ஞாயிறு, ஜனவரி 15

சாதனம், சாத்தியம் என்ன வித்தியாசம்?

 

சாதனம், சாத்தியம் என்ன வித்தியாசம்?

18122011day2-2
ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டது
ஒரு ஓட்டப்பந்தய வீரன் என்ன எதிர்பார்ப்பான்?
ஓட்டப் பந்தயத்தில் முதலாக வரவேண்டும். முதல் பரிசு வாங்க வேண்டும்.
எல்லோரையும் விட தான் முன்னதாக இருக்கவேண்டும். இதுதான் அவனின் சாத்தியம்.

இந்த சாத்தியத்தை அடைய அவன் எந்த சாதனத்தை பயன்படுத்துவான்?
தினமும் காலையில், மாலையில் ஓடி, ஓடி பயிற்சி எடுப்பான்.உடல் நன்றாக இருக்க சரியான ஆகாரத்தை எடுத்துக் கொள்வான். இந்த வருடம் முதலாக வந்து விட்டோம் என்று சோம்பி இருக்கமுடியாது.
அடுத்த வருடம் இதைவிட அதிகமான வேகத்தில் வர முயற்சி செய்வான்.
எனவே சாத்யத்தை (முதன்மை இடம்) தக்கவைக்க, சாதனத்தை (பயிற்சிகளை) நிறுத்தமுடியாது.
ஸ்ரீரங்கத்தில் இருபது நாட்கள் வைகுண்ட ஏகாதசி உத்சவம் நடக்கிறது. அதற்காக வெளியூர்களில் இருந்து நிறையப் பேர் வருவார்கள். அவர்கள் எத்தனை நாட்கள் இங்கு இருக்கமுடியும். ரங்கனை ஆசைதீர அனுபவிக்கவேணும் என்று நினைப்பார்கள்.
இது சாத்தியம்.

ஆனால் எத்தனை நாட்கள் இருக்க முடியும்?
உத்சவம் முடிந்து விட்டால் ஊருக்குத் திரும்பித்தான் ஆகவேண்டும் இல்லையா?
காரணம் கேட்டால்
"நிர்பந்தம், சம்பாதிக்க வேண்டாமா? எத்தனை நாட்கள்தான்
இன்னொருவருக்கு (நண்பர்கள் எத்தனை நாட்கள் தான் சாப்பாடு போடுவார்கள்?)
பாரமாக இருக்கலாமா?"
என்றெல்லாம் பேசுவார்கள்.
ஆக சாத்தியத்தை அடைய ஆசைதான்.

ஆனால் சாதனம் கஷ்டமாக இருக்கிறது.


ஒருவன் ஏழு தலைமுறைக்கு, தந்தை சொத்து சேர்த்து வைத்ததை, முறையாக செலவழிக்காமல் வீணடிப்பான். சொத்துதான் இருக்கிறதே, சாப்பாடுக்கு கவலை
இல்லையே, அடையே வேண்டிய சாத்தியமான வைகுந்தத்திற்கு அடைய
முயற்சி எடுக்காமல், சாதனத்திலேயே முழு வாழ்க்கையை வீணடித்துவிடுவான்.

ஆம், நம்முடைய லட்சியம், சாத்தியம் என்ற, புருஷார்த்தம் என்ற, முக்தியை, திரும்பி வராத,பகவானை அடைவதில் இருக்க வேண்டும்.

அதற்காக ஜோதிஷ்டோமய யாகத்தை (சாதனம்) செய்யலாம். நம்முடைய புண்யம் உள்ளவரை வைகுந்தத்தில்  இருப்போம். அது தீர்ந்த பிறகு கீழே விழவேண்டியதுதான்.
பிறகு எப்படித்தான்திரும்பி வராத வைகுந்தம் என்கிற ஆனந்த மயமான இடத்தை
(சாத்தியத்தை) அடைவது?
இயற்பியலில் வெப்ப நிலையை அளக்க வெவ்வேறு  காலங்களில் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள். அதில் பயன்படுத்தக் கூடிய சாதனம்,வெப்பத்தை அளப்பதற்கு பதிலாக அதுவே வெப்பத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள்.
பல்வேறு ஆராய்ச்சிக்கு பிறகு பல திரவங்களைப் பயன்படுத்திய பிறகு,
பாதரசத்தை

வெப்பமானிகளில் பயன்படுத்தினார்கள்.

சாத்தியத்தை அடைந்தார்கள்.
அதே போல, ஒரு சமயம்,
"உலகத்தை (சாத்யம்) நான் நகர்த்தி விடுகிறேன். ஆனால் நான் நிற்பதற்கும், நகர்த்துவதர்க்கும்
எனக்கு கோல் (சாதனம்) கொடுங்கள"
என்றான் ஒரு அறிஞன்.
அதேபோல பல காலமாக இறைவனை அடைவது என்ற சாத்தியத்தை அடைய
பல உபாயங்களை சம்ஸ்கிருத வேதங்களும், திராவிட வேதங்களும் நமக்கு சொல்லி இருக்கின்றன.
கர்ம,ஞான,பக்தி யோகங்கள் மூலமாக இறைவனை அடையலாம் என சமஸ்கிருத வேதங்கள் சொல்லி இருக்கின்றன. உபாசன மூலம் பகவனை அடை. தபஸ் மூலம் பகவானை அடை என்கிறது சம்ஸ்கிருத வேதங்கள் சொல்கின்றன.
இது அப்படி என்றால் ஓட்டை படகில் பயணம் செய்வது போல என்கிறார்கள்.
ஆனால் திராவிட வேதமான திவ்யப் பிரபந்தங்கள், ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள்
அவ்வாறு சொல்லாமல்,
           "சாத்யத்தையே சாதனமாக கொள்"
           "அவனையே சரண் என்று அடைந்து விடு, அவனே   

            உன்னை நோக்கி வந்து   உன்னை ஆட்கொள்வான்"
           "அவனை அடைந்த பிறகு (சாத்தியத்தை), முயற்சி 

            (சாதனம்) செய்"
          "நாம் ஒரு அடி அவனை நோக்கி எடுத்து வைத்தால், அவன் நான்கு அடி நம்மை   நோக்கி வருகிறான்"
என்றார்கள் ஆழ்வார்களும் ஆசார்யர்களும்.
அதில் முதன்மையானவர் இராமானுஜர்,வேதாந்த தேசிகர், கோயில் மணவாள முனிகள் போன்றவர்கள்.
ஆம், நாமும் அவனையே சாதனமாகக் கொண்டு,அவனையே சாத்தியம் என்று அடைவோம்
உய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக