ஞாயிறு, ஆகஸ்ட் 15

Jk effect

 


ராஜ கோபுரத்தின் உள்ளே ஏன் குளிர்சியாக உள்ளது?

ராஜகோபுரத்துக்கு அடியில என்ன இவ்வளவு பேர் கூட்டமாக உட்காந்து இருக்காங்க!. மனைவிக்கு சந்தேகம்.
கேட்டுத்தான் பாப்போமேன்னு தீர்மானம் பண்ணிட்டாங்க போல.
"என்ன சார் அப்படிக் கேட்டுட்டீங்க. கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாருங்களேன். இவ்வளவு குளிர்ந்த காத்து உங்க வீட்டு ஏசியுல கூட கிடைக்காது!!!"
இது உட்காந்து இருப்பவரின் பதில்.
"ஆமாம், நின்னுண்டு இருக்கிற கொஞ்ச நேரத்துலேயே இவ்வளவு கூலா காத்து வீசுது பாருங்க அத்தான்"
மனைவியும் நானும் ராஜ கோபுரத்தின் அருகே இருக்கும் 10 ரூபாய் கடையில் சாமான்கள் வாங்க வந்தபோதுதான் மேற்கண்ட சம்பவம் நடந்தது.  அதுல தான் என் மனைவி, இந்த கூலான விஷயத்தை பார்த்துட்டு,
"அது என்ன எல்லா ஊர் கோபுரத்துக்கு அடியிலும் அவ்வளவு பேர் உட்காந்து இருக்காங்கன்னு ரொம்ப நாளாகவே யோசித்துண்டு இருந்தேன். இன்னைக்கு நேராகவே அனுபவிச்சுட்டேன். அது ஏங்க அங்க மட்டும் அவ்வளவு  கூலா இருக்கு?"
"ஆமாம், நீ கேட்கிறதும் சரி தான். எல்லா கோபுரத்துக்கும் அடியிலும்  ஜில்லுன்னு இருக்க ஒரு காரணம் இருக்கு. அதுக்கு J and K effect ன்னு பேர்."
"அப்படின்னா?'
"சொல்றேன்.
ஒரு வாயு அதிக அழுத்தமுள்ள இடத்தில் இருந்து குறைவான அழுத்தமுள்ள இடத்தை நோக்கி பயணிக்கும் போது அதன் வெப்பநிலை குறையும். இதுவே ஜூல்-கெல்வின் விளைவின் தத்துவம். (முழுமையாக படிக்க கூகுளில் தேடவும்)
இது தான் கோபுரங்களின் உள்ளே நடக்கிறது.
கோபுரத்தின் வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் போது அழுத்த வித்தியாசம் ஏற்பட்டு வெப்பநிலையைக் குறைக்கிறது.
அதனால் தான் கோபுரங்களின் உள்ளே குளிர்ந்த காற்று வீசுகிறது.புரிகிறதா?"
"புரிஞ்சுடுத்துங்க."

 

திங்கள், பிப்ரவரி 22

தண்ணீரில் அப்பளம் பொறிக்க!!!!

 பிஸிக்ஸ் அவ்வளவு ஈஸீயா?

இல்லையா பின்ன!!!!

நிறைய பேர் பிஸிக்ஸ் கஷ்டமான பாடம். அத யாரு படிப்பாங்கன்னு அது இருக்கிற பக்கம் கூட தலை வச்சு படுக்கமாட்டாங்க. 

அப்படியெல்லாம் இல்லை, ரொம்ப ஈஸீ. என்னுடைய இந்த தலைப்புல நிறைய ரொம்ப ஈஸீயாப் புரியும்படி நிறைய எழுதி இருக்கேன். அந்த மாதிரி தான் இப்ப சொல்லப் போறதும். பயப்படாம படியுங்கள். பிஸிக்ஸ் உங்கள பிடிச்சுக்கும்.



 அப்பளம் தண்ணீர்ல பொறிக்க முடியுமா? 

ழுடியும்!!!!

இன்னைக்கு இந்த தலைப்பில தான் எழுதப் போறேன்.

என்ன கிண்டல் பண்றேன்னு நினைக்கிறீங்க தானே!.

அதான் இல்லை.

தண்ணில அப்பளத்தப் போட்டா ஊறிப் போயிடாதான்னு சொல்றது காதுல விழறது. 

ஊறித்தான் போகும்! அப்ப எப்படி சார் தண்ணீர்ல பொறிக்கிறது.

அதுக்கு முன்னால அப்பளத்த எதுல பொறிக்கிறாங்கன்னு பாருங்க.

எண்ணெயில் தானே பொறிக்கறாங்க. எண்ணெய், அப்பளம் பொறிக்கிற போது அதன் வெப்பநிலை கிட்டத்தட்ட 300 டிகிறி செல்சியஸ். அதனால ஈஸீயா பொறிக்க முடியுது.

தண்ணியின் கொதிநிலை 100 டிகிறிக்கு மேல உயர்த்த முடியாது.எவ்வளவு வெப்பம் கொடுத்தாலும் 100 டிகிறிக்கு மேல உயறாது. 

அப்ப எப்படி 300 டிகிறிக்கு உயர்த்தமுடியும். 

அடுத்த பகுதியில்!!!

சனி, மார்ச் 24

புராணம்

புராணம்


“நாளைக்கு நாம குடும்பத்தோட வெளியூர் போகப்போறோம், போற இடத்துல எல்லாம் சாப்பாடு கிடைக்குமான்னு தெரியல, அதனால சாப்பாடுக்கு என்ன பண்ணப்போற கோமளி?”
தன் மனைவியிடம் ராமநாதன், வெளியூரே அதிகமா போகாத மனுஷன், அடுத்த நாள் சொந்த ஊருக்கு செல்வதற்கு என்ன சாப்பாடு எடுத்துச் செல்வது பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
அவர் எச்சக்கையால காக்கா ஓட்டாதவர். போயிட்டு திரும்ப நாலு நாளாவது ஆகும். நாலு நாட்கள் ஹோட்டல்ல சாப்பிடுவார்ன்னா நினைக்கிறீங்க, சே,சே, அந்த மாதிரி நல்லதெல்லாமா ராமநாதன் செய்வார்.
கோமளிக்கு யாரத்தெரியுமோ தெரியாதோ,  வீட்டுக்காரர்  பத்தி நன்னாத் தெரியும். அவர்  எள்ளுன்னா இவங்க எண்ணையா இருப்பாங்க. 
“நான் அதப்பத்தி நன்னா யோசிச்சுடேங்க, நாலு நான் என்ன, ஒரு வாரம் ஆனாலும் கவலைப்பட வேண்டாங்க, நா பண்ற சாப்பாடு கெட்டே போகாதுங்க”
“அத எப்படி பண்றது எல்லாம் உனக்குத் தெரியுமா?
“என்ன அப்படி கேட்டுடீங்க? என்ன எனக்கு சமையலே பண்ணத்தெரியாத மாதிரி சொலறீங்க. எத்தன வருஷமா என் சமையல சாப்பிடுறீங்க. நான் பண்ணற சமையல எத்தன பேர் மெச்சறாங்க, தெரியுமா?”
 ( மனசுக்குள்ள ராமநாதன் தலையில் அடித்துக் கொள்கிறார், “இவ சமையல நீ மட்டும் தான் மெச்சிக்கணும். அன்னைக்கு ஹல்வா கிண்டறேன்னு சொல்லிட்டு, என்னிடம் இலுப்பசட்டிய கொடுத்து சட்டியில இருந்ததை நா எடுக்கப்பட்ட பாடு எனக்குத் தானே தெரியும். இப்ப என்ன பண்ணப் போராளோ?”
“அப்படி என்ன சாதம், ஒருவாரம் ஆனாலும் கெட்டுப்போகாதது?”
“ ஃபிரிட்ஜ் எல்லாம் இல்லாத காலத்திலேயே ஃபேமஸ் ஆனதுன்னா பாத்துக்கங்க. வெளியே வெச்சு இருந்தாலும் கெட்டுப் போகாதது”
“உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் அதில் உண்டுங்க.”
“அத சாதமா வடிக்கறதே. ஒரு கலைங்க. புதுசா கல்யாணம் ஆன தம்பதிகள் மாதிரி பிண்ணிப் பிணைந்து இருக்ககூடாது. கையில ஒட்டக்கூடாது. குக்கர்ல வைக்கற போது அதிகமா விசில் சத்தம் வராம பாத்துக்கணும். வெளியே எடுத்தவுடன் உடனே பயன்படுத்தாம கொஞ்ச நேரம் ஆற உடணும். அது மட்டும் இல்லிங்க, நீங்க பெரிய அம்பானி மாதிரி பணக்காரனா இருந்தாலும் நல்லெண்ணெய் தாங்க பயன்படுத்தணும், வேற எந்த எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாதுங்க. வேணா நாட்டுசெக்கு எண்ணெய்ன்னு எங்க பாத்தாலும் பீத்திக்கிறாங்களே, அந்த நல்லெண்ணெய் பயன்படுத்தலாங்க. இந்த ஆகாரம் ஏகபத்தினி விரதம் கொண்டவன்.”
“அது மட்டும் இல்ல,இந்த சாதத்துல கலக்குறதுக்குன்னு தனியா ஒரு பேஸ்ட்ட முன்னாலேயே தயார் பண்ணி வச்சிக்கணும்ங்க.”
“டூத் பேஸ்டா, அது வேறயா?'
'ஆமாங்க, டூத் பேஸ்ட் இல்லீங்க, இத தயார் பண்றதுல தான் ஒரு பொண்ணோட சாமர்த்தியம்  இருக்கு”
ராமநாதன் மனசுக்குள், “அது தான் உனக்கு கிடையாதே”
“அடுத்து புளிங்க.  நேற்று முளைத்த தீபா பேரவை போல புதுப்புளி கூடாதுங்க!  கலைஞர் போன்ற பழம் புளியே இது ஏத்துக்குங்க. கருப்பா இருக்குற புளிய தண்ணி கலந்து நன்னா கரச்சு கெட்டியாப் பண்ணிக்கணும். தேவைக்கு ஏற்ப நல்ல காரசாரமான. குண்டு மிளகா, நிலக்கடலை ,பெருங்காயம்,  கட்டியா இருந்தா உசிதம்,  கொஞ்சம் வெந்தயம், கட்லப்பருப்பு ,விரளி மஞ்சள பொடி பண்ணி  நன்னா காய்ந்த  நல்லெண்ணய்ல போட்டு வதக்கிட்டு, முன்னால சொன்ன கரச்ச புளிக்கரைசல அதுல ஊத்தி நன்னா கொதிக்க விடணும்.  பொறுமைதாங்க முக்கியம்.  கொதிக்க கொதிக்க, நன்னா சுண்டணும், விழுது மாதிரி கெட்டியா வரை கொதிக்க விடணும். நன்னா ஆறின பிறகு, முன்னால தனித் தனியாக ஒட்டாம இருக்குற சாதத்தில கொஞ்சம், இந்த விழுத போட்டு மேலோட்டமா களறனும். அழுத்தக் கூடாதுங்க. தனித்தனியா உதறி உதறியா, லைட் மஞ்ச கலர்ல சாதம் நல்லெண்ணெய் வாசனையோட மணக்க வரதப் பார்க்கறச்சேயே சாப்பிடணும் போல இருக்குங்க.”
“இதுக்கு பேரு ஃபிரைடு ரைஸ்ன்னு சொலவாங்களா கமலி?”
“இத எங்க ஊர் இன்னம்பூர் பெருமாள் கோவில் உற்சவத்தில் அப்பு மாமான்னு ஒருத்தர் பண்ணுவார் பாருங்க, அதுக்கு அடிதடியே நடக்கும்ன்னா பாத்துக்குங்க!!!!
“பெருமாள் கோவில்ல ஃபிரைடு ரைஸ் பண்ணமாட்டாங்களே?”
“ஆமாங்க, இந்த சாதத்துக்கு புளியோதரைன்னு பேருங்க!!!!”
“சே, இத்தன நாழி அதப்பத்தி தான் பேசிண்டு இருந்தியா? நான் என்னவோ புது டிஷ் எதேயோ சொலறேன்னு நினைச்சேன்.”
“ஆமாங்க, இந்த புளியோதரைய ஒருவாரம் வச்சுருந்தா கூட கெட்டுப்போகாதுங்க. அத விட அடுத்த நாள், இதுல தயிரை விட்டு சாப்பிட்டுப் பாருங்க, சூப்பரா இருக்கும்.”
“போதும் உன் புளியோதரை புராணம். இத நீ இத்தன வருஷத்துல ஒரு நாள் கூட நம்ம. வீட்டுல பண்ணினது இல்லையே?”
“”ஆமாங்க, இப்பத் தான் அடுத்த வீட்டு லக்ஷ்மி கிட்ட எப்படி பண்றதுன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேங்க.”
“அப்ப நாங்கள்ளாம் எலின்னு சொல்லு”
“அப்படின்னா என்னங்க?”
“ புதுசா எதாவது மருந்து தயாரிக்கிறவங்க, அது சரியான மருந்தானான்னு எலிகளுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணுவாங்களாம். அது மாதிரி, நீ பண்ணற புளியோதரைக்கு நாங்க தான் எலின்னு சொல்ல வரேன்!!!!”
“!,!,!,!”
“புளியோதரையும் சோறு, பொருத்தமான சாம்பாறு” ன்னு சொலவாங்களே, அதுமாதிரி இருந்தா சரி!!!!!















சனி, மார்ச் 10

ராமானுஜா அனு யாத்திரை :நைமிசாரண்யம்.


நைமிசாரண்யம்.

 பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள்?  ,
விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை நிலை,
திருபாற்கடல் ஒரு நிலை, மண்மீது உழல்வாய் என்று அவதாரங்கள் நிலை, 
இவற்றுள் எங்கும் மறைந்து உழல்வாய் என்ற அந்தர்யாமி நிலை. இந்த ஐந்து நிலைகளில்  எளிமையான் நிலை அர்ச்சாவதாரம் என்ற அர்ச்சை நிலை. 
என்னன்னு கேட்கிறிங்களா?
பாருங்க, வைகுந்த பெருமானைப் போய் உடனே பார்த்துவிட்டு வரமுடியுமா?
யாரை வேணா கேளுங்க,108 திவ்ய தேசத்தை பார்த்தாச்சா, அப்படின்னு?
வைகுந்தம், திருபாற்கடல் இவற்றைப் பார்த்தாச்சா?-ன்னு கேளுங்க. என்ன பதில் வரும்?
வராது!!!
வைகுந்தம் போய் விட்டு வந்து
   "நாம் வைகுந்தம் போய்விட்டு வைத்தேன், நீங்க பார்த்தாச்சா?" 
என்று சொல்ல முயுமா? அதுசரி, திருபாற்கடலைப் போய், பெருமாளைப் பார்த்துவிட்டு  பாற்கடலில் நீந்திவிட்டு வந்தேன்னு சொன்னா யார் நம்புவாங்க.
அந்த இரு நிலைகளும் இந்த உடலோடு போய் பார்க்க முடியாதுன்னு 
எல்லாருக்கும் தெரியும். அதுசரிய்யா ராமன், கண்ணன், போன்ற அவதாரங்களை பார்த்தேன்னு சொன்ன, நாம என்ன கேட்போம், "என்ன சினிமா பார்த்தியா?" 
அப்படின்னு தானே கேட்கத் தோன்றும். இல்லையா பின்னே? அவதாரங்கள் எல்லாம்  நம்ம காலத்திலேயா நடந்தது? காலத்தால் போகமுடியாத நிலைகள் அவை  என்ன அவதாரங்கள் நடந்த இடமான அயோத்தி, மதுரா, துவாரகா போன்ற  இடங்களைப் போய் பார்த்து அனுபவித்து விட்டு வந்து மகிழலாம்.
"நான் பெருமானை நேத்தி ஏன் கனவுல வந்தார்" என்றும், நமக்குள்ளே 
உள்ளார் என்று சொல்லமுடியுமா? ஆழ்வார்கள் எல்லாம் தான் ஏன் மனதுக்குள் பெருமான்  வந்தார் என்று சொல்ல முடியுமே தவிர, நம்மைப் போல் உள்ளவர்கள், ஏழைகள் 
 "இன்னிக்கு என்ன சமையல் பண்ணே? என்ன நகை வாங்கினே?" என்று சொல்ல  முடியுமே தவிர பெருமாள் நமக்குள்ளே உள்ளார் என்று சொன்னால் யாரும் நம்பாட்டார்கள்.
இப்படி பெருமானின் ஐந்து நிலைகளில், நான்கு நிலைகள் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைகள்.
அப்ப ஜந்தாவதான நிலை அர்ச்சாவதார நிலை தான் நமக்கு ஏத்த நிலை.
திருமங்கைஆழ்வார் சொல்றாராம், ஜீவன் இந்த உடலோட வைகுந்தத்துக்கு  போகமுடியாதாம், அது இந்த நாட்டிலேயே இல்லை, போனா திரும்பி வரமுடியாதாம், 
இப்படி இருக்கும் போது தரையில் கிடக்கும் முயல் மாமிசத்தை விட்டு, ஆகாயத்திலே  போற காக்கை மாமிசத்துக்க்கு ஆசைப் படுவது போல இருக்குன்னு சொல்றார். முயல் மாமிசம் என்பது அர்ச்சையாம், காக்கை மாமிசம் என்பது வைகுந்த்தமாம்.
அப்படி பெருமை கொண்டது அர்ச்சாவதாரம் என்கிற விக்கிரஹ ருபத்தில் நிலை.
ஆம்,
அரச்சாவதாரம் என்ற நிலையில் எல்லா திவ்ய தேசங்களிலும் ஆழ்வார்களால் பாடப்பட்டு இருக்கிறார். ஆனால் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் வரை அரச்சை ரூபத்தில் கூட காணமுடியாது. இந்த ஊரையே ஆழ்வார் பாடியுள்ளார் என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.
ஆம், திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் இந்த திவ்ய தேசத்தைப் பற்றி பாடியுள்ளார். 

இப்ப நாம் அதிகமா கேட்பது, “பூவி அதிகமா சூடாகிக்கொண்டே வருது” “ஓசோனில் ஓட்டை விழுந்து விட்டது.”
அதனால என்ன ஆகும?
கண்ட நேரத்துல மழை பெய்யும், வட துருவ, தென் துருவ பனி உருகி பூமியின் சில பகுதிகள் முழுகிவிடும், கடல் பொங்கி சுனாமி வந்து நிறைய பேர் இறந்துவிடுவார்கள், இப்படி பயமுறுத்தும் விஷயமாக நிறைய கேட்கிறோம் இல்லையா?
உலகத் தலைவர்கள் ஒன்று கூடி இத தடுக்க என்ன பணறதுன்னு மூளைய கசக்கறாங்க!!! முக்கியமா காடுகள அதிகமா அழித்துட்டோம், அதனால காடுகள வளர்க்க வேண்டும் அப்படின்னு தீர்மானம் போடறாங்க.
இத நமக்கு உணர்த்துவதற்கு என, பெருமான் காடு ரூபத்திலேயே இருக்கற திவ்ய தேசந்தான் நைமிசாரண்யம்.
  ஊனிடைச் சுவர்வைத்துஎன்புதூண்நாட்டி
      உரோமம் வேயந்துஒன்பது வாசல் 
  தானுடைக் குரம்பைபிரியும் போது
      உன்தன் சரணமேசரணமென்றிருந்தேன் 
  தேனுடைக் கமலத் திருவினுக்கரசே
      திசைகொள்மாநெடுங்கடல்கிடந்தாய்
  நானுடைத் தவத்தால்திருவடியடைந்தேன்
      நைமிசாரணியத்துள் எந்தாய்!!!
உன்னைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் வாழ்க்கையை எப்படியெல்லாம் அனுபவித்து விட்டேன், என்று 10பாசுரங்களால் பாடி, நைமிசாரண்யத்துக்கு வந்து உன் திருவடி அடைய வேண்டும் என்று பிராரத்திக்கிறார்.
மனிதப் பிறவியில் ஒருதடவையாவது நைமிசாரண்யத்துக்கு வந்து அவன் சரணம் அடையவேண்டுமாம்.
அது மட்டுமா,
நைமிசாரண்யம் காட்டில் ரிஷிகளுக்கு தொல்லை கொடுத்த அசுரர்களை ஒரு நிமிஷத்தில் திருமால் அழித்தார், அதனால் இந்த இடம் நைமிசாரண்யம் எனப்பெயர் பெற்றது.
நிமிஷம் என்ற ஒரு வகையான புல் எனப்படும் தர்பை இங்கு அதிகமாக வளர்வதால் நைமிசாரண்யம் என்றும் பெயர் பெற்று இருக்கலாம்.
தவம் செய்ய சிறந்த இடம் எது என்று நான்முகனிடம் முனீவர்கள் கேட்க, அவர் ஒரு சக்ரத்தை கொடுத்து அதன் வெளிப்பகுதியான நேமி எந்த இடத்தில் தட்டி நிற்கிறதோ அந்த இடம் தவம் செய்ய சிறந்த இடம் என்று சொல்ல,அது இந்த காட்டில் நிற்க, அதனால் நைமிசாரண்யம் என்று பெயற் பெற்றது.

 ரோமஹர்ஷணர் இங்கு அமர்ந்து கொண்டு புராணம் சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் இங்கு வந்த பலராமரை கவனிக்கவில்லை. கோபம் கொண்ட பலராமர், தன் கலப்பையால் அவரைத்தட்ட அவர் இறந்து விடுகிறார். பக்தர்கள் வருத்தப்பட பலராமரும் ரோமஹர்ஷணரின் புதல்வர் ஸுதருக்கு புராணகதைகளை இனிமையாக சொல்லிக்கொடுக்கும் கலையை அவருக்கு அருளினார்.அதற்குப் பிறகு ஸுதர் இங்கு அமர்ந்து கொண்டு 18 புராணங்களையும் சௌனகர் போன்ற ரிஷிகளுக்கு அருளினார் என்கிறார்கள்.
இங்குள்ள கோமதி நதிக்கரையில் 88000 ரிஷிகள் ஜ்ஞானஸத்ரம் புரிந்தாரகளாம். ராமன் இங்கு தான் அஸ்வமேத யாகம் செய்தாராம்.








இங்குள்ள சக்கர தீர்த்தத்தின் மையப்பகுதியில் ஊற்றுப்போல நீர் வழிந்துகொண்டேயிருக்கும். இதன் வெளிப்பகுதியில் தான் நாம் நீராடவேண்டும்.
இன்னும் அதிக பெருமைகள் வாய்ந்த நைமிசாரண்யம் நாங்க வேளுக்குடி ஸ்வாமிகளின் யாத்திரையின் கடைசி திவ்ய தேசம்.
சின்ன ஊர் தான், ஆனால் அதிக பெருமை கொண்ட ஊர்.
விடியற்காலையில் வந்து சேர்ந்தோம். எங்கள் தங்குமிடத்தில் சாமானகளைப் போட்டுவிட்டு, கோமதி ந்திக்கரைக்கு ஸ்நானம் செய்யக் கிளம்பினோம். இருட்டாக இருந்ததால் ஆட்டோவை ஏற்பாடு செய்து கொண்டோம். ஆனால் கொஞ்சம் பொறுமை காத்தால், எல்லா இடங்களுக்கும் நடந்தே போயிடலாம்.
அருகிலேயே இருந்தது கோமதி  நதி. .ஸ்நானத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தோம்.
ஸ்வாமிகள் ஷேத்ரத்தைப் பற்றி உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். முடிவில் அங்கேயே எல்லோருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது. அவர்கள் சௌகரியப்படி 
நான் முன்னர் சொல்லியிருந்த இடங்கனை பார்த்துவிட்டு காட்டின் நடுலே ஏற்பாடு செய்திருந்த இடத்தில் நடைபெறும் ருக்மிணி கல்யாணத்துக்கு வந்துவிடச் 
சொன்னார்.
மொத்தமாக எல்லா இடங்களையும் பார்க்க. ஆட்டோவை ஏற்பாடு செய்து கொண்டு  நதிக்கரையின் அருகிலேயே உள்ள பாகவதம் புராணம் சொன்னதாக சொல்லப்பட்ட இடத்தை அடைந்து, அங்குள்ள ஆலமரம், ஸுதர் ஆலயம், ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டு, சக்கர தீர்த்தத்தில் நீரை எடுத்து ப்ரோக்ஷணம் செய்து கொண்டோம்.
ராம ராவண யுத்தத்தின் போது ராவணன் பாதாள உலகின் அசுரர்கள் அஹி மஹி இருவரைக்கொண்டு ராம லக்ஷ்மணர் இருவரையும் பாதாள உலகத்தில் கொண்டு போய்  வைத்து விடுகிறார்கள். அகத்தியருக்கு விஷயம் தெரிய, அனுமன் உதவியுடன் அஹி மஹி அசுரர்களைக் கொன்று, ராம லக்ஷ்மணன் இருவரையும் தன் தோள்களில் வைத்துக்கொண்டு திரும்புகிறார். இதனை இங்கு தரிசிக்கலாம்.
இவ்வளவு தான் இங்கு  பார்க்க வேண்டியவை.
அதற்குப் பிறகு காட்டின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த ருக்மிணி கல்யாணம் நடைபெறும் இடத்துக்குச் சென்றோம்.
மிகச் சிறந்த முறையில் ருக்மிணி கல்யாணம்  நடத்தப்பட்டு, மதிய சாப்பாடு அங்கேயே அருகில் உள்ள ரங்கநாதர் கோயிலில் முடித்துக்கொண்டு தங்கும் அறைகளுக்குத் திரும்பினோம்.
நாங்கள் அவரவர் ஊர்களுக்கு திரும்ப, அடுத்தநாள் காலை ஆக்ராவில் இருந்து கிளம்ப ரயிலில் செல்ல டிக்கெட் வாங்கி இருந்ததால்,  நிறையப்பேர் என்று பின்னால் தெரிந்து கொண்டோம்,  இரவு ஆகாரதுக்குப் பிறகு பஸ் ரெடியாக இருந்ததால், ஆக்ராவை நோக்கிப் பயணமானோம்.

15 நாட்கள்  போனதே தெரியவில்லை. எத்தனை ஆறுகளில் நீராடீனோம், எத்தனை  கோயில்களை தரிசித்தோம், எத்தனை பேருடன் பழகியிருப்போம். இவையெல்லாம் எப்போ கிடைக்கும்?
மீண்டும் இந்த மாதிரி ஒரு தரிசனம் நம்மால் போகமுடியுமா? அதற்குள் நாம் வயதாகி, வியாதிகள் ஏதும் நம்மை அணுகாமல், ஸ்வாமிகளூடன் அவர்களின் உபன்யாசத்தை  ரசித்துக்கொண்டு செல்ல அந்த அரங்கன் தான் அருள் புரிய வேண்டும்.
பிராத்திப்போம் அவனை!!!!!!


வியாழன், மார்ச் 8

ராமானுஜா அநு யாத்திரை அயோதயா இரண்டாம் பகுதி.

அயோதயா இரண்டாம் பகுதி.
அயோத்தியில் பார்க்கவேண்டிய இடங்கள் அநேகம். அவற்றில் பலவற்றை முந்தைய பகுதியில் பார்த்தோம்.
சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இடம் குப்த்தார் காட் என்ற படித்துறை.15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிலசமயங்களில், கூட யாராவது நம்முடன் வருவதாகச் சொன்னால் தட்டிக் கழிப்போம். ஆனால் ராமன் அப்படியில்லை. தன்னுடைய அந்திம காலம் முடிந்துவிட்டதை உணர்ந்த ராமன் வைகுந்தம ஏகிய இடம் குப்த்தார் காட் ஆகும். தன்னுடன் கூட புல் பூண்டுகளைக்கூட அழைத்துக்கொண்டு ஶ்ரீவைகுந்தம் சென்ற இடம் தான் குப்த்தார்காட் ஆகும்.



ப்படி பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ள அயோத்தி நகருக்கு அலகாபாத்தில் இருந்து காலை வந்து சேர்ந்தோம். அவரவரகளுக்கு ஒகுக்கப்பட்ட அறைகளில் சாமான்களை வைத்தோம். இன்னும் பொழுது விடியவில்லை. நாம் வந்து சேர்ந்த்தை எப்படியோ கண்டு கொண்ட ஆட்டோ ஓட்டுனர்கள், தலா பத்து ரூபாய் என்ற கட்டணத்தில் எட்டு பேரை ஏற்றிக்கொண்டு சரயு ந்திக்கரைக்கு ஸ்நானம் செய்ய அழைத்துச்சென்றனர்.
நீர் சலசலவென ஓடிக்கொண்டு இருந்தது.வண்டல் மண், காலை வைத்ததும் இழுத்தது. ஜாக்கிரதையாக இறங்கி ஆற அமர நீராடினோம்.
இந்த யாத்திரையில் இதுதான் விஷேஷம். அகோபிலத்தில் தொடங்கி நைமிசாரணயத்தில் முடியும் வரை, எங்கெல்லாம் நதி இருக்கிறதோ அங்கெல்லாம் நதிகளில் தான் ஸ்நானம். கோதாவரி, மஹாநதி, பல்குனி நதி, கங்கை, யமுனை, சரஸ்வதி, சரய நதி, கடைசியாக நைமிஸாரணயத்தில கோமதி நதி என பல நதிகளில் நீராடும் பாக்கியம் கிடைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் நான் இருக்கும் காவிரியில் அதிகமாக நீராடமாட்டேன். அதற்கு பிராயசித்தம் தான் போலிருக்கு, இந்த மாதிரி பல நதிகளில் நீராடி பாவத்தை தீரத்தோம் போலிருக்கு???
சரயுவை எங்கள் காமிராவில் வெவ்வேறு கோணங்களில் படமெடுத்துக்கொண்டோம்.
ஸ்வாமிகள் முன்னறே எங்களுக்கு சொன்ன மாதிரி, உடைகளை மாற்றிக்கொண்டு, காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டு, நான் முன்னர் சொன்ன இடங்களை பார்த்து வர தயாரானோம்.
அயோத்தி என்றதும் உங்களுக்கு ஞாபகம் வரவேண்டுமே!
ராம் ஜன்ம பூமி தானே என்று சொல்லத் தோணுதா?
இல்லை, இல்லை!,,
பின்ன என்னய்யா?
ஆஞ்சநேயர், ஆம், குரங்குகள் தான்!!!!
தடுக்கி விழுந்தால் குரங்குகள் மேல தான் விழவேண்டும். இல்லை, இல்லை, குரங்குகள் தான் நம்மை தடுத்து ஆட் கொள்கின்றன.
கொஞ்சம் அசந்தால், நம்ம கையில் உள்ள பொருள் அதன் கைக்கு மாறிவிடும். ஜாக்கிரதை!!!
என்னுடைய நல்ல வேஷ்டியை கிழித்துவிட்டது என்றால் பாரத்துக்கொள்ளுங்கள!!!
இது மாதிரி ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு அனுபவம்.
சரி, விஷயத்துக்கு வருவோம், ஆட்டோவை நாள் வாடகைக்கு பேசிக்கொண்டோம். முதலில் நாங்க போனது ராமனுக்கு கோவில் கட்ட தேவையான அத்தனை தூண்கள், சிற்பங்கள் எல்லாம் தயாராக இருக்கும் இடம். பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமனுக்கு கோயில் கட்டத் தேவையான அத்தனை பொருட்களும் நம்பர் இடப்பட்டு தயாராக உள்ளன. பார்க்க வேண்டிய இடம். உணர்ச்சிகளை தூண்டும் இடம்.


ராம் ஜன்ம பூமி: ராமன் பிறந்த இடம். ஒருவரே உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவு கொண்ட கம்பி கேட்டின் வழியே பலத்த பாதுகாப்பு வளையங்களை மீறி  பல வளைவுகளைக் கடந்து சென்றால் ஓரு கொட்டகையில்
பால ராமர்,  லக்ஷ்மணன் சமேத விக்கிரஹங்கள் அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். பார்க்க கஷ்டமாக உள்ளது. எப்போ கேஸ் முடிந்து கோவில் கட்டப்படுமோ தெரியவில்லை, வேண்டிக்கொண்டோம் கூடிய சீக்கிரம் கோவில் எழும்ப வேண்டும்.
கனக பவன் ஸீதை, ராமனின் அந்தப்புரம் ஸீதை மற்றும் ராமனின் பழைய சிறிய மூர்த்திகளும், சிங்காதனத்தில் பெரிய மூர்த்திகளும் வைக்கப்பட்டுள்ளன.
வால்மீகி பவன் என்ற இடத்தில வால்மீகி ராமாயணம் முழுவதும் சலவைக்கல்லில் எழுதப்பட்டுள்ளது. ராமர், ஸீதை, லக்ஷ்மணன் விக்கிரஹங்கள்வைக்கப்பட்டுள்ளன.
சார் தாம் என்ற இடம், இந்தியாவின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு பகுதி ஆகிய இடங்களின் முக்கியமான கோவிலகளான முறையே பூரி ஜெகன்னாதன், குவாரகா கிருஷ்ணர், ராமேஸ்வரம், கேதாரநாத் ஸ்வாமிகளின் உருவங்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. பார்க்க வேண்டிய இடம்.
ராமன், லக்ஷ்மணன், பரதன், சதருகணன் ஆகியோர் குருவோடு தங்கி படிக்கும் இடம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அம்மாஜி மந்திர் எனப்படும் தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும் கோயிலில் ஶ்ரீரங்கநாதர் போன்ற விக்கிரஹங்கள்வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.
ஏன், அயோத்திய தடுக்கி விழுந்தால் கோயில்கள் தான்.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு ஸ்வாமிகள் கொடுத்த தங்கும் அறைக்கு வந்து, மதிய உணவை ருசி பார்த்தோம்.
மாலையில் ஶ்ரீதா கல்யாணம் மற்றும் ராமர் பட்டாபிஷேகம் ஏற்பாடு செய்து இருந்தார்கள், (அந்த மாதிரி ஒவ்வொரு இடத்திலேயும் அந்தந்த இடத்துக்கு ஏற்ப, அதில் சிறந்து விளங்கும் பண்டிதர்கள் மூலமாக செய்வது, இந்த யாத்திரையில் விஷேஷம்.), அதையும் கண்டு ஆனந்தம் அடைந்தோம்.
அன்று இரவே பெட்டி படுக்கைகள் சகிதம் எங்களின் கடைசி திவ்ய தேசத்தை நோக்கி கிளம்பினோம்.
எந்த ஊர்?

பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!!!





















































ராமானுஜா அனு யாத்திரை ; அயோத்யா.











அயோத்யா.
முக்தி தரும் ஏழு ஷேதர்ஙகளில் முதன்மையானது அயோத்யா.
ஸரயு நதிக்கரையில் அமைக்கப்பட்ட நகரம். அயோத்யா என்றால் தகரக்கவோ, எதிர்க்கவோ முடியாத நகரம் என்று அரத்தமாம்.
ஸூரிய வம்சமான இக்ஷ்வாகு வம்சத்தவர்களின் பரம்பரை ஆண்ட நகரம்.
ராமனின் பிறந்த ஊர்.
ராம் ஜெனம்பூமி என்று இந்துக்களால் பூஜிக்கப்படும் இந்த நகரம் பலவிதங்களில் புகழ் பெற்றது. ராமன் 11000 ஆண்டுகள் இந்நாட்டை ஆண்டு ஶ்ரீவைகுண்டத்துக்கு தன்னுடன் புல், எறும்பு ஆகியவற்றுடன் கூட்டிக்கொண்டு சென்ற ராம் காட் என்ற சரயு நதிக்கரை இங்கு அருகில் உள்ளது. ராமன் 14 ஆண்டு காலம் வனவாசம் இருந்து பின் திரும்பி வரும்போது, பரதனை, அவன் பாதுகைகளை வைத்து அரசாண்ட நந்தி கிராமம் அருகில் தான் உள்ளது.
இங்கு பார்க்க வேண்டிய இடங்கள்.
ராம் ஜென்மம் பூமி. த்ரேதா யுகத்தில் ராமன் அவதரித்ததாக சொல்லப்படும் இடம் ராம் ஜென்மம் பூமி. அங்கு முஸ்லிம் படையெடுப்பின் போது அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டு, பின்னர் அது இந்துக்களால் இடிக்கப்பட்டு, ராமரின் விக்கிரஹங்கள் வைக்கப்பட்டன.
பலத்த பாதுகாப்பு கொண்ட இந்த இடம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
தசரதன், கௌசல்யா ஆகியோருடைய அரண்மனைகள், கைகேயி கோபம் கொண்டு கிடந்த கோப பவனம், ஸீதா ராமர் ஆகியோரின் அந்தப்புரம், தசரதன் புத்ரகாமேஷ்டியாகம் பண்ணிய இடம், லக்ஷ்மணன் சரயு நதிக்கரையில் இருந்து வைகுண்டம் நோக்கி புறப்பட்ட லக்ஷ்மணன் காட் என்ற படித்துரை, சரயு நதிக்கரையில் தசரதனுக்கு அந்திம காரியங்கள் செய்யப்பட்ட தசரத தீர்த்தம், வால்மீகி பவன் என்ற வால்மீகி ராமாயணத்தின் 24000 ஸ்லோகங்கள் எழுதப்பட்ட வால்மீகி பவன், 60 படிகள் உயரத்தில் அமைக்கப்பட்ட ஹனுமான் கடி என்ற உயரமான இடம், முக்கியமான, இவைகளுக்கு எல்லாம் சாட்சியாக சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் சரயு நதி, தென்னிந்திய பெண் அம்மாஜி என்று அன்பாக அழைக்கப்பட்ட பெண்ணால் அமைக்கப்பட்ட அம்மாஜி மந்திர், ஜனகர் தன் மகள் ஸீதைக்கு ஸீதனமாக வழங்கப்பட்ட மலை மேல அமைந்த கோயில் ஆகியவை அயோத்தியில் பார்க்கப்பட வேண்டிய இடங்கள்.
இதைத்தவிர அயோத்திக்கு 25 கி.மீ. தொலைவில் அலகாபாத் மாரக்கத்தில் அமைந்துள்ள முக்கியமான இடம் நந்தி கிராமம் என்ற அழகிய கிராமம்.

என்ன முக்கியம் இந்த இடத்தில?
ராமன், ஸீதை, லக்ஷ்மணன் ஆகியோர் அயோத்தியில் இருந்து 14 வருஷம் காட்டுக்கு கிளம்பி குகன் உதவியால் கங்கையைக் கடந்து சிருங்கிபேரபுரம் என்ற இடத்தில இருக்கிறார்கள். தன் மாமா வீட்டில் இருக்கும் பரதனுக்கு இந்த விஷயம் தெரிகிறது. கோபம் கொண்ட பரதன் தன் தாயிடம் கோபமாக பேசிவிட்டு காட்டுக்குச் சென்ற ராமனிடம் மீண்டும் ராஜ்ஜியம் ஏற்றுக்கொள்ள மன்றடுகிறான். எவ்வளவு சொல்லியும் ராமன் கேடகாத்தால், கடைசியில் “உன்னுடைய பாதுகைகளையாவது கொடு அவற்றை வைத்து ராஜ்ய பரிபாலனம் செய்கிறேன், தவறாமல் 14 ஆண்டுகள் முடிந்தவுடன் ராஜ்யத்தை பெற்றுக்கொள்ள வந்துவிடவேண்டும், இல்லையேல், அடுத்த நிமிஷமே தீ மூட்டி அதில் ஆதம தியாகம் செய்து கொண்டுவிடுவேன்” என்று ராமனிடம் பரதன் கூறி ராமனின் பாதுகைகளை எடுத்துச் சென்று அயோத்தி செல்லாமல் முன்னதாகவே உள்ள நந்திகிராமத்தில் பாதுகைகளை வைத்து ராஜ்ய பரிபாலனம் செய்கிறான் சரியா 14 ஆண்டுகள் ஆனதுடன் ராமன் வராததால் நந்தி கிராமத்தில் ஆத்ம தியாகம் செய்ய தீ மூட்டுகிறான் பரதன்.
பரதன் இந்த மாதிரி ஏதாவது செய்வான் என்று முன்கூட்டியே அறிந்த ராமன், 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்த ராமன, நடுவில் பரத்வாஜ் ஆஸ்ரமத்தில் காலதாமதம் ஆனதால் அனுமனை முன்னதாக அனுப்புகிறான்.
அனுமனும் வேகமாக கிளம்பி நந்தி கிராமத்துக்கு வந்து பரதனை சந்தித்து ஆரத்தழுவி விஷயத்தைக் கூறி ஆத்ம தியாகத்தை தடுத்து நிறுத்துகிறார்.
இன்னமும் நந்தி கிராமத்தில் இவர்கள் இருவரும் ஆரத்தழுவிக் கொள்ளும் காட்சி சிலை வடிவில் உள்ளது. அது மட்டுமல்ல, ராமனின் பாதுகைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
அயோத்திக்கு செல்லும் போது நந்தி கிராமத்தை பாரக்கத் தவராதீர்கள்.
அது மாதிரி இன்னொரு இடம்!!!
பார்ப்போம் அடுத்த பகுதியில்.

திங்கள், பிப்ரவரி 26

ராமானுஜா அநு யாத்திரை அலகாபாத் திரிவேணி சங்கமம்.


அலகாபாத் திரிவேணி சங்கமம்.









கங்கை, யமுனை, ஸரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கம்மாகும் இடம் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம். ப்ரயாக் என்றும் அழைக்கப்படுகிறது .ஶ்ரீமஹாலக்‌ஷ்மியின் மூன்று பின்னல்கள் தான் திரிவேணி சங்கமம் ஆகும். இதில் கங்கை, யமுனை ஆறுகள் கலப்பது நன்கு தெரியும். ஸரஸ்வதி நதி கலப்பது தெரியாது, அதாவது உள்ளுக்குள் கலப்பாக ஐதீகம். எனவே இவ்வாறு கலக்கும் இடத்தில ஸ்நானம் செய்வது மிக நல்லது என்பதால், எல்லோரும் ஒரு படகை ஏற்பாடு செய்து கொண்டு மூன்று நதிகள் கங்கமம் ஆகும் இடத்திற்கு சென்று படகில் இருந்து இறங்கி குளிப்பார்கள். இது ஒரு ஆனந்த அனுபவம்.
காசியில் இருந்து புறப்பட்டு விடியற்காலை அலகாபாத் வந்து சேர்ந்தோம். நேராக கங்கைக் கரைக்கே சென்று எல்லோரும் குழுக்களாக படகை ஏற்பாடு செய்து கொண்டு, மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்துக்குச் சென்று, முழங்கால் அளவு மட்டுமே இருந்த சங்கமித்த இடத்தில் நீராடினோம்.
போகின்ற வழியில் படகை இலக்காக கொண்டு நீர் காக்கைகள் அதிக அளவில் பறந்து சுற்றி சுற்றி வருகின்றன. அவைகளுக்கு யாத்திரிகரகள் காராஷேவ் வாங்கி தூவுகின்றனர். அவைகள் பறப்பது பார்க்க அழகாக இருக்கிறது.

அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தை தவிர அதன் அருகியே உள்ளது அக்ஷ்ய வடம் என்று சொல்லப்படும் ஆலமரம். இதன் இலையில் தான் ப்ரளயத்தின் போது பால முகுந்தனாக பகவான் சயனித்தாராம். இது ஒரு அழியாத ஆலமரம்.
அடுத்து முக்கியமான சன்னிதி வேணி மாதவன் சன்னிதி.
காட்டுக்கு புறப்பட்ட ராமன், ஸீதை, லக்ஷ்மணன் ஆகியோர் குகனின் இருப்பிடமான சிருங்கிபேரபுரம் வந்தனர். குகனின் ஓடத்தில் ஏறி கங்கைக் கரையைக் கடந்து இன்று பிரயாகை இருக்கும் இடத்துக்கு வந்தனர். இங்குள்ள பரத்வாஜ் ஆஸ்ரமத்துக்கு வந்தனர். அவருடைய வழிகாட்டுதல் பேரில் சித்திரக்கூடத்தை நோக்கி புறப்பட்டனராம்.
அந்த பரத்வாஜ் ஆஸ்ரமம் கங்கைக் கரையில் உள்ளது. அதனையும்  தரிசித்துக்கொண்டோம்.
அலகாபாத்தில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய. நேரம் இல்லாதது ஒரு காரணம். ஆகாரத்தை முடித்துக்கொண்டு அடுத்த திவ்ய தேசத்தை நோக்கி பயணப்பட்டோம்.