபோது" கண்ணுலே காண்பிப்பாங்க!!
இப்படி எங்க போனாலும் அவங்களுக்கு சேரவேண்டியது சரியாப் போனால் தான்
நம்ம காரியம் கை கூடும். லஞ்சம் எவ்வளவு கொடுக்கணும், எப்படிக் கொடுக்கணும் அப்படிங்கறது எல்லாம் ஒரு கலை.
என்ன காரியம் ஆகணும், அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் அப்படிங்கறதைப் பொறுத்து  லஞ்சம் மதிப்பு மாறும். இது  மட்டுமா
அது சரி, எப்படி இவர் வாங்குவாங்கன்னு தெரிஞ்சுக்கறது?  அவரே நேரே வாங்குவாரா?
வேறே யாருக்கிட்டேயும் கொடுக்கணுமா?
சரியான கேள்வி கேட்டிங்க?
இது  தெரியாமத்தான் நான் முழிச்சேன்!!!
என்னது?
லஞ்சம் கொடுக்கக் கூட தெரியாதா?
ஆமாங்க!! வெளிலே சொன்னா வெட்கம்!
இப்பக் கூட இத்தாலி நாட்டுலே வாங்கின ஹெலிகாப்டருக்கு யாரோ லஞ்சம் வாங்கிட்டாங்கன்னு பேசிகிட்டாங்க பாருங்க.
இதுக்குன்னு பல ஆட்கள் இருப்பாங்கன்னு  பின்னால தான் தெரிஞ்சுகிட்டேன்
நீ கொடுத்த அனுபவம் இருக்கான்னு கேட்கிறது காதுல விழறது. 
அந்தக் கதையே முதல்ல கேளுங்க 
எங்கப் பெரிய குடும்பத்திலே (எனக்கு நாலு தம்பிகள், நாலு தங்கைகள்). எப்படி அய்யா உங்க அப்பா ஜீவனம் பண்ணார்ன்னு கேட்கத் தோணுதோ?
எங்கும் கடன் வாங்காமல், தேவைக்கு அதிகமா எதையும் வாங்காமல்  காலத்தை ஒட்டி எல்லோரையும், படிக்க வைத்த, எங்க அப்பாவுக்கு நாங்க நன்றியைச் சொல்லணும்!!
நாங்கல்லாம் ஒண்ணா கூட்டுக் குடும்பமா இருந்த காலம். எங்க அப்பா,
வாங்க வேணாம் சொல்லியும் கேட்காமல், அரசாங்கம் கடன் தரான்னு, நண்பர்கள்
தொந்தரவு பொறுக்காம அரசு கூட்டுறவு சங்கத்தில் (housing board)ஒரு இடத்தை வாங்கி போட்டேன்.
சரி, வீட்டைக் கட்டலாம்ன்னு அரசிடம் கடனுக்கு விண்ணப்பித்தேன்.
முறையா முனிசிபாலிட்டி மற்றும் ஹவுசிங் போர்ட், ரெண்டு இடத்திலிருந்தும் வீட்டு பிளான் அப்ருவ் வாங்க விண்ணப்பித்தேன்.
இங்க ஆரம்பிச்சது சனி!!!
"என்னங்க, உங்களை அடிக்கடி நம்ம டீக்கடையில் பாக்கிறேன்? என்ன சார் விஷயம்?" ஹவுசிங் போர்ட் ஆபிஸின் அருகாமையில் உள்ள டீக்கடை முதலாளி தான், நான் அந்தக் கையில் அடிகடி டீ சாப்பிட வருவதைப் பார்த்து, மேலே சொன்ன கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டார்.
யாரிடமாவது என் பிரச்சனையை சொல்ல மாட்டோமா என உள்ளுக்குள் குமைந்து கொண்டு இருக்கும் போது ஆபத்பாந்தவராக டீக்கடை நாயர் எனக்குத் தெரிந்தார்.
"அதை ஏன் கேட்கிறீங்க? இதுவரை பலதடவை எங்க ஊர்லேந்து பஸ் சார்ஜ் செலவு  பண்ணி வந்துட்டேன், ஒவ்வோரு தடவையும் அந்த குமாஸ்தா ஏதாவது காரணம்  சொல்லி, "ரெண்டு நாள் கழித்து வாங்க, பாப்போம்",
அப்படின்னு சொல்லி என்னை அலக்கழிக்கிறார். என்ன பண்ணறதுன்னு தெரியலே..அதான் டீ சாப்பிட்டு கிளம்பலாம்ன்னு இருக்கேன். நீங்க கேட்டதால உங்க கிட்ட  புலம்பினேங்க, தப்பா நினைக்காதிங்க."
"அட நீங்க வேறே, உங்களைப் பாத்தா பரிதாமா இருக்குங்க, விஷயம் தெரியாம இருக்கீங்களே, முன்னாலேயே சொல்லி இருந்திங்கன்னா பஸ்சுக்கு இவ்வளவு  செலவு பண்ணி இருக்கவேண்டாமே?", நாயர்.
"என்ன சொல்றிங்க, நீங்க என்ன செய்ய முடியும்?" 
இதுதான் முக்கியமான இடம்!!  
முன்னால சொன்னேனே, "டீக்கடை நாயர்" தான் நமக்கு முக்கியமானவர். அவர் தான் இங்க தரகரா வேலை செய்கிறார்ன்னு அப்பவரைக்கும் எனக்கு தெரியாது. இப்படி லஞ்சப்பணம் கைமாற பல வழிகள்!!!
"கொடுங்க 50 ரூபாயை, கொஞ்ச நேரம் இருங்க, கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள்," ன்னு  சொல்லிட்டு என்னிடம் விவரங்களை வாங்கிக் கொண்டு ஆபீசுக்குள் போனார். போன வேகத்திலேயே திரும்பி வந்து
"இந்தாங்க, நீங்க கேட்ட வீடு கட்டுவதற்கான ஒப்புதல் கடிதம்" என்றாரே பாக்கணும்.ஆய கலைகள் அறுபத்து ஐந்து?
இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து?
அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம்?
அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்தேகம் வருதா?
அப்படின்னு கேட்கிறீர்களா?
அதாங்க, நடனம்ஆடுவது, பாட்டுப் பாடுவது, ஓவியம வரைவது இப்படி 64 விதமான
கலைகள் ஒருவனுக்குத் தெரிந்து இருந்தால் அவன் மிகப் பெரிய அறிவாளியாம். இந்துமதம்
சொல்லுகிறது. கலைகள் பட்டியலைப் பாருங்கள். வாவ்!!!
இத்தனையும் ஒருவன் தெரிந்து கொள்ள எவ்வளவு நாட்கள் ஆகும் பாருங்கள்.
தன் வாழ்நாளைப் பூரா இதுக்கே செலவழிக்க வேணும், இல்லையில்லை பல ஜென்மங்கள்
எடுத்து இதையே வேலையாகக் கொண்டிருந்தால் தான் இத்தனையும் கற்றுக் கொள்ள முடியும்.
ஒரு பழமொழி உண்டு "களவும் கற்று மற" அதாவது திருடக் கூடத் தெரிந்து இருக்க
வேணுமாம்..
இதுலே ஒண்ணு பார்த்திங்களா? பட்டியலை இன்னொருதடவை படிங்க!!
உலகத்துல முக்கியமான ஒண்ண விட்டுடாங்க? அத அறுபத்து அஞ்சாவது கலையா
சேர்த்து இருக்கணும், இல்லையில்லை, அதை முதல் கலையா வச்சு இருக்கணும்!!!!
அது தெரியலைன்னா வேறு எது தெரிஞ்சும் உபயோகம் இல்லைங்க!
வாத்தியார் பையனைப் பார்த்து கேட்கிறார்,
"உலகத்திலே நீக்கமற நிறைஞ்சு இருக்கறது எதுடா?" 'அதாண்டா எல்லா இடங்களிலும்
பரவி இருக்கிறது எது?"
ஒரு பையன் சொல்றான், "ஆகாயம் சார்".
இன்னொருத்தன் சொல்றான், "கடவுள் சார்". மற்றவன் "தண்ணிர்". அப்படிங்கறான். மற்றவன் "காற்று"
இப்படி ஆளாளுக்கு அவங்களுக்குத் தெரிந்ததைக் சொன்னாங்க.
"முட்டாப் பசங்களா, இதெல்லாம் அந்தக்காலத்துக்குப் பொருந்தும், எப்பவும் பொருந்தறுது
எது தெரியுமா?"
"எது சார்"
"உலகத்துல நீக்கமற நிறைஞ்சு இருக்கறது லஞ்சம்." அப்படின்னாரே பாக்கணும்.
பசங்கள்ளாம் ஆடிப் போயிட்டாங்க!
என்ன வாத்தியார், இப்படி சொல்லித் தராறேன்னு பாக்கக்கூடாது, உலக
நடைமுறையை சரியா கண்டுபிடித்து விட்டார், வாத்தியார்.
பாருங்க, எங்க இல்ல லஞ்சம்?
ஆசுபத்திரிக்குப் போங்க, பியுனுக்கு ஏதாவது வெட்டினாத்தான் டாக்டரைப் பார்க்க சீட்டு கொடுப்பான்.
மின்சார ஆபீசுக்குப் போங்க, கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை கொடுத்தால்
தான் உங்க வீட்டுலே மின்சாரத்தை "வரபோது" கண்ணுலே காண்பிப்பாங்க!!
இப்படி எங்க போனாலும் அவங்களுக்கு சேரவேண்டியது சரியாப் போனால் தான்
நம்ம காரியம் கை கூடும். லஞ்சம் எவ்வளவு கொடுக்கணும், எப்படிக் கொடுக்கணும்
அப்படிங்கறது எல்லாம் ஒரு கலை.
என்ன காரியம் ஆகணும், அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் அப்படிங்கறதைப்
பொறுத்து  லஞ்சம் மதிப்பு மாறும். இது  மட்டுமா
அது சரி, எப்படி இவர் வாங்குவாங்கன்னு தெரிஞ்சுக்கறது?  அவரே நேரே வாங்குவாரா?
வேறே யாருக்கிட்டேயும் கொடுக்கணுமா?
சரியான கேள்வி கேட்டிங்க?
இது  தெரியாமத்தான் நான் முழிச்சேன்!!!
என்னது?
லஞ்சம் கொடுக்கக் கூட தெரியாதா?
ஆமாங்க!! வெளிலே சொன்னா வெட்கம்!
இப்பக் கூட இத்தாலி நாட்டுலே வாங்கின ஹெலிகாப்டருக்கு யாரோ லஞ்சம் வாங்கிட்டாங்கன்னு
பேசிகிட்டாங்க பாருங்க.
இதுக்குன்னு பல ஆட்கள் இருப்பாங்கன்னு  பின்னால தான் தெரிஞ்சுகிட்டேன்
நீ கொடுத்த அனுபவம் இருக்கான்னு கேட்கிறது காதுல விழறது. 
அந்தக் கதையே முதல்ல கேளுங்க 
எங்கப் பெரிய குடும்பத்திலே (எனக்கு நாலு தம்பிகள், நாலு தங்கைகள்). எப்படி அய்யா
உங்க அப்பா ஜீவனம் பண்ணார்ன்னு கேட்கத் தோணுதோ?
எங்கும் கடன் வாங்காமல், தேவைக்கு அதிகமா எதையும் வாங்காமல்  காலத்தை
ஒட்டி எல்லோரையும், படிக்க வைத்த, எங்க அப்பாவுக்கு நாங்க நன்றியைச்
சொல்லணும்!!
நாங்கல்லாம் ஒண்ணா கூட்டுக் குடும்பமா இருந்த காலம். எங்க அப்பா,
வாங்க வேணாம் சொல்லியும் கேட்காமல், அரசாங்கம் கடன் தரான்னு, நண்பர்கள்
தொந்தரவு பொறுக்காம அரசு கூட்டுறவு சங்கத்தில் (housing board)ஒரு இடத்தை வாங்கி போட்டேன்.
சரி வீட்டைக் கட்டலாம்ன்னு அரசிடம் கடனுக்கு விண்ணப்பித்தேன்.
முறையா முனிசிபாலிட்டி மற்றும் ஹவுசிங் போர்ட், ரெண்டு இடத்திலிருந்தும் வீட்டு
பிளான் அப்ருவ் வாங்க விண்ணப்பித்தேன்.
இங்க ஆரம்பிச்சது சனி!!!
"என்னங்க, உங்களை அடிக்கடி நம்ம டீக்கடையில் பாக்கிறேன்? என்ன சார் விஷயம்?"
ஹவுசிங் போர்ட் ஆபிஸின் அருகாமையில் உள்ள டீக்கடை முதலாளி தான், நான்
அந்தக் கையில் அடிகடி டீ சாப்பிட வருவதைப் பார்த்து, மேலே சொன்ன கேள்வியை
என்னைப் பார்த்துக் கேட்டார்.
யாரிடமாவது என் பிரச்சனையை சொல்ல மாட்டோமா என உள்ளுக்குள் குமைந்து
கொண்டு இருக்கும் போது ஆபத்பாந்தவராக டீக்கடை நாயர் எனக்குத் தெரிந்தார்.
"அதை ஏன் கேட்கிறீங்க? இதுவரை பலதடவை எங்க ஊர்லேந்து பஸ் சார்ஜ் செலவு
பண்ணி வந்துட்டேன், ஒவ்வோரு தடவையும் அந்த குமாஸ்தா ஏதாவது காரணம்
சொல்லி, "ரெண்டு நாள் கழித்து வாங்க, பாப்போம்",
அப்படின்னு சொல்லி என்னை அலக்கழிக்கிறார். என்ன பண்ணறதுன்னு தெரியலே..
அதான் டீ சாப்பிட்டு கிளம்பலாம்ன்னு இருக்கேன். நீங்க கேட்டதால உங்க கிட்ட
புலம்பினேங்க, தப்பா நினைக்காதிங்க."
"அட நீங்க வேறே, உங்களைப் பாத்தா பரிதாமா இருக்குங்க, விஷயம் தெரியாம
இருக்கீங்களே, முன்னாலேயே சொல்லி இருந்திங்கன்னா பஸ்சுக்கு இவ்வளவு  செலவு
பண்ணி இருக்கவேண்டாமே?", நாயர்.
"என்ன சொல்றிங்க, நீங்க என்ன செய்ய முடியும்?" 
இதுதான் முக்கியமான இடம்!!  
முன்னால சொன்னேனே, "டீக்கடை நாயர்" தான் நமக்கு முக்கியமானவர். அவர் தான்
இங்க தரகரா வேலை செய்கிறார்ன்னு அப்பவரைக்கும் எனக்கு தெரியாது. இப்படி லஞ்சப்பணம்
கைமாற பல வழிகள்!!!
"கொடுங்க 50 ரூபாயை, கொஞ்ச நேரம் இருங்க, கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள்," ன்னு
சொல்லிட்டு என்னிடம் விவரங்களை வாங்கிக் கொண்டு ஆபீசுக்குள் போனார். போன வேகத்திலேயே
திரும்பி வந்து
"இந்தாங்க, நீங்க கேட்ட வீடு கட்டுவதற்கான ஒப்புதல் கடிதம்" என்றாரே பாக்கணும்.
"எப்படிங்க இதெல்லாம்?"
"அதெல்லாம் எதுக்குங்க, ஊருக்குக் கிளம்புங்க,அடுத்த கட்ட வேலையைப் பாருங்க"
என்று சொல்லிவிட்டு அடுத்தவருக்கு டீ போடப் போய்விட்டார்.
இது தான் என் முதல் லஞ்சம் கொடுத்த அனுபவம்,
அது அப்படின்னா, முனுசிபாலிட்டி அனுபவம் வேறே மாதிரி!! 
"இத பாருங்க சார், ஒரு பிளாட்டுக்கு 330ன்னு நிர்ணயம் செய்து இருக்கோம், இது எனக்கு
மட்டும் இல்ல, இங்க வேலை செய்யற எல்லாருக்கும் பங்கு உண்டு, நீங்க தனித்தனியா
ஒவ்வொருத்தருக்கும் கொடுக்க வேணாம், கொடுத்திங்கன்னா இன்னைக்கு சாயங்காலம்
ஒப்புதல் கடிதத்தை வாங்கின்டு போகலாம், இல்லன்னா நான் ஒருவாரம் லீவு, முனிசிபல்
சேர்மன் அடுத்த வாரம் லீவு, எப்ப உங்களுக்கு கடிதம் கிடைக்குமுன்னு சொல்லமுடியாது,
பாத்துக்குங்க!"
நேரடியா விஷயத்துக்கு விட்டார் .டவுன் ப்ளானிங் ஆபிசர்.
யோசனை செய்தேன், லேட்டாகும் ஒவ்வொரு நாளும் கம்பி, சிமெண்ட், மணல், கொத்தனார்
சம்பளம் இவையெல்லாம் விலை ஏறிக் கொண்டே இருப்பதைப் பார்த்தால் இவர் ஒண்ணும்
அதிகமா கேக்கலைன்னு தோணித்து.
"சரி சார், சாயங்காலம் வந்து வாங்கிக்றேன்" ன்னு சொல்லிட்டு வெற்றி வீரானாக நடையைக்
கட்டினேன். 
இப்படி வாங்கற விதம் பல விதங்கள். ஒரு இடத்தில மேஜை டிராயரை திறந்து வைத்து
இருப்பார்கள்.
அந்த அனுபவம்தான் எனக்கு பின்னால பல விதங்களில் உதவியது. என் காரியங்களை
நடத்திக் கொள்ள லஞ்சம் வாங்குறவங்க. யாரவது இருக்காங்களான்னு தான் பாப்பேன்.
"யாருக்காவது ஏதாவது கொடுக்கணும்ன்னா சொல்லுங்க", அப்படின்னு அவருக்கிட்டேயே பிட்டை
போட்டு ஆரம்பித்து விடுவது தான் என் டெக்னிக்.
நீங்களும் அதையே பாருங்க, பிழைச்சுபீங்க
     

)


.

அறுபத்து நான்கு கலைகள்

1. இசைக்கலை ( இசைக் கருவிகள் மீட்டுதல் )
2. நடனக் கலை ( ஆடற்கலையில  தேர்ச்சி பெற்று நடனமாடுதல் )
3. ஒவியக்கலை ( தூரிகையால் வண்ணங்களைப  பயன்படுத்த சித்திரங்கள் வரைதல் )
4.அலங்காரக் கலை ( நெற்றியில் அழகழகான திலகங்களை வைத்து அலங்காரம்
செய்து கொள்ளுதல் )
5.தரை அலங்காரக் கலை ( நானாவித் கோலப் பொடிகளாலும  மலர்களாலும 
தரையை அலங்காரம் செய்தல் )
6.அறைகளை அலங்கரிக்கு கலை ( வண்ணங்கள், பூக்களால் அறைகளையும்
சுவர்களையும் அலங்காரம் செய்தல் )
7.ஒப்பனைக் கலை ( உடல், உதடுகள், பற்கள், நகங்கள், உடைகள் போன்றவற்றை
அழகு மிகச் செய்தல் )
8.வண்ணக் கற்கள் கலை ( வண்ணக் கற்கள், நவரத்தினங்கள் போன்றவற்றை
 வைத்து அலங்காரம் செய்தல் )
9.படுக்கை அலங்காரம் கலை ( அவசியம், காலம், காரணத்திற் கேற்ற வகையில்
படுக்கைகளை அலங்காரம் செய்தல் )
10.ஜலதரங்கக் கலை ( சிறு சிறு கிண்ணங்களில் நீர் நிரப்பி, குச்சிகளால 
அவற்றைத் தட்டி இசை எழுப்புதல் )
11.நீச்சற் கலை ( நீரில் மீன்போல் நீந்துவதுடன் மற்ற நீர் விளையாட்டு
களளையும் அறிந்து கொள்ளுதல் )
12.மந்திர, தந்திரக் கலை ( மந்திர, தந்திரங்கள ஒரளவு கற்றுத் தேவைப்படும
 போது அவற்றைப் பயன்படுத்துதல் )
13.மலர்க் கலை ( பலவகையான மலர்களைக் கொண்டு மலர் அலங்காரங்களைத்
தயாரித்தல் )
14.மலர் அலங்காரக் கலை ( பல வகையான மலர்களால் மலர்க்கிரீடம்,
மலர்ச்செண்டு போன்றவற்தை தயாரித்தல் )
15.உடை அலங்காரக் கலை ( உடை அலங்காரத்த அறிந்து தேவைப்படும
 வகையில் நேர்த்தியாக உடைகளை அணிந்து கொள்ளுதல் )
16.செவி அலங்காரக் கலை ( செவிகளை அலங்காரம் செய்யும் ஆபரணங்களை
உருவாக்குவதை அறிந்து வைத்திருத் தல் )
17.வாசனாதி திரவியக் கலை ( வாசனைப் பொருள்களை, வாசனாதி திரவியங்கள
  தயாரிக்கக் கற்றிருத்தல் )
18.ஆபரண அலங்காரக் கலை ( நகைகள், நவரத்தினங்கள், அலங்காரப் பொருள்களை
அழகாக அணிந்து கொள்ளுதல் )
19.மாயாஜாலக் கலை ( சில மாயாஜால வித்தைகளை கற்று வைத்திருத்தல் )
20.உணர்ச்சி தூண்டல் கலை ( உடலுறவிற்கான உணர்வைத் தூண்டக்கூடிய
  வழிகளைக் கற்றிருத்தல் )
21.கரக் கலை ( கைகள், கைவிரல்களால் பலவித நளிவு சுழிவுகளைசச் செய்து
உணர்வைத் தூண்டுதல் )
22.சமையற் கலை ( சமையற்கலையி நல்ல தேர்ச்சி பெற்று விளங்குதல் )
23.பானத் தயாரிப்புக் கலை ( பல வகையான பானங்கள், சோம பானம்
 போன்றவற்றைத் தயாரிக்கக் கற்றிருத்தல் )
24.தையற்கலை ( தையற்கலை, ஆடை பின்னுதல் போன்றவற்றில் தேர்ச்சி
 பெற்றிருத்தல் )
25.பூத் தையற்கலை ( நு}ல் இழைகளால் ஒலிகளை வாயினால் எழுப்பக்
கற்றிருத்தல் )
26.பாவனைக் கலை ( இசைக் கருவிகளின் ஒலிகளை வாயினால் எழுப்பக்
கற்றிருத்தல் )
27.புதிர்க் கலை ( புதிர்களை, வேடிக்கை கணக்குகள், வினோதப் பேச்சுகளை
 அறிந்து வைத்திருத் தல் )
28.கவிதைப் போட்டிக் கலை ( கவிதை மூலமாகப் கேட்கப்படும் கேள்விகளுக
 கவிதை மூலமாகப் பதில் சொல்லும் திறன் )
29.சொற் கலை ( பல்வேறு பொருள்களைக் கொண்ட சொற்களை அறிந்து
 வைத்திருத்தல் )
30.வாசிப்புக கலை ( இலக்கியம், இதிகாசம், பு[ராணங்களை இசை, பாவங்களுடன
  படிக்கக் கற்றிருத்தல் )
31.வரலாற்றுப பயிற்சிக் கலை ( சரித்திர, புராண, வரலாற்று நிகழ்ச்சிக ளை
அறிந்து வைத்திருத்தல் )
32.கவிதை படைக்கம் கலை ( இடையில் விடுபட்ட சொற்களை இணைத்துக்
கவிதையை முழுமையாக்கத் தெரிந்து வைத்திருத்தல் )
33.பிரம்புக் கலை ( பிரம்பு, சட்டம், மரம் போன்றவற்றால் பொருள்களைத
  தயாரிக்கக் கற்று வைத்திருத்தல் )
34.பாத்திர அலங்காரக் கலை ( தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உருவங்கள்,
மலர்க்களை வரையக் கற்றிருத்தல் )
35.தச்சுக் கலை (மரத்தினால சாமன்களைத் தயாரிக்கக் கற்று வைத்திருத்தல் )
36.களிமண் கலை ( களிமண், பஞ்சு போன்றவற்றால் உருவங்களை உருவாக்கக்
கற்றிருத்தல் )
37.போர்ப் பயிற்சிக் கலை ( ஆயுதங்களை பற்றியும் போர்த்திறன பற்றி தெரிந்து
 வைத்துகொள்ளுதல் )
38.புகழ்ச்சிக் கலை ( மற்றவர்களின் திறனுக்கேறப அவர்களைப் புகழ்வதற்கு
 தெரிந்து வைத்திருத்தல் )
39.குழந்தை விளையாட்டுக் கலை ( குழந்தைகளை மகிழ்விக்கவும் விளையாட்டு
களைப் பற்றி அறிந்து வைத்திருத்தல்; )
40.சதுரங்க விளையாட்டுக் கலை ( சதுரங்கம், தாயக்கட்டம் போன்றவற்றை
விளையாடுவதற்கு தெரிந்து வைத்துகொள்ளுதல் )
41.உடற்பயிற்சி கலை ( பல வகையான உடற்பயிற்சி செய்வதற்கு கற்று
 வைத்திருத்தல் )
42.சூதாட்டக் கலை ( பல வகையான சூதாட்டங்களை விளையாட கற்றுவைத்திருத்தல் )
43.தோற்ற மாற்றம் கலை ( மற்றவர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத
 வகையில், உருவத்தை மாற்றி அமைத்துகொள்ளும் முறைகளை அறிந்து
வைத்திருத்தல் )
44.வீடு கட்டும் கலை ( சிறிய வீடுகள், பெரிய வீடுகள் போன்றவற்றைக் கட்டும்
முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
45.நாணயப் பரிசோதனைக் கலை ( தங்கம், வெள்ளி நாணயங்களையும்,
 நவரத்தின ஆபரணங்களையும் பரிசோதித்துப் பார்த்து அவற்றின் தரத்தை
மதிப்பிடும  முறை அறிந்திருத்தல் )
46.இரசாயணக் கலை ( இரசாயணப் பொருள் மற்றும் உலோகப் பொருள் தெரிந்து
 வைத்திருத்தல் )
47.பளிங்குக் கலை ( பளிங்கு போன்றவற்ற பொருள்களை உருவாக்கும்
 முறைகளைக் கற்று வைத்திருத்தல் )
48.தோட்டக் கலை ( தோட்டத்தில் பல வகையான் செடி, கொடிகளை வளர்க்கக்
கற்றிருத்தல் )
49.பிராணிச் சண்டைக் கலை ( ஆடு, சேவல் போன்றவற்றைச் சண்டையிடப் பயிற்சி
 கொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
50.பறவைப் பயிற்சிக் கலை ( கிளிகள், மைனாக்களுக்குப் பேசக் கற்றுக்
கொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
51.உடற் புத்துணர்வுக் கலை ( உடலைத் தேய்த்து அமுக்கி, பிடித்துப்
புத்துணர்ச்சி ஏற்படுத்தக் கற்று வைத்திருத்தல் )
52.மொழி பெயர்ப்புக் கலை ( வேற்று மொழிகளில் எழுதப்பட்டிருப்பவற்றை
 மொழி பெயர்க்க அறிந்து வைத்திருத்தல் )
53.குறியீட்ட  மொழிக் கலை ( குறிப்பேடு களிலுள்ள குறியீடுகளுக்கு
அர்த்தம் சொல்லத் தெரிந்து வைத்திருத்தல் )
54.புதுத்தோற்றம் ஏற்படுத்தும் கலை ( பருத்தித் துணியைப் பட்டு போல்
 தோற்றமளிக்கும் வகையிலும், தரம் குறைந்த பொருள்களை உயர்ரகப்
 பொருள்கள் போல் தோற்றமளிக்கும் வகையிலும் மாற்றுவதற்கு அறிந்து
 வைத்திருத்தல் )
55.குணாதிசயங்களை அறியும் கலை ( ஒருவரின் தோற்றத்தைக் கொண்டு
 அவருடைய குணாதிசயங்களை அறியத் தெரிந்து வைத்திருத்தல் )
56.அகராதிக் கலை ( அகராதிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல் )
57.பிற மொழிக் கவிதைப் பயிற்சிக் கலை ( பிற மொழிகளிலும் கவிதை புனைய
அறிந்து வைத்திருத்தல் )
58.மனப்பாடக் கலை ( கவிதைப், பாடல்கள், இதிகாசப் பாடல்கள், கிராமியப் பாடல்கள்
 போன்றவற்றின் முதல் அடியைக் கேட்டதுமே அப்பாடல் முழுவதையும்
ஒப்புவிக்கும் திறனைப் பெற்றிருத்தல் )
59.நினைவாற்றல் பயிற்சிக் கலை ( நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ளும்
 முறை )
60.உபகரணத் தயாரிப்புக் கலை ( இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை
இயக்கக் கூடிய உபகரண்களைத் தயாரிக்கும் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
61.சகுனக் கலை ( வெளியே புறப்படும் போது தெரியும் சகுனங்களைப் பற்றியும்,
பழக்க வழக்கங்கள் , சடங்குகள் போன்றவற்றை ப் பற்றியும் அறிந்து வைத்திருத்தல் )
62.மலர் வண்டிக்கலை ( மலர்களாலேயே சக்கர வண்டிகள், இரதங்கள் போன்றவற்றை அழகாகத் தயாரிக்கும்
முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
63. கட்கத்தம்பம்
64.வேற்று மொழிக் கலை ( பல நாட்டு மொழிகளையும் பழக்க வழக்கங்களை
 யும் தெரிந்து வைத்திருத்தல் )