வியாழன், ஏப்ரல் 15

நேர்காணல்--ஓர் அனுபவம்.
"என்ன அப்பா, எல்லாம் தயார் செய்து விட்டாயா?'
என் மகள் அமெரிக்காவில் இருந்து ஸ்கைப்பில் கூப்பிட்டு மேலே கண்டவாறு என்னை வினவினாள்
"என்ன தயாரா?'
"டெலிஃபோன் ந்ம்பரை ஒரு தடவை சொல்லு"
"9737943834"
"ஒகே"
"வீட்டு அட்ரஸை சொல்லு"
"எல்லாம் எனக்குத் தெரியும்"
"அதெல்லொம் கிடையாது, ஒரு தடவை சொல்லு"\
"ஏண்டி என்னைத் தொந்தரவு செயயரெ?"
"உனக்கு தெரியாது அம்மா,துளி தப்பாச் சொன்னாலும் கிடைக்காது அம்மா,ரொம்ப க்வனமாக இருக்கணும்"
"சரிடி,சொல்லரேன். அட்ரஸை சொன்னேன்.
"சரியாக உள்ளது, இன்னிக்கு இது போதும்,நாளைக்கு மறுபடியும் கேட்பேன், ஞாபகம் வைத்துக் கோள்ளவேண்டும்,என்ன சரியா"
.......

மறுநாளும் காலையில் வழக்கம் போல் என் பெண் ஸ்கைப்பில் கூப்பிட்டாள்.எல்லா விஷயங்களைப் ப்ற்றிப் பேசிவிட்டு நேற்றைய தினம் விட்ட இடத்திற்கே வந்தாள்.
"என் வீட்டுக்காரர் அனுப்பிய விஷ்யங்களை ப்த்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்..அவர் வேலை பார்க்கும் விவரங்கள் எல்லாம் கேட்பார்கள்.எனவே அவற்றை ஒரு தடவைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்
"எல்லாம் சரிடி,நாங்கள் என்ன படிக்காதவர்களா? உன் அப்பா ஒரு கல்லூரியில் வேலை பார்த்து விட்டு ரிடையர் ஆனவர்,நானோ கல்லூரியில் வேலை பார்க்கிறேன்.என்ன சின்னக் குழந்தைகள் மாதிரி சொல்கிறாய்' என்று அவளைக் கோவித்துக் கொண்டேன்
நேர் காணல் காண்பத்ற்கான நாள் நெருங்க நெருங்க எனக்கு ப்யம் பிடித்துக் கொண்டது."என்மகள் அபி" படத்தில் வரும் கதா பாத்திரம் பிரகாஷ்ராஜ் மாதிரி, நானும் எனது வீட்டுக்காரரும் எந்நேரமும் இதைப் பற்றியே சிந்தித் கொண்டிருந்தோம்.ஏதாவது தப்பு செய்து பெண்ணிடம் வாங்கிக் கட்டிக் கொள்வோமோ என்ற பயம் வேறு ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த்து.அது சரி, இவள் எதற்காக இத்தனை பீடிகை போடுகிறாள்? என்று நினைக்கின்றீகளா.காரணம் உள்ளது,அதைக் கடைசியில் சொல்கிறேன்.
...............
இன்றைய தினம் மாலை 2 மணிக்கு நேர் காணல்.அதற்கு வசதியாக என் உறவினர் வீட்டில்த் தங்கிக் கொண்டோம்.அவர்க்ளே அவர்கள் காரில் நேர் காண்ல் நடைபெறும் இடத்திற்குக்
கொண்டு விட்டனர் இன்ட்ர்வியு நடைபெறும் இடத்தில் என்ன இவ்வளவு கூட்டம் எனத் திகைத்து விட்டோம்,அப்புறம் தான் தெரிந்த்து ஒவ்வொரு அரைமணிக்கும் பல பேர்களுக்கு இன்டர்வியு ந்டக்கவுள்ளது என்பது.எல்லொரையும் வரிசையாக உட்கார வைத்த்னர்.
எங்க்ள் நேரமும் வந்தது இருவர் பெயரையும் கூப்பிட்ட்னர்.எல்லொ கடவுளையும் வேண்டிக்கொண்டுஇன்ட்ர்வியு அதிகாரி முன் போய் நின்றோம்.
"Hello.R you Mr.krishnamoorthy and Mrs.Krishnamoorthy?"
"நீங்கள் தானே மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மிஸ்ஸ கிருஷ்ண்முர்த்தி"
என்று ஆங்கில்த்தில் வினவினார்.
"ஆம்",என்று எனது கணவர் ஆங்கிலத்தில் பதில் அளித்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் நாஙகள் தயாராக இருந்தோம்.
நிறையக் கேள்விகள் கேட்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்போடு அடுத்த கேள்விக்குத் த்யாரானோம்.
அங்கு தான் க்ளைமாக்ஸ.
இது வரையில் எல்லொருக்கும் பல ச்ந்தேகங்கள் வந்திருக்கும்.இவர்கள் என்ன வேலைக்குப் போகப்போகிறார்கள்.இந்த வயதில் அவர்களுக்கு என்ன வேலை கிடைக்கும்,ஏற்கனவே இவர்களில் ஒருவர் கல்லூரிப்பேராசிரியராகப் பணிபுரிந்து ரிடையர் ஆனவர்.ம்ற்றொருவர் கல்லூரியில் வேலைபார்க்கிறார்.என்ன இவர்கள் 'இன்டர்வியு' என்று கதை சொல்கிறார்களா என்றுச் சொல்லத் தோன்றுகிறதா."ஆம்" "இன்டர்வியு" என்பது உண்மைதான்,ஆனால் வேலை என்று எங்காவது சொன்னேனா?விஷ்யத்திற்கு வருவோம்.
"give your passports"என்று அதிகாரி கூறிய உடன் தான் மீண்டும் சுயநினைவுக்கு வந்தோம்.
எங்கள் பேப்பர்களை எல்லாம் பார்த்துவிட்டு "oh,you are retired from a college? what is your pension?."என்று என் கணவரைப் பார்த்துக் கேட்டார்.
என் கணவர் பதில் கூறியதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார்.
"ok,Best of luck".வேறு ஏதேனும் கேள்வி கேட்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது"next". அடுத்த ந்பரைக் கூப்பிட ஆரம்பித்தார்,எங்களுக்கோ ஆச்சர்யம்,"இவ்வளவுது தானா கேள்விகள்?" என்று.பிரகாஷ்ராஜ் கதைதான் போங்கள்
"எத்தனை நாட்கள் கஷ்ட்ப்பட்டு தயாரித்தோம்,ஒரு கேள்விகள் கூடக் கேட்கவில்லையே என்று பேசிக் கொண்டே வெளியில் வந்தோம்அருகில் உள்ள் பென்ச்சில் அமர்ந்து இருந்த நபர் எங்களைப் பார்த்து,"உங்கள் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டார்கள் என்றால் உங்களுக்கு விசா நிச்சயம் என்று அர்த்தம் மகிழ்ச்சியாகப் போங்கள் " என்றார்.
அப்போது தான் மூச்சு வந்த்து.ஆம்,இரண்டு நாட்களிள் எங்கள் வீடு தேடி அமெரிக்கா செல்வதற்கான விசா வந்தது.அப்போதுதான் நாங்கள் நிம்மதியானோம்.இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும்,இதுவரை நான் சொன்னது அமெரிக்கா செல்ல விசா பெறுவதற்கான இன்டர்வியுக்கு த்யார் செய்த விவரம் என்பது.










"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக