வெள்ளி, அக்டோபர் 19

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய்?



“ஏம்மா, எனக்கு வேலை கிடைக்காதா?”
“ஏண்டி,அப்படிக் கேட்கிற?”
“ நான் படிச்சு எத்தனை வருஷம் ஆச்சு, இதுவரைக்கும் ஒரு இண்டர்வியு கூட வரலையே அம்மா?”
“அதுக்கு என்னடி பன்றது, நீ முடிக்கிறதுக்கும், ரிசசன் வரதுக்கும் சரியா இருக்கு. வெளிநாட்டுள கூட நிறையப் பேருக்கு வேலையில்லாம இருக்கான்னு பேப்பர்லெ போட்டு உள்ளத நீ பாக்கலயா?”
“அதுக்காக இப்படியா, நான் எத்தனை மார்க் வாங்கியும் ஒரு பிரயோசனமும் இருக்காது போல இருக்கு.’
“ஆமாண்டி, நீ, மற்றும் உன்னொட நன்பர்கள எல்லாம் நல்ல மார்க் வாங்கியுள்ளதை உங்க கல்லூரி கூட பேப்பரல கூட போட்டிருந்தாங்க இல்ல.”
”என்ன வாங்கி என்ன பிரயோசனம்?”
“அது சரி வேலைக்குப் போறது அவ்வளவு சுலபம்ன்னு நினைக்கிறயா?”
“வேலைக்குப் போறதுலெ என்னம்மா கஷ்டம்?”
“உனக்குத் தெரியுமா நான் பட்ட் கஷ்டம்?”
’அப்படிச் சொல்லாதே, நான் வேலைக்குப் போறது உங்க பாட்டிக்கு, தாத்தாவுக்கு எல்லாம் பிடிக்காது தெரியுமா உனக்கு?’
"ஏம்மா,அப்படி?”
“அந்தக் காலத்தில் பெண்கள் வேலைக்குப் போவது என்பது கெளரவக் குறைவு. எங்கேயாவது வேலைக்குப் போனா வீட்டுல யார் வேலை செய்வது, வீட்டை யார் பாத்துகிறது மாதிரி பல விஷயங்கள்
பாக்கனும்.”
“அப்ப நீ எப்படி வேலைக்குப் போனே?’
“உனக்குத் தெரியுமா, நான் வேலைக்குப் போகும் போது காலையில் அஞ்சு மணிக்கு எழுந்து அப்பாவுக்கு சமையல் செய்துவிட்டு,(அப்பா அப்ப வெளியூரில் வேலை பார்த்துண்டிருந்தார்) வீட்டுலெ எல்லாருக்கும் வேண்டியதை செய்து வைத்து விட்டு, உன்னைப் பள்ளிக்கு 
அனுப்புவதற்கு வேண்டியதை எல்லாம் முடித்து விட்டு, எனக்கு வேண்டியதை (அதாவது மாலை வரை)  எல்லாம் எடுத்துக் கொண்டு நான் செல்ல வேண்டும் தெரியுமா?”
“இது மட்டுமா, நீ சாயங்காலம் ஸ்கூல் முடித்து பஸ்ஸில் வந்துட்டியான்னு பாக்கணும், ஒரு நாள் லேட்டானாலும் மனசு பக் பக்குன்னு அடிச்சுக்கும். இது மட்டுமா, வேலைக்குப் போற இடத்துலெ
இந்த செமச்டெருக்குள்ள இத்தனை போர்ஷன் முடிக்கணும்ன்னு இருக்கு, (அம்மா கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து இருந்தார்கள்), மாணவர்களுக்கு ஒழுங்காகப் பாடம் நடத்தணும், கல்லூரி முதல்வர்
முகம் கோணாம நடந்துக்கணும், இதுக்கு மேலே நான் சேர்ந்து உள்ள மேனேஜ்மெண்ட்டுக்கு என்னைப் ப்ற்றி நல்ல அபிப்பிராயத்தை உண்டு பண்ணனும், இப்படி பலதையும் பார்த்துப் பார்த்து வேலை செய்வது என்பது அவ்வளவு சுலபம்ன்னா நினைக்கிறே?”
இப்படி அம்மாவுடன் வேலைக்குப் போவதைப் பற்றி இருபது வருடஙகளூக்கு முன்னால் பேசியது நேற்று ஞாபகம் வந்தது.
ஏன்னு கேட்கிறீங்களா?
“வேலைக்கு நான் கிளம்பறேன், ஏன்னா, பையனை எழுப்பி குளிச்சுவிட்டு அவனுக்கு கொஞசம் டிஃபன் கொடுத்து, ஸ்கூல்ல கொண்டு விட்டுவிடுங்கள், என்ன சரியா?”
”என்ன டிஃபன் செய்துருக்கே?’
“அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை,அதையும் கொஞசம் நீங்களே பார்த்துங்க, என்ன சரியா?”
”எனக்கு சாப்பாடு ஏதாவது இருக்கா?”
‘ஏஙக இப்படி கிளம்பற் நேரத்துலே ஒண்ணொண்ணா கேக்கிறீங்க, வேலை கிடைக்குமான்னு எததனை வருஷம் ஏங்கி, இப்பத்தான் கிடைச்சு இருக்கு, அதுக்குத் தகுந்த மாதிரி சரியான  நேரத்துலே ஆபிஸுக்கு போக வேண்டமா, வேலை வேற புதுசு அங்க எப்படி இருக்கோ,
சரி,சரி, பேசறதுக்கெல்லாம் நேரம் கிடையாது, பை கண்ணா, பை.”

”கண்ணைக் கட்டி காட்டுலெ விட்ட மாதிரி இருக்குங்க”, சொல்லிக் கொண்டே மாலையில் வீட்டில் நுழைந்தேன்.
“என்னங்க, இன்னைக்கு நீங்க வேலைக்கு போகலை?”.
”நான் எங்கே போறது, நீ போன பிறகு அவனை எழுப்பி குளிப்பாட்டி, டிஃபன் கொடுத்து, ஸ்கூல் கொண்டு விடறத்துக்குள்ள என்ன பாடு தெரியுமா?, எழுந்துக்கறானா, டிஃப்ன் சாப்பிடறதுக்குள்ளெ
என்ன பாடு படுத்தறான். இவனை வச்சுக் கொண்டு என்ன பாடு படப்போறோமோ தெரியலெ”
இதுக்கே நெரம் சரியாப் போச்சு, இதுலெ நான் சமையல் பண்ணி சாப்பிட்டு விட்டு எப்ப வேலைக்குப் போறது, அதனாலெ இன்னைக்கு போன் பண்ணி லீவு சொல்லிட்டேன்”.
என் கணவர் பையனைப் பற்றி புராணம் வாசிச்சார்.
“அதுசரி, ஆபீஸ் எப்படி இருந்தது?”
“அதை ஏன் கேட்கிறீங்க போங்க, ஒண்ணுமே புரியலெ, இருபது வருஷத்துக்கு முன்னாலே   படிச்சது, அதப் பண்ணிடுங்க, இத பண்ணிடுங்கன்னு எனக்கு மேலே இருப்பவர், அவர் சைனாக்காரரா
ஜ்ப்பானர்ன்னு, பேசறது வேறே புரியாம, சொல்லச் சொல்ல, ஏதோ தலையைத் தலையை ஆட்டி விட்டு வந்துட்டேன். நாளைக்கு என்ன பண்ணப்போறேன்னு தெரியல’
”ஏங்க, ஒரு நாளைக்கே இப்படி இருக்கே,அதுக்கு நான் ஒண்ணு சொல்லட்டுமா?”
“இப்படி ரெண்டு பேரும் வேலைக்குப் போனா, பையனைப் பார்த்து, அவனுக்கு வேண்டியதைச் செய்து  கொடுப்பது ரொம்பக் கஷ்டம், அதனாலெ அம்மாவையும் அப்பாவையும் துணைக்கு வரச் சொல்வோமா?
”உனக்கு ஏதாவது புரிஞ்சு பேசறயா, இல்லையா?”
“ஏங்க?”
“பின்ன என்ன உங்க அம்மாவும் தானே வேலைக்குப் போறங்க, அவங்க எப்படி வருவாங்க?”
” வேற என்னங்க பண்ணறது?”
“ஒவ்வொரு நாளும் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை பார்க்கும் போது
”நான் ஒண்ணு சொல்றேன், கேட்கிறயா?”
“சொல்லுங்க”
“கொஞ்ச நாளைக்குப் பையனை சைல்ட் கேர்ல விடுவோம்,அதுக்கு நடுவிலே உங்க அப்பாவை
கொஞ்ச நாளைக்கு வரவழைப்போம்,அப்பறமா பார்ப்போம், என்ன நான் சொல்றது சரியா?”
“பாப்போம்”
மறுநாள் காலையில் எழுந்ததும்,
”என்னங்க, பையனுக்கு காய்ச்சல் மாதிரி இருக்கு, டாக்டரிடம் போவோமா?”
“டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி காமிச்சபிறகு எப்ப நான் வேலைக்குப் போவது, பேசாம லீவு போட்டு விடவா?”
“அதச் செய்.”
மறுநாள்,
“என்னங்க திடீரென்னு வராம இருந்திட்டீங்க,”மேலதிகாரி கோபமா கேட்டார்.
“வேலைக்குச் சேர்ந்து ரெண்டு நாள் ஆகலை, அதுக்குள்ள லீவு போட்டா எப்படிங்க?”
“சாரி சார், பையனுக்கு ஜுரம், டாக்டரிடம் போனேன்,அதான் வரமுடியல, இனிமேலே இப்படி நடக்காம பார்த்துகிறேன்.”
இப்படியே தினம் ஏதாவது பிரச்சனை.
இரண்டு நாள் ஆகலை.
“எழுந்திருடா கண்ணா, ஸ்கூலுக்கு போகனும்.”
“முடியாது, நான் போகமாட்டேன்”.
“அடம் பிடிக்காதடா,அம்மா ஆபிஸ் போகணும்.”
“எனக்குப் பிடிக்கலை, நான் போகமாட்டேன்.”
இவ்வளவு சின்னப் பையனுக்கு பிடிவாதமா, கோபம் வந்தது. பளார்ன்னு ஒரு அடி. தாங்கமாட்டாமல் கீழே விழ, ஒரே அழுகை.
”அவன் இன்னைக்குப் போகமாட்டான், சரிதான் இன்னைக்கும் லீவு தான்,
இப்படியே போனால், சரிப்பட்டு வராதுங்க, அதிகாரிகிட்ட என்னால வசவு வாங்க முடியாதுங்க”.
”வேற என்ன செய்யப்போறாய்”, என் கணவர்.
”எப்படித்தான் என் அம்மா அத்தனை பெரிய குடும்பத்தில், எல்லாரையும் அனுசரித்துக் கொண்டு, வேலைக்கும் போனார்களோ, என்னாலெ ஒரு குழந்தையை வைத்துகொண்டு நிறையப் படித்து விட்டு வேலைக்கு போகணும்கிற, என்னுடைய ஆசை நிராசை ஆகிவிடுமோ தெரியலயே? எதுக்கும் அம்மாவை ஆலோசனை கேட்போம்ன்னு, அம்மாவுக்கு போன் பண்ணேன்.
“அம்மா, எப்படி உன்னால மட்டும் முடிந்தது?”
“இதுக்குத்தானே இத்தனை நாளும் ஆசைப் பட்டாய், கவலைப் படாதே, உன் ஆசை நிராசை ஆக்க நான் விடமாட்டேன்.’
“எப்படிம்மா முடியும்.”
“ஒருவாரம் பொறுத்துக் கொள், நான் ஏதாவது செய்கிறேன்.வேற ஒண்ணும் இல்லையே, வச்சுடவா?’
போனை வைத்து விட்டார்கள்.

“என்னம்மா, திடீர்ன்னு வந்து இருக்கே”, காலையில் வாசல் கதவைத் திறந்தால் அம்மா. 
“உள்ளே வந்து சொல்றேன்”.
“உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லையே”, நான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லே, நீ தானே சொன்னாய், உன்னுடைய ஆசை நிராசை ஆகிவிடுமோ, கவலையா இருக்குன்னு”.
“அதனாலெ, என்ன சொல்றே நீ”.
“வேலைக்குப் போகணும்ன்னு ஆசைப்பட்டெ நீ, அதுக்கு என்னாலெ ஏதாவது செய்யணுன்னு யோசித்தேன், நானோ வயசானவள், எனக்கு 60 வயசு ஆகப்போறது, எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு வருஷத்திலோ அல்லது ரெண்டு வருஷத்திலோ வீட்டுக்குப் போகச் சொல்லுவாங்க. அதனாலெ  பார்த்தேன், நானே கல்லூரியில் சொன்னேன் விஷயத்தை எல்லாம், அவஙகளும் சரின்னு ஒத்திகிட்டாங்க.”
“என்னம்மா சொல்றே, என்ன சொன்னெ, என்ன ஒத்திகிட்டாங்க?”
“என் பேரனை என்னை விட்டா யாரு பார்த்துப் பாங்க,அதனாலெ....”
“என்னம்மா சஸ்பென்ஸ் வைக்கிறே?, சட்டுன்னு சொல்லும்மா.”
“ஒண்ணுமில்ல, நான் என்னுடைய வேலையில் இருந்து முன்னாலேயே விலகிக்கிறேன்னு ஒரு கடிதம் கொடுத்துவிட்டு வந்துட்டேன், அவங்களும் சரின்னு சொல்லி, டாடா காமிச்சுட்டாங்க”.
“என்ன, வேலையை ரிசைன் பண்ணிட்டியா?’
“ஆமாண்டி,பொண்ணு தானே முக்கியம், அவங்க குடும்பம் தானே நம்ம குடும்பம்,அவங்க நல்லா மனசார கவலை இல்லாம இருந்தாத்தானே நாம மகிழ்ச்சியாக இருக்கமுடியும்,  அதனாலெ தான் இந்த முடிவு. என்ன உனக்கு திருப்தி தானே. இனிமே கவலை இல்லாம
வேலைக்கு போ”

 ”ரொம்பத் தேங்ஸ் அம்மா, நீ பண்ண இந்த விஷயத்தை என் ஆயுள் உள்ளவரை மறக்கமாட்டேன்.’
“அம்மா, அம்மாதான், இதுக்குத்தான் ஆசைப்பட்டாயா, என்று கேட்டாயே,ஆமாம்மா, இதுக்குத் 
தான் ஆசைப்பட்டேன்.’



புதன், அக்டோபர் 17

லாரே குகை (luray caverns)


பெரியாழ்வார் பாசுரம்.
       " சித்திரகூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
 அத்திரமே கொண்டெறிய அனைத்துலகம் திரிந்தோடி
         வித்தகனே இராமாவோ நின் அபயம் என்றழைப்ப
 அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஒரடையாளம்.'
                    பெரியாழ்வார் தன்னுடைய பாசுரத்தில், ராமனும், சீதையும்,தம்பி இலக்குவனொடு சித்திரக்கூடத்தில் இருக்கின்ற போது, அந்த சமயத்தில் காக்கை வடிவத்தை எடுத்துக் கொண்டு ஒரு அசுரன், சீதையின்
முலையைத் தீண்ட வரும்போது, அந்த சமயத்தில் பல இடங்களும் ராமன் விட்ட பாணத்தைத் தாங்க மாட்டாத காக்கை சீதையின் காலடியில் வந்து ”அபயம்”,”காப்பாற்று”, என்று விழுந்ததைப்  பற்றி கூறுகிறார்.
குப்த கோதாவரி

அந்த சித்திரக்கூடம் இந்தியாவின் மத்யபிரதேஷ் மற்றும் உத்திரப்பிரதேசம் மானிலஙளுக்கு இடையே உள்ளது. என்ன விஷேஷம்ன்னா, மந்தாகினி ஆறு அங்கு ஒடுகிறது. அங்கு தான் பரதன் இராமனின் பாதரக்‌ஷைகளைப் பெற்றுக் கொண்டு அயோத்திக்குச் சென்றான். அந்த சித்திரக்கூட்த்தில் இராமன், லக்குவணன் மற்றும் சீதை
ஆகியோர் ஒரு குகையில் மிக அதிக நாட்கள் (11 வருஷங்கள்) தங்கி இருந்தார்கள்.  அந்த இடத்திற்கு குப்த கோதாவரி என்று பெயர். மிகப் பெரிய குகை. மிக நன்றாக உள்ளது. விளக்குகள் போட்டு நன்றாக வைத்துள்ளார்கள்.
எதற்காக இதை பற்றிச் சொல்கிறேன் என்றால், அதற்கு சமமாக இந்தியாவில் வேறு எங்கும்  குகையில் மனிதர்கள் வசித்ததாக சரித்திரம் இல்லை.
அதைப்போலவே அமெரிக்காவில் வாஷிங்டன் அருகில், லாறே (luray caverns) குகை உள்ளது.


எவ்வவவு பெரிய அறை பாருங்கள்


அது 4000000 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாகச் சொல்கிறார்கள். இயற்கை அற்புதம் என்றே சொல்லலாம்.
ஏற்கனவே முன்னால் சொன்ன குப்த கோதாவரி குகையைப் போல பல மடங்கு பெரியது. அமெரிக்காவின் அற்புதம் என்றே சொல்லலாம்.
அதைப் பார்க்க நாள்தோறூம் மக்கள் வந்த வ்ண்ணம் இருக்கிறார்கள். ஒரு சர்ச் உயரத்திற்கு மாளிகை போன்ற, தரைக்கு அடியில் 4000 அடி ஆழத்தில்,10 மாடிக் கட்டிடத்திற்கு உயரம் கொண்ட, இயற்கையாக உருவான மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான கால்சியம் படிகங்கள், இன்றைக்கெல்லாம், பார்த்துக்
கொண்டிருக்கும் வ கையில், தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதனைப் பார்க்க ஒரு மணி நேரம் ஆகும்.அதனை நன்கு ரசிக்க எதுவாக
பல இடங்களில் விளக்கு அமைத்து இருக்கிறார்கள். கல்யாண மண்டபம் போன்ற ஒரு இடத்தில், குகைக்குள்ளதான், மிகப் பெரிய வாத்ய கருவி வைத்துள்ளார்கள். அமைதியான அந்த இடத்தில்
அதை வாசித்துக் காட்டும்போது என்ன இனிமையாக உல்லது தெரியுமா?
வாத்ய கருவி

வசூலித்த பணம்

wishing well
உள்ளேயே, (wishing well) ஒரு நீர் நிரம்பிய ஒரு இடத்தில், நம் ஊரில் கிணத்தில் காசு போடுவோமே,
அதே போல, இங்கேயும், நிறைய காசு பொடுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதை எண்ணி அதனை அமெரிக்காவில் உள்ள ஏழை மற்றும் அனாதை இல்லங்களுக்கு அளிக்கிறார்கள்.
அப்படி இதுவரை கொடுத்துள்ள பணம் கோடிக்கணக்கான டாலர்களாம்.
பக்கத்திலேயே வாகங்களின் அணிவகுப்பு ஒன்று உள்ளது. பல வருஷ்ங்களுக்கு முன்னால் உண்டாக்கப்பட்ட வாகனங்களை வைத்துள்ளார்கள். பார்க்க வேண்டிய ஒரு இடம்.
the garden maze

அருகிலேயே தோட்டம் ஒன்று உள்ளது. என்ன விஷேஷம்ன்னா,உள்ளே போனா வெளியே வருவது அவ்வளவு சுலபம் அல்ல். அப்படி குறுக்கு நெடுக்குமாக ஒரு கம்யுட்டர் கேம் போல
உள்ளது. அதன் பரப்பளவு ஒரு ஏக்கராம்.எட்டடி உயரத்துக்கு புல் வளர்த்துள்ளார்கள்.
காலைலே போனா,  எல்லாத்தையும் முடித்து வர மாலை ஆகிவிடும்ன்னா பார்த்துக் கொள்ளுங்கள்.
என்ன ஒரு சங்கடம் தெரியுமா?
நிறைய பணம் வசூல் பண்ணூகிறார்கள்.
அமெரிக்கா போகும் பொது, ஒரு தடவை பார்த்துவிட்டு வாருங்கள்
LOCATION: LURAY CAVERNS, NEXT TO SHENANDOAH NATIONAL PARK,

                       VA 22835 U.S.A