புதன், மார்ச் 27

நடையா இத்ய் நடையா1


அரஙகநாதர் கர்ப்பகிருஹத்தில் இருந்து வெளியே வரும்போது
நடப்பார் பாருங்கள் அது நடை!
சிம்ம கதி, கஜ கதின்னு பல வகையிலே அவர் நடப்பதை இன்னைக்குப் பூரா பூரா பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
அரசியல்வாதிகளைப் பாருங்க, ஏதாவது காரணத்துக் நடைப் பயணம் ன்னு கிளம்பிடுவாங்க!
ஃபேமஸ்ஸான்ன நடைன்னா, காந்தியடிகள் உப்பு சத்தியாகிரஹத்தின் போது நடந்த்தைச் சொல்லலாம்.
உலக அழகிகள் மேடையிலே நடப்பதை பூனை நடைன்னு(cat walk)ன்னு சொல்வாஙக இல்லையா?
சிவாஜி சார் ஒரு படத்திலெ, ”நடையா இது நடையா, ஒரு நாடக மன்றம் நடக்குது” ன்னு ஹீரோயினைப் பார்த்து பாடுவார் பாருங்கள். அந்தப் பாட்டு அந்தக் காலத்தில் ஃபேமஸ்.
ஒரு ஜோக் உண்டு, “டாக்டர் சார், நீங்க சொன்ன மாதிரி வீட்டிலிருந்து
10 மைல் நடந்து வந்துட்டேன் டாக்டர், இப்ப திரும்பிடலாமா”, அப்படின்னு ஒரு நாள் நடந்ததைப் பெருமையா பேசரவங்கள்ளாம் இங்க உண்டு.
”அப்படி என்ன சார் விசேஷம் நடையிலே”, அப்படின்னு நீங்க கேட்கிறது
காதுலே விழறது.
இல்லையா பின்ன, நடக்கிறதுலே அவ்வளவு இருக்குங்க!
மனிதாகள் நடக்கப் பிறந்தவங்க சார்.
30 நிமிஷம் நடங்க தினமும், சக்கரை வியாதி வரதை 50 மடங்கு குறைத்து
விடுமாம்!
60 வயதுக்கு மேல் உள்ளவங்களுக்குசக்கரை வியாதி வரதை 70% குறைத்து விடுமாம்.
100000 மைல் நீளமுள்ள ரத்த நாளங்கள், நடப்பதால் புத்துணர்வு பெறுதாம்.
பெண்கள் நடப்பதால் அவர்களுக்கு மார்பகப் ப்ற்று நோய் வருவதை 20%
சதவீதம்  குறைக்க முடியுமாம்.
அது மட்டுமா,ஏற்கனவே புற்று நோய் உள்ளவர்கள் நடப்பதால் அவர்களின் புற்று நோய் குறைவது மட்டுமல்லாமல் , அவ்ர்களின் வாழ்நாள் 50%


சதவீதம் கூடுதாங்க!
நடப்பது வியாதி வருவதைக் குறைக்கிறது, வியாதி இருந்தால் அதனை
மிக வேகமாக நீக்குகிறது. ரத்தவோட்டம் அதிகரிக்கிறது, heart attack
வருவதைக் தடுக்கிறது.
எலும்புகள் வளர்வதை அதிகரிக்கிறது.
அதுசரி, எத்தனை தூரம் நடப்பது?
ஒண்ணுமில்ல, தினமும் அரை மணி நேரம் நடங்க போறும்!
அப்புறம் பாருங்க உங்க உடம்பை, நாம் நாமான்னு சந்தேகப் படுவோம்!
“எஙக சார் ஆளக் கானோம், ஒ, நடக்கப் கிளம்பிட்டீங்களா?”
”வாழ்த்துக்கள்”, ‘அடுத்த தடவை வியாதி இல்லாத மனுஷனா உங்களைப்
பார்ப்போம்’.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக